”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.
“கங்கையிலே மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?’’

காங்கிரசுக்கு மாற்று பிஜேபி என்றவுடன் “கங்கையிலே மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?’’ என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. மோடி ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் தானே ஆகிறது. அதற்குள் இப்படியெல்லாம் பேசலாமா? சும்மா ஆறு மாதம் விட்டுதான் பார்க்கலாமே? எதற்கு எடுத்தாலும் இப்படிதான் குத்தம் சொல்லிக்கொண்டே அலைகிறாதா? டிவி பெட்டியிலே மெத்த படித்த இரண்டு மேதாவிகள் கேள்வி எழுப்பி சென்று கொண்டே இருந்தனர். ஆமா இவங்க பேசறதா பார்த்தா சரியாத்தானே இருக்கு என்று டிவி பார்த்துக்கொண்டு இருந்த ராமரும், குமாரும் தலையை ஆட்ட ? அடுத்த பத்துநிமிசத்திலா 8 மணி செய்திகள் என்று செய்திகள் வாசிக்க வந்துட்டாங்க,..

அப்ப பாருங்க செய்தி வாசிப்பவர் சொன்னதை கேட்ட ராமருக்கும், குமாருக்கும் முக போன போக்க,.சும்மா இஞ்சி தின்ன அதுவாட்ட மாறிடுச்சு,.. சும்மா மோடி வந்தா எல்லாம் மாறிடுனும் எல்லா டிவிக்காரனும் சொன்னான்னு நம்பி ஓட்டப்போட்டோம். இப்ப பார்த்த ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள தலையில இந்த போடு போட்டுடாங்களே,. இந்த பொழப்புல இன்னும் ஆறு மாதம் கழித்து பார்க்குறதாம். யாரு அந்த ஆளு இப்படி பேசிக்கிட்டே இருக்கிறான் என்று வாயிக்கு வந்த வார்த்தைகளில் வைய ஆரம்பிக்க,.. ஆமா, உண்மையில் நடந்தது என்ன என்று திரும்பி பார்க்க ஆரம்பித்தேன் மோடியின் ஒரு மாத ஆட்சியை,.

மே 26ம் தேதி திரு. நரேந்திர மோடி பதவியேற்ற  அன்று தமிழர்களின் குறை தீர்க்கும் நாயகன் அவர்தான் அவர் வந்தால் இலங்கை தமிழருக்கு விடிவுகாலம், ராஜபக்சேவை மிரட்டி எடுதது அடிமையாக்கிவிடுவார் என்றெல்லாம் பீலா விட்டு பிரச்சாரம் செய்த வைகோ போன்றவர்களே அரண்டு போகும் அளவிற்கு ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு வரவைத்து கூட்டணி கட்சியினருக்கே முதல் ஷாக்கை கொடுத்து அசர வைத்தார் நரேந்திர மோடி. அடுத்த நாட்களில் மோடி தர்பார் ஆரம்பமானது. ஆட்சியின் 2 வது நாளில் காஷ்மீருக்கு 370 சிறப்பு அந்த°து எதற்கு தேவையில்லை, ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங் நாட்டையே அதிர வைத்தார். 


