”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

உலக மயம் முதல் உள்ளுர் மயம்

இன்றைய கால முதலாளித்துவ வளர்ச்சிதான் “உலகமயமாக்கல்” அதன் செயல்முறையினை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
“ஏகாதிபத்தியத்திற்கு தேசம் என்றும் தேசபக்தி என்றும் எதும் கிடையாது. லாபம் கிடைக்கும் என்றால் தேச எல்லைகள் கடந்து கொள்ளையடிக்கும்” என்றனர் காரல் மார்க்°-ம், மாமேதை லெனினும்..
மார்க்° தனது மூலதனத்தில் “முதலாளித்துவம் வளர்ச்சி அடையும் போது சிலரது கரங்களில் மூலதனம் குவிவதற்கும் மையப்படுவதற்கும் இட்டுச் செல்கிறது.”என்றார். இன்றைய சூழலில் இந்த முதலாளித்துவ விதியின் காரணமாக பிரமாண்டமான அளவில் மூலதனம் குறிப்பிட்ட இடத்தில் குவிந்து விடுகிறது. இது லாபம் ஈட்டுவதற்காக தனது பயணத்தை தொடர வேண்டியுள்ளது. இந்த பயணம் காரணமாக முதலாளித்துவ அமைப்பு முறை தொடர்ந்து நீடிக்கிறது.
1980 களில் நிதி மூலதனத்தின் குவிமையமும், வளர்ச்சியும் பிரமாண்டமாக இருந்தது. இது 1990 களில் சர்வதேசமயமானது. இதன் வளர்ச்சி என்பது கற்பனை செய்ய முடியாத வகையில் இருந்தது. 1993ல் உலக பங்கு சந்தையில் 20 டிரில்லியன் டாலர் புழங்கியது. ( ஒரு டிரில்லியன் = லட்சம் கோடி ) இது 2001ல் 400 டிரில்லியனாக அசுரமாக விரிவடைந்து வளர்ந்தது. இதன் அடிப்படை ஊக வணிக முறையாகும். இந்த மிகப்பெரிய நிதி மூலதனத்திற்கு தங்கு தடையற்ற, எல்லைகளற்ற இயக்கத்தை அனுமதிக்கும் ஒரு உலக அமைப்பு முறை தேவைப்பட்டது. அது தான் உலகமயமாக்கல் நடவடிக்கையின் அடிப்படையாகும்.
இந்த உலகமயமாக்கல் காலத்தில் தான் உலகில் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது.
1. சோசலிச, முதலாளித்துவ முகாம் என இரு துருவமாக இருந்த உலகில் சோசலிச முகாம்களில் ஏற்பட்ட பின்னடைவு, ஏகாதிபத்திய அமெரிக்காவை ஏக போக ஒரு துருவமாக வளர உதவி செய்தது.
2. 2001, செப்-11 இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதையொட்டி பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற முழக்கத்தை ஏற்படுத்தி ஆப்கான், இராக் உள்ளிட்ட நாடுகளின் மீது இராணுவ ரீதியான தாக்குதல் உட்பட சென்றது.
3. மூன்றாம் உலக நாடுகளை பொருளாதார ரீதியாக மறுகாலனியாத்திக்கத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை.
4. அறிவியல்,தகவல் தொழிட்நுட்ப வளர்ச்சியினை தனது லாபவேட்கைக்கு பயன்படுத்திக் கொள்ளுவது. இது மனித சமூகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு என்பதற்கு பதிலாக முதலாளித்துவ வளர்ச்சிக்கென நடைபெற்றது..
உலகமயமும்( ழுடுடீக்ஷஹடுஐகூலு) உள்ளூர் மயம் ( டுடீஊஹடுஐகூலு) இரண்டும் ஒரு நேர்கோட்டின் இரண்டு துருவங்களாக உள்ளன. உலகமயத்தின் ஒவ்வொரு பாதிப்பும் உள்ளுரின் தனி மனிதர்களையும் பாதிக்கிறது. உலகமயத்தின் லாப வெறியின் சுரண்டல் ஒவ்வொரு தனிநபரையும் குறிவைத்து செயல்படுவதில் துவங்குகிறது.
உலகமயத்தின் ஆரம்ப கட்டம் முதலாளித்துவம். இது குறிப்பிட்ட தேதியில் துவங்கியதல்ல.. 10 கோடி மக்கள் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா சென்றனர். பூர்விக அமெரிக்க மக்களின் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவில் இதன் ஆரம்ப கட்டம் 1500-1840 வா°கோடாகாமா வருகையின் போது துவங்கியது. இர்பான்ஹபீப் என்ற இந்திய வரலாற்றிசிரியர் எழுதிய நுhலில் முகலாயர் காலத்தில் பிரிட்டி° இந்தியாவின் ஆரம்ப கால கட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு பணம் முதலீடு செய்யப்பட்டது. இந்தியாவிற்கான கடல் வழி பாதை கண்டுபிடிப்பு காரணமாக
- கிழக்கிந்திய கம்பெனி, டச்சு, போர்த்து கீசியர்கள், பிராஞ்சு கம்பெனிகளின் வருகைகளும் வணிக தேடல்களும், அனுமதியும். 1600 முதல் 1857 வரையிலான கிழக்கிந்திய கம்பெனி வர்த்தக ரீதியான கொள்ளையும் நடந்தது.
- 1813 வரை இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாகவே இருந்து வந்துள்ளது.
- பிரிட்டிஸ் காலனி ஆட்சியில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறிப்போனது.
- பண்டைய இந்தியாவின் பொருளாதாரத்தின் அடிப்படை விவசாயம் ஆகும்.
- கடல் வழி வாணிபம், கிராமப்புறத் தொழில்கள், அறிவியல், வானவியல், சுரங்கத் தொழில், உலோகவியல், கலை மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி, இலக்கியம், பண்பாடு வளர்ந்திருந்தது.
- நீலச்சாயம், ஏலம், கிராம்பு, மிளகு, முத்துக்கள், விலையுயர்ந்த கற்கள், தந்தம், சந்தனம், தங்கம், இரத்தின கற்கள், மஸ்லீன் துணி, கஸ்துhரி, குங்குமப்பூ, போன்றவை ஏற்றுமதியும், உலோகம், தங்கம், பவளம், வைரம், வெள்ளி, குதிரைகள் இறக்குமதியும் செய்யப்பட்டது.
