”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.
நுகர்வு வெறியை வளர்க்கும் வகுப்புவாதம்

இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாக்கல் மனிதர்கள் அனைவரையும் தனியர்களாக மாற்றி வருகிறது. தனது நுகர்வு என்ற ஒற்றை கலாச்சாரத்திற்கு  தேவையான சந்தை மனிதர்களை உருவாக்குகிறது. நுகர்வு என்பதை தாண்டி நுகர்வு வெறியை ஊக்குவுக்கிறது. இதற்கு மத்தியதர மற்றும் உயர்தர வர்க்க மக்கள் பலிகடாவாகி வருகிறார்கள்.


இந்த நுகர்விற்கு வளர்ச்சி என்று பெயர் சூட்டி. வளர்ச்சிக்கான அடித்தளத்தை யாருக்கு அமைத்து கொடுக்கிறார்கள் என்று பார்த்தால் பெரும் பகுதி நடுத்தர மற்றும் உயர்தர வர்க்கத்தினரையே சார்ந்து ஒரு முக்கோண படிநிலையை  உருவாக்குகிறார்கள். இந்த வளர்ச்சி என்ற சொல்லாடலின் மீது ஒரு கருத்தியல் கட்டியமைக்கப்படுகிறது.  இந்த கருத்தியலை நோக்கி பொதுவெளியில் ஈர்ப்பை உருவாக்க ஒரு கலாச்சாரம் தேவைப்படுகிறது. ஒரு துருவத்தை நோக்கிய சிந்தனைகளின் தொகுப்பாக மாற்றப் படுவதால் கேட்கும் நிலையும், விமர்சன நிலையும், எதிர்வினையாற்றும் நிலையும் கொஞ்சம் கொஞ்சமாக  மந்தமாக்கப்படுகிறது. முன்னேற்றத்திற்கான தடையாகவும் இந்த கருத்தியலை நிலை நிறுத்தும் பிற்போக்கான பண்பாட்டையும் வடிவமைக்கிறது.

ஏகாதிபத்திய உலகமயமாக்கல் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல்வேறு நாடகங்களை நடத்துகிறது. இதனை உதாரணத்தின் மூலம் பார்க்க முடியும். மிக சமீபத்திய உதாரணம் சிரியா. 2001 செப் 11 அமெரிக்காவின் இரட்டை கோபுரம் உள்ளிட்டு அல்கொய்தா தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதை நாமறிவோம். இந்த அல்கொய்தாவும், பின்லாடனும் யாருடைய வார்ப்புகள் என்பதை உலகறியும்.  அல்கொய்தாவை அமெரிக்காவே உருவாக்கி ஊட்டி வளர்த்து பல நாடுகளில் உள்நாட்டு கலகத்தை உருவாக்கிட பயன்படுத்தி தனது ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொண்டது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததைப் போல் அதே அல்கொய்தாவின் பின்லாடன் அமெரிக்காவை தாக்கிய போது அலறியது. அல்கொய்தாவை அழிக்கிறேன் என ஆசிய நாடான ஆப்கானை நாசப்படுத்தி தனது மேற்காசியாவில் மேலாதிக்கம் செலுத்த துருப்பு சீட்டை பெற்றது.  அல்கொய்தாவை தேடுகிறேன் என பல நாடுகளை விட்டுவைக்கவில்லை.

இதன் பின்னணில் ஒரு கருத்துப்பிரச்சாரத்தை தனது சக்தி வாய்ந்த ஊடகங்கள் மூலம் பயங்கரவாத்திற்கு எதிரான போர், தீயசக்திகளுக்கு எதிரான போர், இஸ்லாமிய பயங்கரவாத்திற்கு எதிரான போர் என தீய சக்தி நாடுகள் என்று பட்டியலிட்டு அதில் சோசலிச நாடுகளையும் சேர்த்து தனது மிரட்டலை தொடங்கி தொடர்ந்து மிரட்டி வருகிறது.  இப்படி கடந்த பத்தாண்டுகளாக அல்கொய்தாவை ஒழிப்பேன் என்று கிளம்பிய அமெரிக்கா, சிரியாவில் அரசுக்கு எதிரான கலக கும்பலுக்கு  ஆயுத உதவிகளை முழுமையாக செய்து வருகிறது. அந்த கலக கும்பலின் பெயர் அல்கொய்தா.. ஒரு புறம் அழிப்பேன் என ஆப்கானிலும், சிரியாவில் ஆதரவளிப்பது என இரட்டை நிலையை அல்கொய்தா விசயத்தில் எடுப்பதும் மேலாதிக்கம் சார்ந்தே,.கேட்டால் ஜனநாயகத்தை பாதுகாக்க என்று கதை விடுகிறது,. சிரியாவை மிரட்டுவதன் மூலம் ஈரானை பணிய வைக்க முடியும். 

இதன் மூலம் ஒரு புறம் மேலாதிக்கம் செய்திட ஆப்கானில் அழிப்பும், சிரியாவில் உதவியும்  என்ற இரட்டை குணத்தை கொண்டுள்ள ஏகாதிபத்தியத்தின் கலாச்சாரம் தெளிவாக வெளிப்படுகிறது.  மேற்கண்ட பிரச்சனையில் அது முன்வைக்கும் கருத்தியல் பயங்கரவாத எதிர்ப்பு ஜனநாயகத்தை பாதுகாப்பது என தனது ஆக்டோப° ஊடகங்கள் மூலம் கிராம்சி சொன்ன குடிமக்கள் சமூகத்தில் பொதுபுத்தியை உருவாக்குகிறது. சிறுபான்மை பயங்கரவாதத்தை  எதிர்க்க பெரும் பகுதி மக்களின் ஒப்புதல் தேவை.. அதற்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு தேவை என்பதை அடையாளங்களுக்குள் நின்று கத்துகிறது.

மற்றொரு  உதாரணத்தை பார்க்க முடியும். ஜார்ஜ்புஷ் காலத்தில் துவங்கி ஈராக்கில் அணு மற்றும் ரசாயன ஆயுதங்கள் உள்ளது அதற்கெதிரான யுத்த முஸ்தீப்பை துவங்கியது. ஷியா. சன்னி பிரிவினரிடையே இருந்த மோதலை பயன்படுத்தி சதாம் உசேன் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக இருக்கிறார் என்று சொல்லி அதற்கு எதிரான பெரும்பான்மை கருத்தியலை உருவாக்கியதும், அவர் ஏராளமான பேரை கொன்று குவித்தார் என்ற காரணத்தையும் சொல்லி அவரைஆட்சியில் இருந்து மட்டுமல்ல உயிரையும் பறித்தது அமெரிக்கா.. அதற்கு பயன்படுத்தியது பெரும்பான்மையான கருத்தியலை அவருக்கு எதிராக  அமெரிக்கா உருவாக்கியது தான்.  

இதன் விளைவு ஈராகிற்கு எதிரான அமெரிக்க நேட்டோ படைகளின் தாக்குதல் துவங்கும் சமயம் தொலைகாட்சிகளில் எல்லாம் யுத்தம் குறித்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டபோது  யுத்த எதிர்ப்புணர்வு உருவாவதற்கு பதில் தொலைகாட்சியை பார்த்த அப்பாவி மக்கள் கூட எப்போது யுத்தம் துவங்கும் என்று கேட்கும் நிலைக்கு அவர்களின் பொதுசிந்தனையில் நச்சு விதைகள் ஏற்றப்பட்டது. யுத்தவெறிக்கு எதிரான கருத்தியலை கொண்டு இருந்தாலும் பொதுவெளியில் அதற்கு எதிரான நேரடி போராட்டங்களில் பங்கேற்பதில் உள்ள இடைவெளிதான் இத்தகைய ஏகாதிபத்திய நச்சுவிதைகள் துவப்படுவதற்கான புள்ளியின் துவக்கமாக அமைகிறது.