- கிராம சமூகம் என்பது பல நுhற்றாண்டுகளாக நீடித்து வந்துள்ளது. அடித்தட்டில் இருந்த கிராமப்புற விவசாயிகள், கூலியாட்கள் நிறுவனமயமாகிப்போன சாதீய அமைப்பு முறையினால் சுரண்டப்பட்டுவந்தனர். 6,7 நுhற்றாண்டு காலத்தில் இது கெட்டிபட்ட அமைப்பாக மாறியது.
- இந்த சாதிய அமைப்பு முறை பரிமாண வளர்ச்சி பெற்று பல மாறுதல்களை சந்தித்தது. கீழ் சாதி மேல் சாதியானது. மேல்சாதி கீழ் சாதியானது. ஒரு அம்சம் நீடித்தது. ஆளும் வர்க்கத்தின் நல்ல கருவியாக சாதிய அமைப்பு முறை பயன்பட்டுள்ளது.
- 19ம் நுhற்றாண்டின் துவக்கத்தில் பிராமண ஆதிக்கம் பண்பாட்டுதளத்திலும், அரசு பணிகளிலும் அதிகரித்தது. இதை எதிர்த்து மகாராஷ்டிராவில் ஜோதிபா பூலே 1872ல் குலாம்கிரி என்ற நுhலை எழுதினார். 1873ல் சத்ய ஷோதக் சமாஜ் அமைப்பை நிறுவினார். ஜோதிபா பூலே தோட்ட வேலை செய்யும் மாலி என்ற சாதிப்பிரிவைச் சேர்ந்தவர். இவரது நுhலும், அமைப்பும் விவசாயிகளை அதிகம் கொண்ட மராத்தா சாதித் தொகுப்பினரை கவ்வி பிடித்தது.
- கேரளத்தில் ஈழவ மக்கள் நானு ஆசான் என அழைக்கும் ஸ்ரீ நாராயணகுருவின்( 1854-1928) போதனைகளால் எழுச்சி பெற்றனர். இவர்கள் பிற்காலத்தில் கம்யூனிச ஆதரவாளர்களாக மாறினர்.
- வங்காளத்தில் பிறந்த ராஜாராம் மோகன்ராய் சமூக சீர்திருத்தவாதி எனலாம்.குடும்பச் சொத்தில் பெண்களுக்கு பங்கு, விதவை மறுமணத்துக்கான தடை, உடன்கட்டை ஏறுதல், பலதாரமண முறை, பெண்கல்விக்கு எதிரானகட்டுப்பாடு, பர்தா அணிவித்து வீட்டில் பூட்டி வைப்பது போன்றவற்றை எதிர்த்து போராடியதோடு இவைகளை சட்டபூர்வமான முறையில் தடைசெய்ய வேண்டும் என்றார். சாதிய அமைப்புமுறையை ஒழித்துகட்ட வேண்டும் என்றார்.
- கிழக்கிந்திய கம்பெனியின் லாப வேட்கை, அடக்குமுறையை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகளின் கிளர்ச்சி நடைபெற்று வந்தது.
- 18ம் நுhற்றாண்டில் நடைபெற்ற சன்யாசிகள் மற்றும் பக்கிரிகளின் கலகங்கள்(1776), கிழக்கிந்தியாவில் பழங்குடியினர் நடத்திய சுவார் கலகம்(1799). இந்த போராட்டங்களுக்கு அடிப்படை பஞ்சமும் அதையொட்டி மக்கள் இறந்ததும். ஆனால் ஆட்சியாளர்கள் வரி வசூலில் மும்மரமாக இருந்தனர்.
- பல நேரங்களில் உடனடி கோரிக்கைக்காக நடைபெற்ற போராட்டங்கள் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களாக மாறின. இவைகள் ஸ்தாபனபடுத்தப்படாமல் நடத்தப்பட்டன. இலக்கு தீர்மானிக்கப்படாமல் நடைபெற்றது. குறிப்பிட்ட சமூகப் பிரிவினாரால் நடத்தப்பட்டது.
- இந்த போராட்டங்கள் சில வெற்றிகளையும் பெற்றுத்தந்தன. 1859-1860 அவுரி விவசாயிகள் கிளர்ச்சி, பம்பாய் தக்காண கலவரங்கள் காரணமாக விவசாயிகளின் நிலையை மேம்படுத்த திட்டமிட வேண்டிய நிர்பந்தத்தை பிரிட்டிஸாருக்கு ஏற்படுத்தியது.( தற்போது ரேசன்கார்டு, சுகாதாரம், கல்வி, அடிப்படை வசதி கோரிக்கைகளுக்கு பின்னால் முதலாளித்துவ, ஏகாதிபத்திய எதிர்ப்பு அடங்கியுள்ளது. )
3வது உலக நாடுகள் வளர்ச்சி என்பது பெரும் முதலீடுகளில் தொழிற்புரட்சி, தொழிற்சாலைகள் உருவாக்கம் புதிய சந்தை உருவாக்கம் இவைகளின் லாபம் வெளியேறவும், புதிய முதலீடுகளுக்கு காலனியாத்திக்கம் துவக்கம் என நடைபெற்றது.
முதலாவது கட்டத்தில் முதலீடுகள் தொழிற்சாலைகளாக இருந்தது. புதிய பகுதிகளை உருவாக்கியது.
இரண்டாவது கட்டத்தில் 1840-1890 புதிய உற்பத்திமுறை, வர்த்தகம் என வளர்ந்தது. சுதந்திர வர்த்தகம், புதிய உற்பத்தி உறவுகளில் முன்னேற்றம் அடைந்தது.
மூன்றாவது கட்டம் 1890-1950 ல் மூலதனம் ஏகபோகமாக மாறுதல், மூலதனம் வெளியேறுதல், புதிய பகுதிகளுக்கு தாவுதல், காலனியாதிக்கத்தில் ஏகாதிபத்தியம் தனது வலையை விரிவுபடுத்தியது.
மூம்பை, கோவை போன்ற பகுதிகளில் (மில்) தொழிற்சாலைகள் உருவாக்கம். புதிய தொழில்நுட்பம், புதிய தொழிற்சாலைகள் உருவாக்கம், இதே கால கட்டத்தில் விடுதலை இயக்கங்களின் வளர்ச்சி.. காலனியாதிக்க நாடுகளின் விடுதலைப் போராட்டம் வேகமடைந்தது.