இதன் தொடர்ச்சிதான் இன்றைய ஏகாதிபத்திய சக்திகள் தங்களின் உலகமயமாக்கல் கொள்கைக்கு தடையாக உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளை எல்லாம் கூறுபோட பெரும்பான்மை, சிறுபான்மை என்ற கருத்தியலையும், நிறம், இனம், மொழி, எல்லை போன்ற அடையாளங்களையும் பயன்படுத்து கிறது. 1990 களுக்கு பின் யுகோஸ்லோவாக்கியா, செக்கோஸ்லோவாக்கியா துவங்கி இன்று வரை ஏராளமான தேச பிரிவினைகளுக்கு இன அடிப்படையிலான கருத்தியலை அது பயன்படுத்தி தனது பொம்மை அரசுகளை அங்கே  ஆட்சிகட்டிலில்  அமர்த்தியுள்ளது.


இன்றைய சூழலில் நடுத்தர மற்றும் உயர்தட்டு மக்களிடம் பரவும் கருத்தியல் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகாரணமாக வேகமாக பரவும் கருத்தியலாக உள்ளது. நவீன அறிவியல் வளர்ச்சியில்  சாதனங்களின் முகவுரையை எழுதுபவர்களாக இந்த உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரே முன்னணியல் உடனுக்குடன் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொண்டு அதன் தாக்கத்தை உள்வாங்குகின்றனர். இதனை உலகமயம் சாமார்த்தியமாக தனது சந்தைக்கு பயன்படுத்துகிறது. 

எனவே நுகர்வுக்கான மனிதர்களை உருவாக்க முயற்சி செய்கிறது. இதற்கு எதிரான மாற்று பண்பாட்டை உடைய மனிதர்களை, அமைப்புகளை, கட்சிகளை, அரசுகளை, நிறுவனங்களை முற்றாக அது நிராகரிக்கிறது. ( உதாரணம் வாழ்வியலின் அன்றாட தேவைகள் குறித்த விசயத்தில் கொள்கை முடிவு எடுப்பதில் உறுதியாக இருந்ததால் 2009 நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சிகளை அதிக எண்ணிக்கையில் வரவிடாமல் செய்ததில் ஏகாதிபத்தியம், ஏகபோக, நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு பெரும் பங்கு இருந்ததல்லவா? ) சமூகத்தின் பொது சிந்தனையில் தனக்கான கட்டமைப்பை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. இது குறித்து கே.என். பணிக்கர் கூறும் போது,


  • தனிநபருக்கும் வெளி உலகத்திற்கும் இடையே உள்ள மாறிக்bகொண்டிருக்கும் உறவு,.
  • சந்தைப் பொருளதாரத்தின் தாக்கமும் அதனுடன் தொடர்பு கொண்ட நுகர்வு கலாச்சாரத்தின் பெருக்கம்
  • மதம் சார்ந்த உணர்வுகள் வகுப்புவாதத்தின் வளர்ச்சி


மேற்கண்ட அம்சங்கள் சமூக எதார்த்திற்கு விரோதமான கண்ணோட்டத்தை உருவாக்குகிறது. இது பொதுவெளியில் தனக்கான பங்களிப்பில் இடைவெளியை உருவாக்குகிறது. இதனால் தனிநபருக்கு உருவாகும் நெருக்கடியை தீர்ப்பதற்கான தேடலில் பொதுவெளியில் இருந்து தனிமைப்படும் நிலை கூடுதாகி வருகிறது. இந்த புள்ளியைதான் கலாச்சார காவலர்கள் என்று தங்களை சொல்லி கொள்ளும் வகுப்புவாத சக்திகள் பயன்படுத்திக்கொள்கிறது. 

இது ஏகாதிபத்தியத்தின் தேவைக்கான தாசர்களாகவும் செயல்படுகிறது. இது தான் இன்று நரேந்திர மோடியை கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆதரிப்பதன் மர்மம் ஆகும். இது இன்று நேற்றல்ல,.. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் கர்ணகொடூரமாக கொலைவெறியை குறிப்பிட்ட இனத்தின் மீது, உழைக்கும் மக்களின் மீதும் நடத்தினானே ஹிட்லர், முசோலினி இவர்களை முன்னிலைப்படுத்தி வளர்த்திவிட்டதும் ஜெர்மன், இத்தாலிய பெரும் முதலாளிகளே.

தங்களின் லாப நோக்கில் நின்று இந்த பாசிச வெறியர்களை வளர்த்ததன் விளைவுக்கு உலகம் 5 கோடி உயிர்களை பலிகொடுக்க வேண்டி வந்தது. இன்று இதே தன்மையில் இந்தியாவில் கார்ப்ரேட் நிறுவனங்களும், வகுப்புவாத சக்திகளும் மோடி என்ற ஒற்றை நபரை முன்னிறுத்துகிறது. இதற்கு பின்புலத்தில் மிகப்பெரும் சகுனியின் சதிராட்டம் உள்ளது என்பதை கண்டறிந்து கொள்ள வேண்டியுள்ளது.  

வகுப்பு வாதமும் பெண்களும்..

மலாலா இன்றைய உலகின் பேசப்படும் பெயர் மட்டுமல்ல,.. மறுக்கப்பட்ட கல்வியை அனைவருக்கும்  உரிதாக்க உயிரை இழக்க சித்தமான சிறுமி,.. இன்று இளம் பெண்,.. தலிபான் மத தீவிரவாதிகளுக்கு எதிராக தனது நிலையை உறுதிப்பட செய்ததன் விளைவு மதம் அனுமதிக்காத விசயத்தை ஒரு பெண் பிள்ளை எப்படி உரிமை கோரலாம் என்பதற்காக அவரின் மீது தாக்குதல்,.. மலாலா ஐக்கிய நாடுகள் சபையில் கல்விக்கான கோரிக்கை வைத்து உரையாற்ற வைத்தது. அனைத்து நாட்டு தலைவர்களையும் எழுந்து நின்று அவரது பேச்சை ஆர்ப்பரித்து வரவேற்க வைத்தது என்றால் பெண் பிள்ளைகளின் வீரத்தை சமகாலத்தில் நம்மால் காண முடிந்தது., 

வகுப்புவாதத்திற்கு எதிரான அவர்களின் உறுதியான போராட்டத்தை,.. ஆம்,. இது ஏதோ இ°லாமிய மதம் மட்டுமல்ல,.. உலகின் அனைத்து மதங்களும் செய்யும் போதனை பெண் என்பவள் ஒடுக்கப்பட்டவள்,. அவளுக்கு எதற்கு உரிமைகள் எல்லாம் என்றுதான் இன்று வரை சொல்லி வருகிறது.. 

இந்து மதத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் பல அமைப்புகளும் பெண்களுக்கு எதிரான கருத்தியலை அன்றாடம் முன்வைத்த வண்ணம் உள்ளது. இதனை பல பெண்களும் ஏற்றுக்கொண்டு அந்த அமைப்புகளோடு பணியாற்றுவது வரலாற்றின் முரணாகும்.. 1993ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னணியில் இந்து முன்னணி மாதர் அமைப்புகளை இராமருக்கு கோவில் கட்டுவது என்ற அடிப்படையில் திரட்ட ஆரம்பித்திருந்த தருணத்தில் அதற்காக நாட்டின் பல பகுதிகளில் மாநாடுகளை நடத்தி வந்தது,. அப்போது அதன் மகளிர் அமைப்புகளின் தலைவர்கள் கீழ்க்கண்டவாறு பேசினார்கள்,.. பெண்களுக்கு எங்கு பாதுகாப்பு - மதச்சார்புடைய சமுதாயத்திலா? மதச்சார்பற்ற சமுதாயத்திலா? மதசார்ப்பற்ற என்ற வார்த்தைக்கு தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அதற்காக பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என கோமதி நவீன், கீதா ரவிந்திரன் போன்ற இந்து மத தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கருத்தியலுக்கு பின்னால் உள்ள அரசியல் என்ன?   பொதுவாக நல்ல குழந்தைகளை உருவாக்க காலம் காலமாக பொறுப்பு தீர்மானிக்கப்பட்டவள் பெண்தான் எனவே அவள் குடும்பத்திற்குள் மட்டுமே தனது கடமையை ஆற்ற வேண்டும். இலட்சியம் கொண்டு வெளியே செல்லக்கூடாது. இதற்கு ஏராளமான கருத்தியலை உருவாக்கினார்கள்,. ஆண் தன்னுடைய நலனுக்கும், சுகபோகத்திற்கும், சொத்தை பாதுகாக்கும் வாரிசுகளை உற்பத்தி செய்து தரும் இயந்திரமாகவே பெண்னை பார்த்தான்.,. 

பெண்ணை போகப்பொருளாக பார்க்கும் இந்த நிலைதான் இன்று நிறுவனங்கள் பெண்களை வணிகபொருளாக (உலக அழகிப்போட்டி வரை பொருட்கள் விற்கும்) பார்க்கும் நிலைக்கு இட்டுச் சென்றது. இந்த சிந்தனைக்கு கருத்தியல் வடிவம் கொடுத்தது மதங்கள்.,. இந்த கருத்தியல் வடிவங்கள் தான் இன்றுவரை பெண்ணை நச்சரிக்கும் குடும்ப வேலைகளில் இருந்து வெளியே வராமல் பாதுகாத்து அடிமையாக வைத்திருக்க பயன்படுகிறது. அதனால் தான் லெனின் “நச்சரிக்கும் குடும்ப வேலைகளில் இருந்து எப்போது ஒரு பெண் விடுதலையடைகிறளோ அப்போது தான் இந்த சமூகம் விடுதலை அடையும்’’ என்று சொன்னார்.


மதசார்புடைய சமுதாயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்றால் கீழ்க்காணும் உதாரணங்களை எங்கே வைப்பது. அரிச்சந்திரன் சத்தியவதி, இராமன் சீதை, நளன் தமயந்தி, தர்மன் திரளபதி இந்த புராண, இதிகாச கால கதாபாத்திரங்கள் அனைத்தும் நேர்மைக்கு, உண்மைக்கு, தர்மத்திற்கு உதாரணமாக சொல்லப் பட்டவை,. ஆனால் இதில் அனைத்து ஆண்களும் மனிதர்களாக பிறந்து பின்னர் இறந்து கடவுளாக மாற்றப் பட்டவர்கள் என்று  கதைகளில் சொல்லப்படுகிறது. கேள்வி என்னவென்றால் அரிச்சந்திரன் தனது மனைவியை விற்றவன், இராமன் மற்றொருவன் தவறாக சொன்னான் என்று இரண்டுமுறை தீக்குளிக்க வைத்தவன், நளன்  நடுகாட்டில் துhங்கும் போது மனைவியை தனியாக காட்டில் விட்டு விட்டு சென்றவன், தர்மன் தன்னை மட்டுமல்ல தனது மனைவியையும் சூதாட்டத்தில் இழந்து அடுத்தவன் மானபங்க படுத்தும் போது நெட்டை மரமென வேடிக்கைப் பார்த்தவன்,. 

இது தான் மதங்கள் சொல்லும் பெண்களுக்கான பாதுகாப்பா? என்று இந்து மத புராணங்களை படித்தவர்களுக்கு வரும் இயல்பான கேள்வி,.. இந்த கதாபாத்திரங்களை முன்னுதாரணங்களை இன்று வரை சொல்லி வருகிறார்கள்,.. எந்த மதமும் ஆணுக்கு நிகராக பெண்ணை பார்த்ததில்லை. மதங்கள் பெண்களுக்கான ஆடை, அலங்காரம், கல்வி, பொதுவெளியில் செயல்படுவது, சிந்தனை ஆகியவற்றை கட்டுபடுத்தின. ஆண் எவ்வளவு திருமணங்கள் வேண்டுமானலும் செய்து கொள்ளலாம். பெண்கள் ஒரு முறை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும், கணவன் இறந்தால் உடன்கட்டை, சதி ஏற வேண்டும்.          

 ( இந்தியாவில் ரூப்கன்வர் சதி ஏற கட்டாயப்படுத்திய சம்பவம் ). ராணி ஸதி சேவா சங் என்ற அமைப்பு ஸதி கொடுமைஎன்ற கருத்தியலுக்காக நாடு முழுவதும் கோவில் கட்ட கிளம்பியது. பூரி சங்காரச்சாரியாரோ உடன் கட்டை ஏறும் உரிமையை மறுக்கும் சட்டம் ஜனநாயகத்திற்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என்று சொல்லி இதை நிலைநாட்ட உயிர் தியாகம் செய்வேன் என்றார்,. ஒரு பெண் உடன்கட்டை ஏறுவது கணவன், தகப்பன் குடும்பத்திற்கு மூனரைக்கோடி ஆண்டுகளுக்கு மோட்சம் கிடைக்கும் என்றார். ராஜஸ்தான் முதல்வர் விஜயராஜே சிந்தியாவோ ஸதி என்றால் அர்ப்பணிப்பு, தியாகபலி இதுதான் பெண்ணுரிமை என்றார்.,.

அரசாங்கம் மதத்தை ஏற்றுக்கொண்டால் என்ன ஆகும் என்பது இன்று பல அரபுநாடுகள், ஆப்பிரிக்க நாடுகளின் அனுபவம் தோலுரித்துக் காட்டுகிறது. நமது அண்டை நாடுகளான ஆப்கான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இதே நிலையே உள்ளது. 

மதசார்ப்பற்ற சமூகம் என்பது மதங்களை மறுத்த சமூகமல்ல,.. அது அரசின் அன்றாட செயல்பாட்டில் மதங்களின் தலையீடு இல்லாமல் அது தனி மனிதர்களின் நம்பிக்கை சார்ந்த விசயமாக பார்க்கப்படும்,. காந்தி சொன்னாரே எனக்கு இந்தியாவின் சர்வாதிகாரியாகும் வாய்ப்பு கிடைத்தால் முதலில் செய்வது,. மதத்தை அரசியலில் இருந்து பிரிப்பது. அது தான் மதசார்ப்பற்ற தன்மை. ஒரு அரசு எந்த மதங்களையும் சாராமல் அனைத்து பிரிவினரையும் சமமாக நடத்துவது. அதனால் இந்தியாவின் அரசியல் சாசனம் கூட இந்திய ஒரு மதச்சார்ப்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு என்று தன்னை பிரகடப்படுத்திக் கொண்டிருக்கிறது. மதத்தினை வளர்ப்பது அரசின் வேலையல்ல,..  என்று நாம் சொல்லும் போதுதான் இந்த வகுப்பு வெறியர்களுக்கு கோபம் வருகிறது. 

மதங்களை கட்டி வளர்ப்பதில் பெண்களுக்கு பண்பாட்டு ரீதியாக முக்கிய பங்கு உள்ள போது அவர்களை மதச்சார்ப்பற்ற சமூகத்தில் கொண்டு வந்தால் கோபம் வராதா? எனவேதான் மேற்கண்ட இந்து முன்னணியின் மகளிர் தலைவர்கள் மதச்சார்பின்மை என்ற வார்தையையே தடை செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர். 