புதிய காலனி ஆதிக்கத்தில் ஏகாதிபத்தியம் 1950-1995ல் அரசியல் அதிகாரத்தை கொண்டு சுரண்டுவது. யுத்தத்திற்கு பின் இக்காலத்தில் தொழில் மந்தம் ஏற்பட்டது. வளர்ச்சியும் ஏற்பட்டது. பட்டியலை பார்க்கலாம்.
1800களில் 23000 கோடி உலக உற்பத்தி இருந்தது. இதில் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பங்கு 44 சதம். உலக மக்கள் தொகை 94 கோடி ஆகும். ஆனால் 150 ஆண்டுகளில் 1950ல் 2,63,000 கோடி உற்பத்தி ஆனது. இதில் 17 சதம் மட்டுமே வளர்ச்சி அடைந்த நாடுகளின் பங்கு. 242 கோடி மக்கள் இருந்தனர்.
ரயில்வே, தொழிற்சாலை, புதிய தொழில்நுட்பம் என வந்தன. ஆனால் வளர்ச்சி யாருக்கு சென்றது. உண்iயில் வறுமையில் இறந்தவர் எண்ணிக்கை அதிகம். ஒட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி பார்த்தால்
1950-1973 = 4.9 சதம்
1973-1992 = 3.0 சதம்
1990 -2001 = 2.7 சதம் தேக்கத்தில் இருந்தது.
முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்துள்ளது. என்றால் உற்பத்தி அதிகரிப்பு அனைவருக்குமானதாக என்றால் இல்லை? ஜிடிபி யில் வளர்ச்சி விகிதம் குறைவு.. நிலக்கரி, இரும்பு, இதர தாது உற்பத்தி அதிகரித்துள்ளது. உலக யுத்ததிற்கு பின் வளர்ச்சியில் ஆட்டோமொபைல்°, அணுசக்தி, பெட்ரோல், எண்ணெய் வளம் வளர்ந்துள்ளது. ஆனால் பெட்ரோலிய விலை உயர்வு எதனால்?. உலக தேவைக்கான உற்பத்தி இல்லை.
புதிய தொழிற்புரட்சி.. தகவல் தொழில்நுட்பம், செல்போன் நம்முடைய வாழ்க்கைமுறையை மாற்றிவிட்டது. தொழில் நுட்பம் மிக வேகமாக வளருகிறது. பெரிய திரைகட்டி கம்யூட்டரில் கணக்கு போடுவது, அணு வெடி சோதனைக்கு சின்ன கணிபொறியில் பெரிய கணக்கை போடலாம். அறிவு சார்ந்த வளர்ச்சி ஏற்படுகிறது. அது பொருள் சார்ந்து இல்லை.
ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு சொந்தக்காரர்கள் யார்? யார் கட்டுப்படுகிறார்கள். புதிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உயிரி தொழில்நுட்பம் இவைகள் யாருக்கு பயன்படுகிறது. அறிவு ரீதியான வளர்ச்சி என்பது உற்பத்தியின் மீதான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இது உற்பத்தியின் மீதான தனது கட்டுப்பாட்டை உருவாக்குகிறது. அறிவு சொத்துடைமை மீதான கட்டுப்பாடுகள், உரிமைகள் இவை அனைத்தையும் மாற்றுகிறது. மூலதனம் தேசம் விட்டு தேசம் பறக்கிறது. நகருகிறது. இது நம்மை சர்வதேச நிலைகளில் ஏகாதிபத்தியம் கட்டுப்படுத்த உதவுகிறது. இரண்டாவது முக்கியமான விசயம் காட். நாம் நம்முடைய சொந்த கண்டுபிடிப்புகளை செய்தோம். பாதுகாத்தோம். உலக வர்த்தக அமைப்பு பெயரால் காட் ன் வழியாக அனைத்தையும் ஒருங்கிணைத்து சுரண்டும் ஏற்பாடு அமெரிக்கா செய்தது.
1. வர்த்தகதடையை நீக்குவது, 2. திறந்தவெளி இறக்குமதிவரியை குறைப்பது, 3.கட்டுப்பாடற்ற விற்பனையை அனுமதிப்பது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமான உற்பத்தி என்பது அமெரிக்க கம்பெனிகளை சார்ந்து அமைந்தது. அதே நேரத்தில் அது பல கம்பெனிகளை இணைத்துக் கொள்கிறது.
உலகமயச்சூழலில் சுதந்திரமான பரிவர்த்தனை, உயர் தொழில்நுட்ப உலகமயம் ( ழஐகூநுஊழ ழுடுடீக்ஷஹடு ஹளுளுநுஆக்ஷடுலு ) அபரிமிதமான வளர்ச்சியை உருவாக்கியுள்ளது. 1960, 70, 80 களில் இருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது.
1998ல் பெரும் 10 கம்பெனிகளின் மதிப்பு 85 சதம். உலக சந்தையில் தகவல் தொழில்நுட்பத்தில் 86 சதம் இவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
1970 களில் 7000 அமெரிக்க கம்பெனிகள் இருந்தது. இன்று 2,80,000 இணைக்கப்பட்ட கம்பெனிகள் உள்ளிட்டு 44,000 பெரும் நிறுவனங்களாக வி°வ ரூபமெடுத்துள்ளது.
ஒட்டு மொத்த உலக உற்பத்தியை விஞ்சும் வகையில் 200 கம்பெனிகளின் லாபம் மற்றும் மதிப்புகள் உள்ளது. 49 நாடுகளில் உள்ள 51 முதல் 100 கம்பெனிகளில் உள்ளது. உதாரணம் வால்மார்ட்
உற்பத்தியும் மூலதனமும் உயர்ந்துள்ளது. தொழிலாளர் சந்தை குறைந்துள்ளது. வேலையின்மை அதிகரிப்பு. இந்த வளர்ச்சிகள் பங்கு சந்தையை அடிப்படையாக கொண்டுள்ளது. வாங்க விற்க என பங்கு சந்தைகள் நடக்கிறது. கம்யூட்டர்கள் இந்த பணியை செய்கிறது. அமெரிக்க கம்பெனிகளின் நிலையை பொறுத்து பரிவர்த்தனை நடக்கிறது.