மதங்கள் ஆசியோடு உள்ள அரசுகள் பெண்களுக்கான கருக்கலைப்பை தடை செய்கின்றன. பெண் கருவுறுவது என்பது அவளது உடல்நிலையோடு, பொருளாதார நிலையோடு, குடும்ப சூழலோடு சம்பந்தப்பட்டது. ஆனால் இன்று பாலியல் வன்முறை மூலம் கருவுறுதல் நிகழ்ந்தால் அது அவமானத்தின் சின்னம் என கருதி அந்த பெண் கருக்கலைப்பு செய்ய முடியாது என்று பல மதங்களை தாங்கியுள்ள நாடுகளின் சட்டங்கள் சொல்கின்றன. இது எப்படி நியாயமாக முடியும். மேலும் தனிநபரின் விருப்பமான திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தையை தத்தெடுப்பது, சொத்துரிமை போன்ற விசயங்களில் இந்திய இ°லாமிய மதக் கோட்பாடுகள் பெண்களை கட்டுப்படுத்துகிறது. 

இந்திய இஸ்லாமிய பெண்ணான ஷாபானு ஜீவனாம்சம் குறித்து உச்சநீதிமன்றம் குற்றவியல் நடைமுறை சட்டம் 125ன் படி பெற உரிமை உள்ளது என்று தீர்ப்பு வழங்கிய போது, இ°லாமிய அடிப்படைவாதிகளோ “கணவனிடமிருந்து மனைவி ஜீவனாம்சம் கோருவது லஞ்சதிற்கு ஒப்பானது. இது பெண்களை பாலின அராஜகத்திற்கு இட்டுச் செல்லும். இது மனைவியின் சுயமரியாதைக்கு எதிரானது. இ°லாமியத்திற்கு புறம்பானது’’ என ஓலமிட்டனர். வாக்கு வங்கியை மனதில் கொண்டு அன்று ராஜீவ்காந்தி சிஆர்பிசி 125 சட்டபிரிவு மு°லீம் பெண்களுக்கு பொருந்தாது என  சட்டமியற்றி ஏழை இ°லாமிய பெண்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டார்,..இது கிறி°தவத்திலும், இந்து மதத்திலும் கூட இப்படி பல சட்டங்கள் பெண்களுக்கு எதிராகவே உள்ளது. 

அதே போல கடவுளின் முன்பு அனைவரும் சமம் என்கின்றனர். ஆனால் பூசாரியாகவோ, பாதிரியாகவோ ஒரு பெண் நினைத்தால் ஆக முடியாது.,. அதனால் இன்று வரை பெண்கள் பூசாரியாவதை இந்து மதம் தடை செய்கிறது. கத்தோலிக கிறிஸ்தவமோ ஏசு நாதர் தனது சீடர்களாக ஆண்களை மட்டுமே ஏற்றுக் கொண்டார். பெண்களை ஏற்கவில்லை. எனவே பாதிரிமாராக பெண் வர முடியாது என்று நியாயம் கற்பிக்கின்றனர். இது “தான் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தாள் பொன் குடம்’’ என்ற சொலவடைக் கேற்ப உள்ளது.  

இன்றைய இந்துமதத்தின் அடிப்படையான மனு நீதி போன்ற சா°திரங்கள் பெண்களுக்கு எதிராகவே இன்று வரை இருந்து வருகிறது.  பெண்கள், சூத்திரர்கள், வைசியர்கள், சத்திரியர்கள் ஆகியோரை கொலை செய்வது மைனர் குற்றமாகும். பெண் வேத மந்திரங்களை ஓத முடியாது. அவள் பொய்க்கு சமம் என்று மனு சொல்கிறது. அதனால் தான் பெண் படிக்கக்கூடாது, வேலைக்கு போகக்கூடாது. காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னாரே, “வேலைக்கு போகும் பெண்கள் எல்லாம் பத்தினியாக இருக்க முடியாது’’ என்று வாய் கூசாமல் பெண்களை இழிவுப்படுத்தினார்கள்,. பல பெண்கள், வாலிபர் அமைப்புகளின் எதிர்ப்புக்கு பின்னால் தனது வாய்துடுக்குத்தனத்தை கட்டுக்குள் அன்று வைத்தார். 

ஆர்எஸ்எஸ் ன் மகளிர் அணியான ராஷ்டிர சேவிகா சமிதி, இந்து முன்னணியின் அன்னையர் முன்னணி, பிஜேபியின் மஹிலா மோர்ச்சா, விஸ்வ ஹிந்து பரிசத்தின் துர்கா வாஹினி போன்ற அமைப்புகள் அனைத்தும் பெண்களை இறைப்பக்தி, தேசபக்தி, மதம் போன்ற மூகமுடிகளின் பின்னணியில் பாசிச அரசியலை ஏற்றி வருகிறார்கள். இது இந்து ஆதிக்கத்தை நிலைநாட்டுவதே. இன்று பெண்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என சாகாக்கள் நடத்துகிறார்கள். 

எதற்கு வலிமையான பாரதத்தை படைக்க வலிமையான குழந்தைகளை பெற்றெடுக்க என்று.. எப்படியோ பெண்கள் உடற்பயிற்சிக்கு அனுமதித்தார்களே என்று பார்த்தால் பின்புலத்தில் அகண்ட பாரத்தை உருவாக்க பெண்களை தயார் படுத்துவது என்ற அரசியலே வைத்துள்ளனர். ராஷ்டிர சேவிகா சமிதி அமைப்பு சொல்கிறது பெண்களுக்கு பொருளாதார நிர்பந்தம்  இருந்தால் ஒழிய பெண்கள் வேலைக்கு போகக் கூடாது நல்ல மனைவியாகவும், தாயாகவும் இருப்பதன் மூலமே பெண்கள் தேச சேவை செய்ய முடியும் பெண்களை பொறுத்தவரையில் குடும்பம்தான் முதலில், லட்சியமெல்லாம் இரண்டாவதுதான்.,. என்று முழங்குகிறது.,.

பெண்கள் சொத்தில் சமபங்கு உரிமை வேண்டும் என்று சொன்னால் வரதட்சணைக் கொடுமை அதிகமாகிவிடும் என பெண்களுக்கு சொத்துரிமை வேண்டியதில்லை என்கின்றனர் இந்த இந்து சனதானவாதிகள்.  அதுமட்டுமல்ல இயற்கையின் அற்புத குணங்களில் ஒன்று காதல், இது மனிதர்களுக்கு கிடைத்த அரிய வரம். ஆனால் இதில் இன்று சாதி பார்த்து, குலம் பார்த்து, கோத்திரம் பார்த்து காப் பஞ்சாயத்து, கட்ட பஞ்சாயத்து, கௌரவக்கொலைகள், சதிக் கொலைகள், கூட்டான பாலியல் வன்முறைகள் என்று இந்து மதத்தின் பெயரால் நடத்தப்படும் பெண்களுக்கெதிரான வன்முறை குறித்து இன்றைய ஆர்எஸ்எஸ், பிஜேபி வகையறாக்கள் வாய் திறப்பதில்லை. சத்தம் போடாமல் இந்த நிகழ்வுகளை நிறைவேற்ற துணை நிற்கின்றன. 


பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்றான் மகாகவி, ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே என்றார்.,. 


காற்றின் வேகத்தோடு வருகிறோம்
ஏழையென்றும் அடிமையென்றும் 
எவனும் இல்லை ஜாதியில்
இழிவுகொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனமகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர் 
சமானமாக வாழ்வமே .,. 