நிதி மூலதனம் இவற்றில் விற்பனை 440 சதம், பங்கு சந்தை மூலம் 970 சதம், அந்நிய செலவாணி மூலம் 2110 சதம் என பரிவர்த்தனைகள் பணக் காகிதங்களில் நடைபெறுகிறது. உதாரணம் ரியல் எ°டேட் தொழில். இது உற்பத்தி சார்ந்தல்ல.. இவர்கள் சிறிய புரோக்கர்கள். இதன் சர்வதேச புரோக்கர்களின் நிலை வேறு.. இது சூதாட்டத்தின் ஒரு பகுதி எனலாம். தினசரி லட்டாரி சீட்டு போன்றது. இவற்றில் அரசின் பங்கை குறைப்பது. தனியார் மயத்தை முழுமைப்படுத்துவது.
நம்முடைய இந்தியாவில் பெரும் பகுதியான மக்கள் ஏழைகள். ஆடம்பர சாதனங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்பட்டது. ஒரு பகுதி இந்தியர்கள் வாங்கும் சக்தி இருந்தது. கடன் வாங்கி கூட வாங்குகிறார்கள். நம்முடைய இறக்கமதிக்கு இருந்த ஏராளமான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. உதாரணம் ரூபாய் மதிப்பு குறைப்பு..
அந்நிய செலவாணி வருகிறது அதனால்.. நிலசீர்திருத்தம், வங்கி சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்றால் அது உலக நிதி மூலதனத்திற்கு சாதகமாக செய்கிறார்கள். அமைப்பு ரீதியாக சரி செய்வது ( ளவசரஉவரசயட யனதரளவஅநவே) வங்கி, எல்ஐசி, தொழிலாளர் நலச் சட்டங்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள் உட்பட பலவற்றை அமைப்பு ரீதியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவது. இது அந்நிய செலவாணியை ஈர்க்க பயன்படும் என்கிறார்கள்.
ஏழை, ஏழையாகிறான்.. பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். தொழில் மற்றும் விவசாயத்தில் சீர்திருத்தம் என்கின்றனர். பெரும் பகுதியான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். விவசாயத்தை நம்பி உள்ளனர். வறுமை, பட்டினி, விவசாயிகள் தற்கொலை என தொடர்கிறது.
நம்முடைய பொருளாதாரம் அந்நிய மூலதனத்தை நம்பி உருவாக்கப்படுகிறது. பங்கு சந்தை சரிந்துள்ளது. அனைத்து தொழில்களிலும் சரிவை சந்திக்கும் நிலை.. விவசாய நெருக்கடி உள்ளது. சர்வதேச அளவில் நகர கிராமப்புற பகுதிகளிடையே வறுமை ஏற்றத்தாழ்வாக உள்ளது.
பணக்காரர் - ஏழை ( மேல் 20ம், கீழ் 20 ) மேல் 20 கீழ் 20
மொத்த உற்பத்தி வளர்ச்சி 80 1
ஏற்றுமதி 82 1
மூதலிடு 68 1
தொலைபேசி 74 1.5
தனிநபர் வருமானம் 1960யை அடிப்படையாக கொண்டு 30 1
தனிநபர் வருமானம் 1997யை அடிப்படையாக கொண்டு 74 1
நாம் ஏகாதிபத்திய உலகமயமாக்கலை எதிர்க்க வேண்டும். இன்றைக்கு ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டமும் அதிகரிக்கிறது. ஆப்கானி°தான் மற்றும் மேற்கு ஆசியா, சீன மற்றும் சோசலிச நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடது சாரிகள் வெற்றி என்பது நம்பிக்கை அளிக்கிறது.
பிரான்சில் பாரீ° கம்யூனில் புரட்சி 70 நாட்கள் வெற்றி பெற்றது.லெனின் 1917 ல் ரஷ்ய புரட்சியின் போது சொன்னது. பாரீ° கம்யூனின் 70 நாள் வெற்றி ஒரு படிப்பினை.. அதனை கற்றறிய வேண்டும் என்றார். அதனால் 70 ஆண்டுகள் ரஷ்யாவில் புரட்சியை பாதுகாக்க முடிந்தது. இன்றைக்கு உலகம் முழுவதும் நடைபெற்ற புரட்சிகளை பற்றி கற்றறிய வேண்டும். 500 ஆண்டுகள் வரலாறு உடைய முதலாளித்துவத்தை ஆழமாக படித்தறிய வேண்டும். இதன் அடிப்படையை கண்டறிய வேண்டும். மக்களை சுரண்டும் உலகமயமாக்கலை எளிதாக மாற்ற முடியாது. உலக புரட்சிகர நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இதற்கெதிராக உறுதியாக போராடும் இடதுசாரி ஜனநாயக சக்திகளை நம்முடைய தேசத்தில் நாம் வளர்தெடுக்க வேண்டும்.
28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 1618 மொழிகள், 6400 சாதிகள், 6 மிகப்பெரிய மதங்கள், தனித்துவமிக்க 6 இனக்குழுக்கள், பெரிய அளவிலான 29 வகையான மதப்பண்டிகைகள் என இந்திய தேசம் இன்று வேற்றுமையிலும் ஒற்றுமையாக உலக அரங்கில் முன்னேறி கொண்டு இருக்கிறது. ஆனால் இதற்கேற்றாற்போல் உழைப்பு சக்திகளின் வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சியோடு இணைந்து நிற்கிறாதா? என்றால் இல்லை எனலாம்…
அரசின் தவறான பொருளாதார கொள்கையின் விளைவாக இந்திய விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இன்றைய இளைய தலைமுறை விவசாயத்தின் மீதான பிடிமானத்தை கைவிட்டு நகரப்புறங்களை நோக்கி இடம் பெயர்வது மிக வேகமாக நடைபெறுகிறது.. ஒளிரும் இந்தியா என மத்திய தர மக்களின் வாழ்க்கையை மட்டும் காண்பித்து, ஒளிராத ஒட்டுமொத்த இந்தியாவின் நிலையை 43 சதம் கல்வியறிவு இல்லாத இந்திய பாமரர்களை பற்றி, ஒரு நேரம் உணவில்லாமல் உறங்க செல்லும் 20 கோடி மக்களை பற்றி,, சுத்தமான குடிநீர் வசதி இல்லாத 70 சத கிராமப்புற மக்களை பற்றி மூடி மறைக்கப் பார்க்கிறது ஊடகங்கள்..
நாடு விடுதலையடைந்து 62 ஆண்டுகளுக்கு பின்னால் கிராமப்புற மற்றும் நகர்புறத்தில் அடித்தட்டில் உள்ள கோடானுகோடி இளைஞர்களை உலகமய நுகர்வியமும், ஊடகங்களும், ஆட்சியாளர்களின் கொள்கைகளும் தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது.