என்றார் மகாகவி பாரதி,..  அவன் பிறந்த பூமிக்கு அருகில்  அவன் கனவு கண்ட ஊரை சிருஷ்டிக்க போராடியவர் கோவில்பட்டி அமல்ராஜ்,. இரத்தமும், சதையுமாக அந்த மக்களோடு இரண்டற கலந்து அவர்களின் அன்றாட பிரச்சனைகளுக்காக போராடி சாதிய தீயை அணைக்க போராடியவன். இறுதியில் அதற்கே பலியானான். இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வேள்விக்கு அடிஉரமாகிப்போன அமல்ராஜ் இதோ ஆயிரமாயிரம் போராளிகளை மந்திப்பட்டியில் மட்டுமல்ல,  தமிழகம் முழுவதும் தீண்டாமைக்கு எதிராக களத்தில் நிற்கிறார்கள்..  

துhத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி நகராட்சிக்கு அருகிலுள்ள கிராமம் மந்திப்பட்டி. இங்கே பலத்தரப்பட்ட சமூகத்தினை சார்ந்தவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராமத்தில் அனைத்து அரசியல் இயக்கங்களும் இருந்தன. இடதுசாரிகளை தவிர,.. ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்கு மட்டுமே அந்த மக்களை பயன்படுத்தினார்கள்,. அவர்களின் அடிப்படை வாழ்க்கையை தீர்க்க எதுவும் செய்யவில்லை,. 

இந்த நிலையில் 1990ல் இடது சாரி இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை அந்த மண்ணில் வேர்விட ஆரம்பித்தது. இளைஞர்கள் ஒன்றிணைந்தனர். 1993க்குள் மக்களின் பிரச்சனைகளை பட்டியலிட்டு கையில் எடுத்து போராட்டத்தை துவக்கினார்கள் வாலிபர் சங்க தோழர்கள். சாலைவசதி கேட்ட போராட்டம் மக்களை  திரட்டி நடைபெற்றது. சாலை மட்டுமல்ல மக்கள் சக்திக்கு கழிவு நீர் செல்ல சாக்கடை வசதியும் செய்யப்பட்டது. நம்பிக்கையின் நாற்றங்காலை வாலிபர் இயக்கம் வளர்ந்தது. 

இதன் ஒப்பற்ற தலைவர்களாக அன்று அந்தபகுதியில் பாலமுருகனும், மாரிமுத்துவும், அமல்ராஜ்ம் மாறினார்கள்,.1994ல் குடும்ப அட்டைக்காகவும், சுடுகாட்டுப்பாதைக்காகவும், 1995ல் பேருந்து வசதிக்காகவும் , 1996ல் காவல் துறை அடக்குமுறைக்கு எதிராகவும் என போராட்டம் நடத்தி வெற்றி பெற்றனர் வாலிபர் சங்க தோழர்கள்,.. அப்போது ஆட்சியில் இருந்தது அதிமுக அரசு காவல் துறை கொண்டு போராடுபவர்களை அடக்கிக் கொண்டு இருந்தது. உள்ளூர் காவல்துறையும் தோழர்கள் மீது கடும் கோபத்தில் இருந்தது. 

இத்தருணத்தில் சாதிக்கலவரம் வெடிக்க மந்திதோப்பில் நடைபெற்ற கொலைகள் காரணமாக அமைந்தது. இந்த கலவரத்தை காரணம் காட்டி காவல்துறை வாலிபர் சங்க தோழர்களை பழிவாங்க கைது செய்து பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தது. சம்மந்தப்பட்ட கொலைசெய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு நீதிபதி மோகன் கமிஷனிடம் கொடுத்து அவரின் விசாரணைக்கு பின் குற்றவாளி அல்ல என சொல்லி தோழர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தீப்பெட்டி தொழிலாளர்கள் நிறைந்த அப்பகுதியில் தீப்பெட்டி தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க 1998ல் வரலாற்றுசிறப்புமிக்க போராட்டம் துவங்கியது. தீப்பெட்டியில் நவீன இயந்திரங்களை புகுத்தி வேலைவாய்ப்பை, வாழ்க்கையை பறிக்காதே என்ற முழக்கம் நகரமெங்கும் எதிரொலித்தது. பல ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட போராட்டங்களை பல வடிவங்களில் வாலிபர் இயக்கம் நடத்தியது. அரண்டது அரசு,. இதனைதொடர்ந்து மாநில அரசு பஸ்°கட்டண அறிவிப்பை வெளியிட்டது. அதற்கெதிரான போராட்டம் தாலுhகா செயலாளர் அமல்ராஜ் தலைமையில் வீரியத்தோடு நடைபெற்றது. 

2001ல் ஊரில் இருந்த புறம்போக்கு நிலத்தில் மக்கள் செல்லும் பாதையில் அலங்காரம் பிள்ளை என்பவரின் மகன் முருகன் என்பவனால் சாலையை மறித்து சுவர் எழுப்பி மக்களுக்கு நடந்து செல்லும் வழியை மறிக்கிறான். இதற்கு எதிராக ஏராளமான போராட்டங்களை அனைத்து அரசியல் இயக்கங்களை இணைத்து தலைமைதாங்கி நடத்தியது வாலிபர் இயக்கம். இதற்கு முன்னின்றது அமல்ராஜ். சுவர் இடிக்க உத்தரவிடப்பட்டது. இதற்கு காரணம் அமல்ராஜ் என சாதிய வன்மத்தோடும், தனக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லியும் ஊருக்கு அநியாயம் செய்த அந்த சமூகவிரோதிகள்  மார்ச் 17ம் தேதி இரவு பாலமுருகன், மைக்கேல்ராஜ் இருவருடன் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த அமல்ராஜை வழிமறித்து துடிக்க துடிக்க வெட்டிக் கொன்றார்கள் பாவிகள்,. 

வறுமையில் வாழ்ந்தாலும், சுண்ணாம்பு சூளையில் அரை வேலை, கால் வேலை செய்து தனது தாயையும், தம்பியையும் காப்பாற்றிக்கொண்டே, வழக்கறிஞராகவேண்டும் என சட்டக் கல்லுhரியில் படித்துக் கொண்டே மக்களுக்கு சமூக சேவை செய்து வந்த அமல்ராஜ்க்கு பலமுறை கொலைமிரட்டல் வந்த போது உள்ளூர் காவல்துறையில் புகார் கொடுத்தும், காவல்துறை ஆதிக்க சாதி வெறியர்களோடும், சமூக விரோதிகளோடும் சேர்ந்து கொண்டு குற்றவாளிகளை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்தன் விளைவு தோழர் அமல்ராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்,.

அவர் இறந்து பல ஆண்டுகளை கடந்திருக்கலாம் ஆனால் அவரின் வழியில் இதோ கோவில்பட்டி ஹாக்கி கிராவுண்ட் பாதுகாத்திருக்கிறது இடதுசாரி இயக்கம், புறம்போக்கில் குடியிருப்ப வர்களுக்கு பட்டா கேட்ட போராட்டம், முன்னைவிட இன்னும் வீரியமாய் இதோ நாங்கள் போராடுகிறோம்,. நீங்கள் வீழ்ந்த விதைகளல்ல,.. விதைக்கப்பட்ட வீரிய விதைகள் உங்களில் இருந்து ஆயிரமாயிரமாய் நாங்கள் வருகிறோம்,..  

காற்றின் வேகத்தோடு, நீரின் வலிமையோடு, நெருப்பின் ஆற்றலோடு பூமிப் பந்தை மாற்றிப்போடும் வல்லமையோடு வருகிறோம். ஆம் சாதிவெறி, மதவெறி, இனவெறி, போதைவெறி போன்ற கொலைவெறியை இந்த மண்ணில் அடியோடு அழித்தொழிக்க போர் தழும்புகளோடு வருகிறோம்,.. உழைக்கும் மக்களின் கேடயமாய், வாளாய்,.. வருகிறோம்,

நன்றி
இளைஞர் முழக்கம்



ஊழல் பிசாசுகளும், பேய்களும்,..

அலிபாபாவும், நாற்பது திருடர்களும் போல இந்தியாவில் இன்று மத்திய அரசில் இருக்கும் அலிபாபா பிரதமரும், நாற்பது திருடர்களாய் இந்திய நாட்டில் உள்ள பெரு முதலாளிகளாகிய கார்ப்ரேட்களும் நாட்டின் வளங்களை கொள்ளையடித்து வருகிறார்கள். இன்று உலகளவில் உள்ள 179 நாடுகளில் 85 வது இடத்தில் இந்தியா உள்ளது. 2002ல் 2.7 சதமாக இருந்த ஊழலின் வளர்ச்சி 2008ல் 3.4 சதமாக உயர்ந்தது. இத்தகைய ஊழலுக்கு காரணம் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெரு முதலாளிகளின் லாப வேட்கையும், பிறரின் மீதான ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற தன்மையுமே பெரும் பகுதி முறைகேடுகளுக்கு வழி வகுக்கிறது. நவீன தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்திற்கு பிறகு மிகவேகமாக ஊழல் முறைகேடுகள் அதிகரித்து வருகிறது. இது அனைத்து பொதுத்துறை, இயற்கை, மனிதவள மேம்பாடு அனைத்தையும் சீரழித்து வருகிறது.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் காலத்தில் நடைபெற்ற மாருதி ஊழல், ராஜீவ் காந்தி காலத்தில் போபர்ஸ் ஊழல், நரசிம்மராவ் காலத்தில் தொலை தொடர்புதுறை ஊழல், வாஜ்பாய் காலத்தில் சவபெட்டி, ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல், மன்மோகன்சிங் காலத்தில் மருத்துவ கவுன்சில் ஊழல், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், ஐபிஎல் கிரிக்கெட் ஊழல், பாராளுமன்றத்தில் எம்,பிக்கள் வாக்களிக்க லஞ்சம், காமன்வெல்த் போட்டியில் ஊழல், ஆதர்ஷ் ஊழல் என ஊழல்களின் தேசமாக இந்தியா மாற்றப்பட்டு வருகிறது, கண்ணுக்கு தெரிந்து பத்திரிக்கைகளில் விவாதப் பொருளாக மாறிப் போன ஊழல்கள் இவைமறைக்கப்பட்ட, தெரியாத ஊழல்கள் எத்தனை எத்தனையோ,.. பறி போன இந்திய உழைப்பாளி மக்களின் செல்வங்கள் எவ்வளவோ,


வீட்டில் உட்கார நினைக்கும் பிசாசு
இன்றைய நிலையில் இயற்கை வளங்களையும், கனிமங்களையும் கொள்ளையடிப்பதில் யார் பெரியவன் என்ற பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கும், அதிகாரவர்க்கத்தில் உள்ளவர்களுக்கும் இடையே உள்ள உறவின் போட்டிகளின் உச்சகட்டம்தான் இதுவரை இல்லாத அளவிற்கு பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் ஊழல் இந்திய நாட்டில் நடைபெற காரணமாக அமைந்தது. இதற்கு காங்கிரஸ், பிஜேபி என்ற ஏதாவது ஒரு சேவகம் செய்யும் அடிமையும், முகமூடியும் தேவை., அதன் ஒரு பகுதியாகதான் காங்கிரஸ் என்ற முகமூடி பொதுமக்களிடம் அனைத்து விதங்களிலும் அம்பலப்பட்டு, அசிங்கப்பட்டு, குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் அளவிற்கு கேவலப்பட்டு நிற்கிறது., கால் உடைந்த இந்த குதிரையின் மீது இனி சவாரி செய்தால் தாங்களும் குழியில் விழுந்துவிடுவோம், என்று தனக்கான இன்னொரு குதிரையாக பிஜேபி என்ற முகமூடியை அணிவதற்கு இன்றைய கார்ப்ரேட் நிறுவனங்கள் தயாராகி விட்டன. அதனால் தான் இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்களில் 100க்கு 76 பேர் மோடியையும், 24 பேர் ராகுலையும் ஆதரித்துள்ளார்கள். ஆகவே ஊழலுக்கு மாற்றாக, இன்னொரு ஊழலை நாம் ஆதரிக்க முடியாது,. “காங்கிரஸ் என்ற பேயை ஓட்ட, பிஜேபி என்ற பிசாசை வீட்டில் உட்கார வைக்க முடியாது“,.   

ஊழலுக்கு உதவிடும் எந்திரங்கள்
உலகமயச்சூழலில் பெரும்பகுதி தனியார்மயப்படுத்தப்பட்டதன் பின்னணியில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது, குறிப்பாக கிராம நிர்வாக அலுவலகம் முதல் பிரதமர் அலுவலகம் வரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது அனைவரும் அறிந்த்தே,. இதில் அரசு அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (இடதுசாரிகள் தவிர்த்து)., நீதிமன்றங்கள், ரியல் எஸ்டேட்நிறுவனங்கள், சாலை, கட்டிடங்கள் கட்டும் நிறுவனங்கள், மணல், தாதுப்பொருட்கள் அள்ளி வெட்டி எடுக்கும் நிறுவனங்கள், மாபியா கும்பல்கள், மருத்துவமனைகள், கல்விநிறுவனங்கள், காவல்துறை, ராணுவம் உள்ளிட்டு குடிநீர், மின்சாரம், சாலை, பொதுவிநியோகம், விவசாயத்துறை உள்ளிட்டு முக்கிய துறைகளில் நடைபெறும் அனைத்துவிதமான ஊழல்களும் நாட்டை கடுமையாக பாதித்துக் கொண்டு இருக்கிறது. இன்றைய ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் மக்களின் பொதுப்புத்தியில் தங்களின் அடிப்படை கடமைகளை செய்யக்கூட லஞ்சம் கொடுப்பதை ஒரு கலாச்சாரமாக மாற்றிவிட்டார்கள்,. இது அரசு துறைகளில் மட்டுமல்ல இன்று தனியார் துறையிலும் ஏறத்தாழ இதே நிலைதான்,. சமீபத்தில் 69 நாடுகளில் ஊழல், லஞ்ச முறைகேடுகள் குறித்து நடைபெற்ற (டி.ஐ) ஆய்வுகளில் இந்தியாவில் மக்களுக்கு சேவை செய்யும் கல்வி, மருத்துவம், நீதி, காவல்துறை போன்ற அடிப்படையான 11 துறைகளில் ஏறத்தாழ 21,068 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன. இதனுடைய உச்சகட்டம் வட மாநிலங்களில் காங்கிரஸ், பாஜக ஆளும் மாநிலங்கள் உள்ளிட்டு 80சதம் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கிராமப்புறத்தில் வழங்கும் மானிய விலையிலான உணவுப் பொருட்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
வேலையின்மையை பெருக்கும் ஊழல்கள்
ஊழல்கள் என்பது முதலாளி வர்க்கத்தின் லாபவெறியோடு சம்மந்தப்பட்டது என்ற அடிப்படையில் இயற்கை கனிமவளங்கள், தொழில் துறைகளில் அரசின் பங்களிப்பை தனியார்துறை நாளுக்குநாள் மிரட்டி குறைத்து வருகிறது, இதன் காரணமாக லாபத்தை அடிப்படையாக கொண்டு வெகுசில இளைஞர்களை வைத்துக் கொண்டு நவீன இயந்திரங்கள் மூலம் பல நூறு மடங்கு கொள்ளையடிக்கும் ஏற்பாட்டை செய்து வருகின்றனர். இதனால் கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்ற இந்த நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முழுமையான, கௌரவமான வேலை கிடைக்காமல் அரைவேலை, கால்வேலை என கிடைத்த வேலைகளை வயிற்றை கழுவ செய்து வருகின்றனர்,.