90 சதமான இளைஞர்களின் வாழ்க்கை நிலையை ஒளித்து வைத்துவிட்டு குறிப்பிட்ட 0.01 சத பணக்கார இளைஞர்களின் வாழ்க்கையை இந்திய இளைஞர்களின் ஒளிரும் வாழ்க்கை நிலைதான் இந்திய இளைஞர்களின் வாழ்க்கை நிலை என ஊதிக்கொண்டே இருக்கிறது.. இவைகளின் வஞ்சகத்தை, குள்ளநரித்தனத்தை தோலுரித்துக்காட்ட வேண்டியது இன்றைய இளைஞர்களின் கடமையாகும்..
இன்றைய உலகமயச்சூழலில் இளைஞர்களை ஆழமாக ஆட்கொண்டு இருப்பது “விரும்பிய வாழ்க்கை பெறுவதற்கு,.. எதுவும் செய்யலாம்.. சுயமுன்னேற்றம், சுயபுகழ், உன்னைப்பற்றி மட்டுமே சிந்தி,.. அடுத்தவன் வாழ்க்கையை அவன் பார்த்துக் கொள்வான்.” என உலகமயம் நுகர்வியத்தை அடிப்படையாக கொண்டு தொடர்ந்து மூளையை சலவை செய்து கொண்டு இருக்கிறது.
இதனால் இளைஞர்கள் தன்னுடைய வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றவாறு சுயநலத்தை முன்னிறுத்தி எப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தாலும் முன்னேறு என சொல்லும் தொலைகாட்சி தொடர்களும், நிகழ்ச்சிகளும்..
மறுபுறம் ஒரு பகுதி விளையாட்டுவீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என மிகப் பெரிய பட்டாளம் பெரும் பன்னாட்டு கொள்ளைக்கார நிறுவனங்களுக்கு ஆதரவாக விளம்பரம் என்ற பெயரால் இளைஞர்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் நடவடிக்கையை தொடர்ந்து செய்து வருகிறார்கள்..
உலகளாவிய அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது லாப வெறி காரணமாக தன்னுடைய ஏகபோக வளர்ச்சியை, செல்வாக்கை விஸ்தரிக்கும் நடவடிக்கையை தொடரும் வகையில் இன்று பல நாடுகளில் தொழில், நிதி, சந்தை, தகவல்தொடர்பு, அழிவுக்கான ஆயுதங்கள் தயாரிப்பு என தனது வலையை அனைத்து தளங்களிலும் விரிக்கிறது.
“உலகமயமாக்கலின் தற்போதைய கட்டத்தின் அடிப்படையான அம்சம் என்பது மூலதனத்தின் செயல்பாட்டின் மீதுள்ள தடைகளை நீக்குவதன் மூலம் அதிகபட்ச லாபத்தை ஈட்டுவதற்கான வெறித்தனமான முயற்சியே ஆகும். இதுதான் ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் முக்கியமான தன்மையாகும்”..
இதில் கோடிக்கணக்கான படித்த திறமை மிக்க தொழில்நுட்ப அறிவுபடைத்த இளைஞர்களை கொண்ட பெரிய பட்டாளத்தின் மத்தியில் சில லட்சக்கணக்கான இளைஞர்களை மட்டும் அவுட் சோர்சிங் முறையில் மேற்கண்ட தளங்களில் பயன்படுத்துகிறது. இதர படித்த இளைஞர்களை ஏக்கத்திற்குரியவர்களாக தொடர்ந்து வேலையில்லா படையில் சேர்த்துவிட்டு வேடிக்கை பார்க்க வைக்கிறது. ஏதாவது ஒரு வேலை எப்போது கிடைக்கும் என ஏங்கி இருக்கும் இந்த இளைஞர்கள் மத்தியில் தன்னுடைய லாப வெறிக்காக பல்வேறு சாகசங்களை ஏகபோக நிறுவனங்கள் செய்து வருகின்றன.
உதாரணத்திற்கு, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, ஐடிபிஐ, கோடாக் மகேந்திரா, போன்ற வங்கிகள் தற்போது வாகனம் வாங்க கடன், வீட்டுக் கடன், தனிமனித கடன் என கொடுக்கிறது. கடனை, வட்டியை, அசலை திருப்பி செலுத்த கால தாமதம் செய்யும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பொருள்களை மீட்டு வர ஒரு கூலிப்பட்டளத்தை உருவாக்கி வருகிறது. அந்த கூலி பட்டாளத்திற்கு தற்போது விற்பனைக்கு சேல்ஸ்எக்ஸ்கியூடிவ், டெலிகாலர், டீம் மேனேஜர், ஒருங்கிணைப்பாளர், வசூலிப்பதற்கு, கடன் கொடுப்பதற்கு என பல பிரிவுகளில் எம்பிஏ, எம்சிஏ, எம்காம், எம்எஸ்சி, எம்எப்டி, பிகாம் உள்ளிட்ட பல்வேறு பட்ட படிப்புகளை முடித்த இளைஞர்களை பயன்படுத்தி வருகிறது.
சொற்ப சம்பளத்தில் கௌரவமான வேலை.. கழுத்தில் கட்ட டை, காலுக்கு சூ, வாகனம், செல்போன் கட்டாயம் வேண்டும்.. இப்படி நாகரீக கோமாளிகளாக வலம் வர வைக்கும் இந்த இளைஞர்களின் வேலை என்கிற கனவு நிரந்தரமானது தானா ? என்றால் இல்லை என்றே சொல்லலாம்.. எப்போது வேலையில் இருந்து நீக்கப்படுவோம் என இவர்களுக்கே தெரியாது.. இப்படிப்பட்ட டிப்டாப்hன இளைஞர்களை நவீன கூலிகளாக பயன்படுத்தும் அவலத்திற்கு காரணம் வேலையில்லா திண்டாட்டமே.. இந்த வேலையில்லா திண்டாடிகளுக்கு “விரும்பிய வாழ்க்கை பெறுவதற்கு,.. எதுவும் செய்யலாம்.. சுயமுன்னேற்றம், சுயபுகழ், உன்னைப்பற்றி மட்டுமே சிந்தி,.. அடுத்தவன் வாழ்க்கையை அவன் பார்த்துக் கொள்வான்.” என போதிக்கிறது உலக மயம்..