உதாரணத்திற்கு நெய்வேலி அனல் மின்நிலையத்தில் 2000ஆண்டுக்கு முன்பு 27000பேர் மூன்று சிப்டில் வேலை செய்த நிலை மாறி மிகச் சொற்ப அளவாக மாறியுள்ளனர்,. என்ன காரணம் அரசின் தனியார்மயக் கொள்கை அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுக்கத்தடை, இருப்பவர்களை தற்காலிக தொழிலாளர் களாக மட்டும் வைத்துக் கொள்வது, அடிப்படையான சட்ட உரிமைகளை வழங்க மறுப்பது, போதிய சம்பளம் வழங்கிடாமல் ஏமாற்றுவது, குறைந்த கூலி என அரசுத்துறைகளின் மீது கடும் அதிருப்தியை உருவாக்குவது,, அதே நேரத்தில் தனியார் மின் உற்பத்தி மையங்களில் குறைவான எண்ணிக்கையிலேயே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதன் பின்னர் குறைந்த கூலியில் தனியார்துறையில் மிக்க் குறைந்த வேலைவாய்ப்பும், நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதும் வேலைவாய்ப்பை சுருக்குவது, அழிப்பது என்ற நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது., இதனை தற்போது அரசு பல துறைகளில் மேற்கொண்டு வருகிறது,. இதற்கு பின்னணியில் ஏராளமான தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களின் செயல்பாடுகள் ஒளிந்துள்ளன,. மேலும் நீண்ட காலம் வேலைவாய்ப்பை வழங்கிடும் இயற்கை வளங்களை தங்களது லாப வேட்கைக்காக குறுகிய காலத்திற்குள் நவீன இயந்திரங்கள் மூல்ம் வெட்டி எடுப்பது வேலை வாய்ப்பின் கால அளவையும் குறைக்கின்றன,.

ஊழலை வளர்க்கும் முதலாளித்துவம்
இன்றைய தருணத்தில் இந்தியாவின் ஏராளமான தனியார் பெரு முதலாளிகளுக்கு ஆளும் அரசுகள் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை வரிசலுகைகளாக அள்ளி வழங்குகின்றனர். லட்சுமி மித்தல், முகேஷ்அம்பானி, அஜீம் பிரேம்ஜி, சாசிரவிரூயி, சாவித்திரி ஜிண்டால் கௌதம் அட்டானி, குமார்மங்கலம் பிர்லா, அனில் அம்பானி, சுனில் மித்தல், ஆடிகோத்தாரி, குஷ்பால் சிங், அனில் அகர்வால், திலிப் சங்கவி, சிவ்நடார், மல்வீந்தர், சிவீந்தர் சிங் ஆகிய 15 நபர்களுக்கு மட்டும் கடந்த மார்ச் 2011 காலத்திய சொத்து மதிப்பு  7 லட்சத்து 96 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள் (177 பில்லியன் டாலர்என உயர்ந்துள்ளது. இவற்றில் பால்வா, வினோத் கோயாங்கா உட்பட  8 நிறுவனங்கள் 2 ஜி அலைகற்றை ஊழல் விவகாரத்தில் சம்பந்தபட்டுள்ளதாக தெரிகிறது.

2011 ல் பில்லியனர்கள் எண்ணிக்கை  55 ஆக உயர்ந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு 55 பேரின் மொத்த சொத்த மதிப்பு 222.1பில்லியன் டாலராக ( 9 லட்சத்து 99 ஆயிரத்து 450 கோடி ரூபாயாக) இருந்தது.  2011ல் 246.5 பில்லியன் டாலராக ( 11 லட்சத்து 9 ஆயிரத்து 250 கோடி ரூபாய் )உயர்ந்துள்ளது. இது இலங்கை, பாகிஸ்தான் இரண்டு நாடுகளின் கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை (ஜிடிபி) விட அதிகம் ஆகும். மேற்கண்ட விபரமே தெளிவாக சொல்லும் எப்படி ஒராண்டுக்குள் பெரும்பகுதி சொத்து சேர்ந்த்தன் பின்னணியை.இப்படி ஆளும் அரசுகள் பெரும் முதலாளிகளுக்கு சாதகமான நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது. மேலும் வரி ஏய்ப்பு, கறுப்புப்பணம் பதுக்கல் போன்றவைகளும் இவர்களை மேலும்பணக்காரர்களாகவும், ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும் மாற்றி வருகிறது.
ஈசன் திரைப்படத்தில் அரசியல்வாதிக்கும், பெரும் நிறுவன முதலாளிக்கும் சண்டை ஏற்பட்டு தொலைபேசியில் பேசிகொள்வார்கள்., யார் பெரியவன் என்று ? இறுதியில் முதலாளி சொல்வார், உன்னை போன்ற அரசியல்வாதிகளை உருவாக்குவதே என்னை போன்ற பெரும் முதலாளிகள்தான் என்று.,, அதைப்போல் இன்று நீக்கமற இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் இடத்தில் பெரும் முதலாளிகள் உள்ளனர்,. நாடாளுமன்றத்தில் 60 சதமான உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,.

ஊழலினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் நிலை
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 41.6 சதவீதமான 45 கோடியே 60 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளதுகடந்த 2004–05ம் ஆண்டில் எடுக்கப்பட்ட தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு, டெண்டுல்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர், உடல் நலம், கல்வி, சுகாதாரம், சத்துணவு, வருமானம் ஆகியவற்றை அளவீடாக கொண்டு மதிப்பிட்டுள்ளனர்.

கடந்த 1972ம் ஆண்டில் நகரங்களில் 2100 கலோரி, கிராமங்களில் 2400 கலோரி உணவுப் பொருட்கள் வாங்கும் வருமான அளவை கொண்டு மக்களின் ஏழ்மை நிலை மதிப்பிடப்பட்டது.கடந்த 2006ம் ஆண்டில் திட்டக் கமிஷன் மதிப்பீடு படி ஏழை மக்களின் அளவு 28.5 சதவீதமாகும் என்று கூறியிருந்த நிலையில் சக்சேனா தலைமையில் மத்திய அரசு அமைத்த கமிட்டி இந்தியாவின் ஏழ்மை நிலை 50 சதவீதம் என்று கடந்த 2010 ஜூன் மாதம் தெரிவித்திருந்தது.