கணிணித் துறையில் உள்ள மென்பொருள் இன்ஜினியர்களின் நிலையும் இதைவிட கொடுமையானதாக உள்ளது. வருமானம் ஒரளவு வருகிறது. 3 முதல் 5 வருடங்களில் சம்பாதித்துக் கொள்ளலாம்..பின்பு சந்தோசமாக வாழலாம் என 12 மணி நேரம் முதல் 16, 18 மணி நேரம் வரை கணிணியில் மென் பொருள் தயாரிக்க உழைக்கும் நிலை.. இதில் பெரும் பகுதியான இளைஞர்கள் மூளை சோர்வு ஏற்பட்டு வாழ்க்கையையே இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெண்கள் நிலை இதில் மிக மோசமானதாக உள்ளது. கால் சென்டர் என்ற பெயரில் இரவு நேரங்களிலேயே பணியாற்ற வேண்டிய நிலை..
கார்ப்ரேட் கலாச்சாரம் துhங்காமல் பணியாற்றுவதை திறமையாக, சிறப்பாக செயல்படுகிறார் என வர்ணிக்கிறது. இதனால் ஏற்படும் துhக்க கோளாறு பற்றி தெரியா வண்ணம் அவர்கள் வேலை வாங்கப்படுகின்றனர். தற்போது சென்னை போன்ற மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் வாரத்திற்கு 7-10 பேர் இப்பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய கால் சென்டர்களில் பணியாற்றும் 20-30 வயதிற்குள் இருக்கும் இளைஞர்கள், இளம்பெண்களில் 34 சதவீதம்பேர் பல்வேறு விதமான துhக்க கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படி பொருளாதாரத்தை தேடுகிறோம் என்ற பெயரில் தங்களது வாழ்க்கையை பல இளைஞர்கள் பணயம் வைத்து வாழ்க்கையில் முன்னேற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு தள்ளிவிடப்படுகிறார்கள். அதன் மறுவடித்தை பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
எம்எல்எம், மார்கெட்டிங், பேஷன் ஷோ, மாடலிங், மிஸ், மிஸ்டர் கூவம் முதல் உலக போட்டிகள் வரையென படையெடுக்கும் பட்டாளமாக மாற்றப்படுகின்றனர். இவைகள் அனைத்திலும் போதிக்கப்படும் ஒரே விசயம் சுய முன்னேற்றம் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. “ மார்க்ஸ் மூலதனத்தை பற்றி சொல்லும் போது சொன்னது.. 50 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றால் நேர்மையை மீறும். 100 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றால் சட்ட திட்டங்களை மீறும். 200 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றால் மனித உரிமைகளை மீறும். 300 ரூபாய் லாபம் கிடைத்தால் உரிமையாளனை துhக்கிட்டால் கூட அதை தடுக்காது லாபத்தை நோக்கி மட்டுமே செல்லும்.” என மூலதனத்தின் லாப வெறியை சுட்டி காட்டுகிறார்.
தனி மனித உரிமையை மீறக்கூடிய நடவடிக்கையை தொடர்ந்து செய்து வருகிறது.. தனி மனித உரிமையை வற்புறுத்தும் மனித உரிமைச் சட்டபிரிவு 2(ஈ) படி 1, வாழ்க்கை உரிமை, 2. சுதந்திர உரிமை, 3.சமத்துவ உரிமை, 4. தனி மனித மாண்பு ஆகியவைகளை காலில் போட்டு உலகமய ஏகபோகம் நசுக்குகிறது. குறிப்பாக அவுட் சோர்சிங் என்ற பெயரால் மூளை சலவை செய்யப்பட்ட மனித இயந்திரங்களை கொண்டு லாப வெறியோடு நிதியை திரட்டும் நடைமுறையை ஏக போக நிறுவனங்கள் நடத்தி வருகிறது.
வருடந்தோறும் இந்தியாவில் மட்டும் 9.3 மில்லியன் ( 93 லட்சம் ) பட்டதாரிகளை இந்திய கல்வித்துறை உருவாக்குகிறது. இவர்களில் சுமார் 3 சதம் பேருக்கு பெயரளவுக்கான வேலை என்பது கிடைக்கிறது. இந்த சூழலில் கணிணித்துறை மற்றும் இதர சேவைத் துறைகளில் பணியாற்றும் இளைஞர்களை 2015ல் செல்வ செழிப்புள்ளவர்களாக உலகமயம் மாற்றிவிடும். மாஸ்டர்கார்ட் நடத்திய ஆய்வில் 2015ம் ஆண்டில் ஒரு இளைஞன் ஷாப்பிங்கிற்காக 14.4 பில்லியன் டாலர், பொழுது போக்கிற்கு 8 பில்லியன் டாலர், பயணம் மற்றும் ஒய்வுக்காக 13.6 பில்லியன் டாலர், வாகனம், செல்போன், கம்ப்யூட்டர்களுக்காக 8.9 பில்லியன் டாலர், சுகாதாரம் மற்றும் மருந்துக்கு 6.4 பில்லியன் என மொத்தம் 51.3 பில்லியன் டாலர் (20,961 கோடி ரூபாய் ) நுகர்வுக்காக செலவிடப்படும்.. அதற்காக பொருளாதாரத்தை தேட இப்போதிருந்தே துhண்டப்படுகிறார்கள் என மேற்படி ஆய்வு தெரிவிக்கிறது.
மேற்கண்ட ஆய்வு சுட்டிக்காட்டுவது யாதொனில் பொருளாதார தேடல் வாழ்க்கையை அனுபவிக்க, 2015ல், 2020ல் சந்தோசமாக இருக்க,.. இப்போது மூளையை சோர்வாகும் அளவிற்கு நோயை விலை கொடுத்து வாங்கு, நல்ல துhக்கத்தை துறந்திடு, மன உளைச்சலை அதிகப்படுத்து, நேரம் பார்க்காமல் உழை... என ஒவ்வொரு தனி மனிதனையும் குறி வைத்து செயல்படுகிறது உலகமயம்.
அமிர்தானந்தாமயி, ரவிசங்கர், சுகபோதானந்தா, வேதாந்திரி மகரிஷி, சத்குரு போன்றவர்களும், ஆன்மிக அமைப்புகளும் மனதை அமைதிப்படுத்துகிறோம் என்ற பெயரில் இவர்களிடையே, மேலும் உழைப்பை செலுத்து... உனது நிறுவனம் வளர்ந்தால் நீ வளர்வாய்.. திறம்பட உனது நிறுவனத்திற்காக உழைப்பை செலுத்து.. உனது திறமையால் உனது நிறுவனம் மேம்பாடு அடையட்டும் என தியானம் என்ற பெயரில் போதித்துக் கொண்டே இருக்கிறார்கள்..
“இளமையில் தொலைத்து முதுமையில் தேடு”.. என நுகர்வியத்தை துhண்டிவிட்டு தற்போது கொள்ளை லாபம் பார்க்கும் ஏகபோக நிறுவனங்களின் ஏஜெண்டுகளாக மேற்படி அமைப்புகள் செயல்படுகின்றன.
ஐ.டி மற்றும் ஐ. டி சார்ந்த தொழில்கள், ஜவுளி, ஆடை, ஆட்டோமொபைல்ஸ், ரியல் எஸ்டேட், கட்டுமானம் போக்குவரத்து, தொலைதொடர்பு ஆகிய துறைகளில் மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. தற்போது 15 கோடி இளைஞர்களின் சாரசரி வருட வருமானம் ரூ 1.5 லட்சம் இது 2011ல் 75 கோடி இளைஞர்கள் இந்த வருமானத்தை சம்பாதிப்பார்கள் என ஆசையை துhண்டி விடும் ஏற்பாட்டை திட்டமிட்டு செய்து வருகிறது.
இதற்கு தேவையான படிப்புகள் என பல்வேறு தொழில்நுட்ப படிப்புகளை படியுங்கள் உடனடி வேலை என கனவுகளை துhவுகின்றனர். இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான பொறியியல் கல்லுhரிகள் தங்களது கல்வி வியாபாரத்தை கனஜோராய் நடத்தி வருகின்றனர். தற்போது தமிழக அரசு 40 சுயநிதி கல்லுhரிகளில் நீதிபதி ராமன் கமிட்டி தீர்மானித்த அதிகபட்ச கல்விகட்டணத்தையும் தாண்டி அதிக விலையில் பாடப் பிரிவுகளை மாணவர்களுக்கு விற்றுள்ளனர் என கண்டறிந்துள்ளது.. இது ஒரு பகுதி தான்..
அதேபோல் அழகுகலை, சருமக்கலை, உடல் ஆரோக்கியம் என சுஷ்மிதா சென்னும், ஜஸ்வர்யா ராயும், லாரா தத்தாவும் உலக அழகிகள் ஆனாலும் ஆனார்கள்.. இந்திய அழகுத்தொழில் இன்று சுமார் ரூ 12,000 கோடி மதிப்பிற்கு வளர்ந்துள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமான இத்துறையில் இளைஞர்கள் சம்பாதிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளது என அனைத்து ஊடகங்களும் மாற்றி மாற்றி ஊதிக் கொண்டே இருக்கின்றன.. குறிப்பாக ஹிந்துஸ்தான் லீவர், டாபர், ஹிமாலயா, மரிக்கோ, எல் ஓரியல், மோடி ரெவ்லான், பையோடீக், லக்மே, ஏவோன் போன்ற இந்திய- பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது வலைப்பின்னல்களை விரிவாக்கி வருகின்றன.. மூலிகை மருந்து சார்ந்த அழகுசாதன பொருட்களின் உலக சந்தை மட்டும் சுமார் ரூ 3,000 கோடி அளவிற்கு உள்ளது.
நம்முடைய மரத்தடி சலுhன்கள் எல்லாம் இன்று உலகமய பின்னணியில் பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. இத்துறையிலும் சலுhன் நிர்வாகி, பியூட்டி ஸ்பா நிர்வாகி, தோல் பராமரிப்பு, மணமக்கள் மேக், ஃபேசன் ஷோ மேக்கப், சினிமா நட்சத்திரங்களுக்கான ஹேர் ஸ்டைல், மேக்கப், உடை அலங்காரம், ஆயுர்வேதம், மசாஜ், ஜலக்கீரிடை என பல்வேறு உப பிரிவுகள் அதற்கென ஸ்பெசலிஸ்டுகள் என்பதோடு இத்துறையிலும் ஆராய்ச்சி, விரிவாக்கம் என இளைஞர்களை ஈர்த்து வருகிறது..
மேலும் நகர்ப்புற இளைஞர்களின் கார்ப்ரேட் கலாச்சாரத்திற்கு 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி ஹிண்டு நாளிதழிலில் வந்த செய்தி அதிர்ச்சி அடைய வைக்கிறது. சட்டீஸ்கார் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனக்கு செல்போன் பேன்சி நம்பர் வேண்டும் என்பதற்காக ரூ 15 லட்சம் கொடுத்து பெற்றுள்ளார் என்பது வசதியான பணக்கார இளைஞர்களின் வாழ்க்கையை சொல்கிறது. ரிலைன்ஸ் அம்பானி ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் செலவில் 60 அடுக்குமாடி வீட்டை தனது குடும்பத்திற்காக கட்டுகிறார்.. அவர் திறமையாக உழைத்ததால்தான் முன்னேற முடிந்தது என உபதேசிக்கிறது. அவரது திறமை எப்படிப்பட்டது என நாடறியும். ( 2008ம் ஆண்டு அம்பானிக்கு அரசு அளித்த வரிச் சலுகை மட்டும் ரூ 47000 கோடியாகும் )
அதே நேரத்தில் இன்னும் ஒரு பகுதி நகர்புற இளைஞர்களின் வாழ்நிலை என்பது மிக மோசமான நிலையிலேயே உள்ளது.. இவர்களின் வறுமையை, வேலையின்மையை அற்புதமான கருவியாக கொண்டு பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக அரசுகள் பயன்படுத்துகிறது..
அரசாங்கத்திற்கு சொந்தமான மின்சார வாரியம், தொலை தொடர்பு துறை, வங்கி, போக்குவரத்து, மருத்துவமனைகள் உள்ளிட்ட மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் சேவைத்துறைகளில் கூட பல பணிகளை தனியார்மயமாக்கி ஒப்பந்த வேலை, தினச்சம்பளம் எந்தவிதமான சட்ட பாதுகாப்பு, வேலை பாதுகாப்பும் இல்லாதவர்களாக மாற்றி உழைப்பை சுரண்டும் நடவடிக்கை தொடர்கிறது. அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அர்ஜூன் சென் குப்தா கமிட்டி தனது ஆய்வறிக்கையில் கூட இந்தியாவில் நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான கூலிக்கு வேலை செய்பவர்கள் 83 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர் என்கிறது.