உலகப்பசி அட்டவணையில் 94வது இடத்தில் இந்தியா உள்ளதெனவும், உலகின் அதிகளவாக 5 வயதிற்குக் குறைவான சிறார்களில் 43 சதவீதம் பேர் எடைக்குறைவோடு இங்கே உள்ளனர் ஆனால் இந்தியாவில் உணவு உற்பத்தியில் 2009-10ஆம் ஆண்டில் 218.20 மில்லியன் டன். 2008-09 ல் 237.47 மில்லியன் டன்னாகவும், 2013ல் தேவையைவிட 5 மடங்கு உற்பத்தி கூடியுள்ளது. அதேபோல் தென்மாநில மக்களின் பிரதான உணவாகிய அரிசி 2008-09ல் 99.18 மில்லியன் டன்னாக இருந்தது 2010-11ல் 100 மில்லியன் டன்னாக உயருமெனவும் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

இப்படி உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நிலையிலும் 26 கோடிப் பேர் பசியால் வாடுகின்றனர். போதுமான சேமிப்பு வசதியில்லாததால் ஆண்டிற்கு கோடிக்கணக்கான டன் உணவுதானியங்கள் வீணாகி வருகிறது. இந்திய உணவுக்கழகத்தால் இதுவரை 6 கோடியே 50 இலட்சம் டன் உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டாலும், சேமிப்பு வசதி இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் மட்டுமே. உணவின்றி  மக்கள் ஒருபக்கம் வாடுவதைக் கண்ட உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்து உணவுப்பொருள் ஏதும் வீணாகக் கூடாது, உடனடியாக இதனை பசியால் வாடுவோருக்கு வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்தியுறுத்தியது,. ஆனால் மன்மோகன் அரசு  இலவசமாக இதை கொடுக்கமுடியாது என்பது அரசின் கொள்கை முடிவு என இரக்கமில்லாமல் அறிவிக்கிறார்.  அவரின் கருத்தை அம்பானி போன்ற பெரும் முதலாளிகள் ஆதரித்தனர். அதே நேரத்தில் நீதிபதி வாத்வா கமிட்டி அறிக்கையின்படி பொது விநியோகத் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் மற்றும் திருட்டுகள் நடைபெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவற்றில் மட்டுமல்லாது கல்வி, மருத்துவம், குடிநீர், கழிப்பறை, சாலை, தெருவிளக்கு என அனைத்திலும் அரசின் திட்டங்கள் சாதாரண ஏழை எளிய மக்களை சென்றடையாமல் பெரு நிறுவனங்களின் லாபப் பசிக்காக வணிகமயமாக்கப்பட்டுவிட்டது,.
  
ஊழலுக்கு ஒப்புதல் பெறும் இடம்
இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என குடிமக்கள் பாடும் பாட்டாக  மக்களின் மனோநிலை மாற்றப்பட்டுள்ளது. இது வரை அவர்கள் பார்த்துவந்த சமூக அவலங்கள், கல்வியறிவு இல்லாத நிலை, ஊடகங்களின் கருத்து திணிப்புகள், நுகர்வு வெறி போன்ற பல்வேறு அம்சங்கள் மக்கள் மத்தியில் இயல்பாகவே மாற்றத்தை நோக்கிய பயணத்தை தடைசெய்யும் பொதுபுத்திகளை மக்கள் மத்தியில் திட்டமிட்டு ஏற்றிவந்துள்ளன.
வணிகமயச்சூழலில் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய சாதாரண உழைப்பாளி மக்கள் அனைத்து விசயங்களுக்கும் அரசின் திட்டங்களை எதிர்பார்த்து நிற்கும் நிலையே உள்ளது,. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அனைத்திலும் ஊழல் செய்து மக்களுக்கு சேர வேண்டியதில் சிறுபகுதியை இலவசங்கள் என அறிவித்துவிட்டு பெரும்பகுதியை கூட்டு கொள்ளையடிக்கும் நிலையையே செய்து வருகின்றன. இப்படி கொள்ளையடிக்கும் ஆட்சியாளர்களும் ஊழல், லஞ்ச வழக்குகளில் சிக்கிய அரசியல் வாதிகள், அதிகாரிகள், கார்ப்ரேட் நிறுவனங்கள் இவைகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததும் மக்களின் இயல்பான கோபமற்ற சூழலுக்கு காரணமாகும்.

இதனால் சாமான்யபட்ட ஏழைஎளிய மக்கள் இலவசங்களை பெற்றுக்கொண்டு தங்களது உரிமைகளை விற்கும் மனோநிலையை நோக்கி  தள்ளப்படுகின்றனர். இதனை கார்ப்ரேட் நிறுவனங்களும், பெரும் அரசியல் சூதாடிகளும், முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், அதிகாரவர்க்கமும் பயன்படுத்திக் கொள்கின்றன. கொடுத்த பொருட்களை வைத்தே கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வித்தை தெரிந்தவர்களாக உள்ளனர்.
இலவசம் என்றால் உயிரை கொடுத்தாவது பெற வேண்டிய சூழலை வறுமை உருவாக்கி வைத்துள்ளது. 1993ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு நிவாரணம் வாங்க வந்த மக்களிடையே ஏற்பட்ட நெரிசலில் 42 பேர் அநியாயமாக தங்களது உயிரை 2000 ரூபாய்க்காக கொடுத்தனர். இது கொடுமையிலும் கொடுமை. லஞ்சம், ஊழல் என்பதை பொதுபுத்தியாக மாற்றும் நடவடிக்கைகளில் காங்கிரஸ், பிஜேபி இரண்டு கட்சிகள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் வளம் வந்துக் கொண்டு இருக்கும் தேமுதிக, பாமக, மதிமுக, அதிமுக, திமுக போன்ற பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களை, மருத்துவமனைக்களை நடத்தி வியாபாரத்தை அமோகமாக நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இந்த கட்சிகளின் ஆதரவாளர்கள், தலைவர்கள்தான் இன்றைய கனிமவள கொள்ளையர்களாகவும் உள்ளனர்,. இந்த நிலை மாற வேண்டும் என்றால் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்,. யார் மக்களுக்காக செயல்படுகிறார்கள், யார் தேசத்தை, மக்களை, இயற்கையை பாதுகாக்கிறார்கள் என்ற புரிதலை உருவாக்க வேண்டியுள்ளது,.

ஊழலுக்கு மாற்று
இன்றைய உலகமயச் சூழலில் இதனை எந்தவிதமான நீதிக்கும் கட்டுப்படாமல் ஊழலில் ஈடுபடும் அரசியல் வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள்,  விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் போன்ற பிரிவினர் வாழ்க்கை தரம், ஆடம்பரம், புகழ், செல்வாக்கு, அதிகாரம் சார்ந்த பல்வேறு கூறுகளை கணக்கில் கொண்டு இதன் பின்னணியில் தொடர்ந்து ஊழல் உள்ளிட்ட பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுத்து ஊழல் மூலம் சேர்த்த அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்க வேண்டும். அதற்கு தேவை உறுதியான மக்கள் நலன் பேணும் ஆட்சி அதிகாரமே. எனவே ஆளும் ஆட்சியாளர்கள் தேர்தல் சீர்திருத்ததை செய்வது, தேர்தலுக்கு அரசே செலவிடுவது, விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை அமுலாக்கிடுவது என ஊழலின் ஊற்றுக்கண்ணை அடைக்க உருப்படியாக ஏதாவது செய்தால் மட்டுமே முடியாட்சியாக உள்ள ஊழலின் ராஜாக்களை ஒழித்திட முடியும். குடியரசை மலர செய்ய முடியும். அசமத்துவத்தை நீக்கி அனைவருக்குமான சமத்துவ சமூகம் உருவாக்குவதும், அதற்கான திட்டங்களை உருவாக்குவதும் அவசியம். இந்தியாவின் அரசியல் சாசன முகவுரையில் கூறப்பட்டுள்ள இந்திய ஒரு மதசார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு என்கிற வாசகம் நிறைவு பெற வேண்டுமானால் அனைவருக்கும் கல்வி, வேலை, சுகாதாரம், உணவு, உடை, இருப்பிடம், சுத்தமான குடிநீர், தூய்மையான சுற்றுப்புறச் சூழல் வழங்கப்பட வேண்டும். அந்த சமூகம் ஊழற்ற சமூகமாக பரிணமிக்கும்.