உதாரணத்திற்கு தகவல் தொடர்பு துறையில் ஒப்பந்த தொழிலாளருக்கு ரூ 60ம், சுகாதாரத்துறையில் மருத்துவமனை பணியாளராக உள்ள ஒப்பந்த தொழிலாளருக்கு ரூ 33ம் என மிக சொற்பான சம்பளமே ஒரு நாளுக்கு வழங்கப்படுகிறது. இவர்களுக்கான “உச்சபட்ச நம்பிக்கை கால் காசினாலும் கவர்மெண்ட் காசு” நிரந்தரமா கிடைக்காத என்ற நம்பிக்கையே கொத்தடிமையாக வேலை செய்ய வைக்கிறது..
ஆரம்ப சுகாதாரம் ஓர் பார்வை ?
ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான தேவைகளில் ஒன்று கல்வி, இரண்டு வேலை, மூன்று சுகாதாரமான வாழ்க்கை.. இவற்றில் கல்வியையும், வேலையையும், வணிகமயமாக்கிவிட்ட ஆட்சியாளர்கள் தற்போது சுகாதாரத் துறையை லாபம் கொழிக்கும் வணிகமாக மாற்றிக் கொண்டு அப்பட்டமான பொய்களை பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் பேசிக் கொண்டு இருக்கிறது.. அனைவருக்கும் சுகாதாரத்தை வழங்குகிறோம் என்று..
குடிநீரை வணிகப் பொருளாக மாற்றிவிட்டு குடிநீர் பற்றாகுறை தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில் வாட்டர் பில்டர் வாங்கி வைத்து குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடியுங்கள் என மக்களை கிண்டல் செய்யும் செய்பவர்களாக ஆட்சியாளர்கள் மாறி வருகிறார்கள்..
இந்திய குடும்பங்களில் 24 சதமும், தமிழகத்தில் 41 சதமும் மருத்துவத்திற்கு என மக்கள் செலவு செய்கின்றனர். இந்த சூழலில் உலக அளவில் நடைபெற்ற சுகாதாரத்திற்கான மாநாடுகளில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதனடிப்படையில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஒரு ஒன்றியத்தில் 3 முதல் 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட வேண்டும். சுமார் 5000 மக்கள் தொகை இருந்தால் ஆரம்ப சுகாதார துணை மையமும், 30000 மக்கள் கொண்ட பகுதியாக இருந்தால் முக்கிய மையமாகவும் ( வட்டார அளவில் ) செயல்பட வேண்டும் என அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன..
ஒரு துணை மையத்தில் 2 மருத்துவர்கள், மருந்துகள் வழங்குமிடம், பரிசோதனைக்கூடம், 6 படுக்கைகள், வெளிநோயாளி பிரிவு, பிரசவ அறை என கட்டாயம் இருக்க வேண்டும்.. அதேபோல் முக்கிய சுகாதார மையத்தில் ( வட்டார அளவில் ) உள்ள மருத்துவமனைகளில் 4 டாக்டர்கள், 30 படுக்கைகள், 24 மணி நேரம் செயல்படும் இரத்த வங்கி, 7 செவிலியர்கள், ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளோடு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல் உள்ள நிலையில் தமிழகத்தில் இந்த விகிதாசாரத்தில் உள்ளதா ? என்றால் நிச்சயம் பல்வேறு இடங்களில் பற்றாகுறையான நிலையே நீடிக்கிறது.. இது தான் அரசு சுகாதாரத்துறையில் காட்டும் ஆர்வம்..
இதற்கு நாம் மாற்றாக வைக்கும் திட்டம் நிலசீர்திருத்தம், அன்னிய மூலதனத்திற்கான கட்டுப்பாடுகள், இந்திய பொருளாதாரத்தின் சுயசார்பை பாதுகாப்பது. இதற்கு மதசார்பற்ற தன்மையை பாதுகாப்பது, வகுப்புவாத பாசிச சக்திகள் ஆட்சிக்கு வராமல் தடுப்பது முக்கியமாகும். இதற்கான தொடர் போராட்டத்தை நடத்திட வேண்டியுள்ளது.
1928ம் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நவஜவான் பாரத் சபா வெளியிட்ட அறிக்கையை இன்றைய இளைஞர்கள் நினைவுபடுத்திக் கொள்வது ஒன்றே அவர்களின் வளர்ச்சியை, முன்னேற்றத்தை, இந்திய சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யும்.. அந்த அறிக்கை,.
“ஒரு தேசத்தின் உருவாக்கம் தங்களது சொந்த நலன்களையும், சுகங்களையும், உயிர்களை காட்டிலும் தங்களது நாட்டு நலனையே பெரிதெனப் பேணும் ஆயிரக்கணக்கான பெயர் தெரியாத ஆண்கள், பெண்கள் தியாகங்களையே வேண்டுகிறது ” இளைஞர்கள் சுதந்திரமாக, அமைதியாக பரபரப்பு ஏதுமின்றி பொறுமையாக சிந்திக்கட்டும். இளைஞர்கள் முழு மனதோடும், உண்மையோடும் சேவை, துன்பம், தியாகம் என்ற மூன்று குறிக்கோள்களை வழிகாட்டியாக கொள்ளட்டும்..
“ தியாகிகள் சிந்தும் செங்குருதி உணவிலேயே
இளம் சுதந்திரப் பயிர் செழித்து வளரும் ”

3 comments:

  1. உலகமயத்தைப்பற்றி நல்ல அறிமுகம்,, வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி தொடரட்டும்,,

    காதலும். உழைப்பும் மனித குலத்தின் மகத்தான உன்னதங்கள்,
    மார்க்ஸ்

    ReplyDelete
  2. எல்லாம் சரி இவ்வளவு பெருசா போட்ட படிக்கிறவங்களுக்கு சலிப்பு வந்துவிடும். கண்வலி வந்துவிடும். பார்ட் பார்ட்டா அல்லது துணை தலைப்பு கொடுத்து போடுங்க

    ReplyDelete
  3. நன்றி தோழரே இனி மேல் தங்களது ஆலோசனைகளை கவனத்தில்கொள்கிறேன்

    ReplyDelete