5 வது நாளில் ஐம்பது காசு டீசலுக்கு விலையேற்றம் என அறிவித்து நாட்டு மக்களுக்கு  ஷாக் கொடுத்தார் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.  கைய உதறி ஷாக் அடித்த இடத்தினை தடவிக் கொடுப்பதற்குள் அடுத்த ஷாக் என்று ஒவ்வொரு அமைச்சராக கொடுக்க ஆரம்பித்தார்கள். நஜ்மா ஹெப்துல்லா புதியதாக ஒரு குண்டை துhக்கி போட்டார். பார்சி இனத்தை தவிர இந்தியாவில் சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை என்று இ°லாமியர்களை, கிறி°தவர்களை, சீக்கியர்களை அந்த பட்டியலில் இருந்தே விட்டுவிட்டு பேசி அவர் முடிக்கும், ராமருக்கு கோவிலை உடனே கட்டிவிட முயற்சிகள் துவங்க வேண்டும் என்று ஆர்எ°எ° ன் தலைவர்கள் சொல்ல, அட கொஞ்சாமாவது கேப் விடுங்க என்று சொல்லாம் என்று வாயத்திறக்கும் முன்பே பொது சிவில் சட்டம் கொண்டு வந்துறனும் என்று இன்னொரு தரப்பு சொல்ல,. அனைத்து மட்டத்திலும் இந்தி மொழிதான் இனிமேல் என்று அணுகுண்டை துhக்கி போட்டார்கள். 
மோடியை விழுந்து விழுந்து ஆதரித்த அம்பானி வகையறாக்கள் ஊடகங்களில் ஆருடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ஈராக்கில் உள்நாட்டு யுத்தம் எனவே நமது நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் விலையை ஏற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று தன்னுடைய லாப கணக்கை அதிகப்படுத்த சங்கை ஆரம்பத்திலேயே ஊதிவிட்டார். பொதுத்துறை வங்கி பங்குகளை எல்லாம் அந்நிய மூதலீட்டிற்கு திறந்துவிடு, பல வங்கிகளை ஒன்றாக இணைத்திடு, பாதுகாப்பு துறையில் 100 சதம் அந்நிய முதலீடு, என அதானியும், அம்பானியும் அமைத்த கார்ப்ரேடுகளின் கூட்டணி அரசை நிர்பந்திக்க அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. 
இதற்கு தகுந்த மோடி ம°தானாக தினமலர் போன்ற ஊடகங்கள் ஆமாம்ம் சாமி என்று கச்சேரி நடத்த ஆரம்பிக்க, எரிவாயுவிற்கு, ரசாயன உரங்களுக்கு, மண்ணெண்ணெய்க்கு, பெட்ரோலிய பொருட்கள், உணவு தானியங்களுக்கு என்று மானியங்களாக நிறைய கொட்டி கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே மானியங்களை ரத்து செய்யுங்கள் என்று இந்தியாவின் ஏகபோக பெரு முதலாளிகள் கூப்பாடு போட 30 நாள் ஆட்சிக்குள் மோடி அடித்தார் பாருங்கள் பல்டி,..
குஜராத் மாடலை தேசிய மாடலாக்குவோம் என்று  ஊடகங்களில் தன்னை வளர்ச்சி நாயகன் என தம்பட்டம் அடித்து ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசு, ஏழை எளிய மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட அரசு ஜனாதிபதி உரையின் மீது பதிலளித்து உரையாற்றிய மோடி எளிய வார்த்தைகளை உணர்ச்சிப்பூர்வமாக கொட்டித் தீர்த்தார்,. பேசுவதற்கு முன் டீசல்விலையை உயர்த்தினார். “சாப்பிட்ட கை காயவில்லை’’, என்று கிராமத்தில் பழமொழி சொல்வார்கள்,. அதற்குள் மோடி அவர்களின் பிஜேபி அரசு சாமான்யப்பட்ட உழைப்பாளி மக்களின் இடியாய் ரயில்கட்டண உயர்வு, சீசன் கட்டணம் இருமடங்கு உயர்வு, சரக்கு கட்டணம் உயர்வு என அடிமேல் அடியாய் பட்ஜெட்டிற்கு முன்பே வெள்ளோட்டம் விட்டு தாக்குதலை துவக்கியுள்ளது.
அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், ரயில் கட்டணதை கடுமையாக உயர்த்தி இருப்பது மேலும் விலைவாசி உயர்வுக்கே வழிவகுக்கும். மோடி அரசு பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே டீசல்விலையை உயர்த்தினார்கள். தற்போது பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதமும், மாதாந்திர சீசன் கட்டணத்தை இருமடங்கும், சரக்கு கட்டணத்தை 6.5 சதமும் உயர்த்தி இருப்பது எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றும் நடவடிக்கையாகும். 
முந்தைய காங்கிர° அரசின் இத்தகைய மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை மேலும் தீவிரமாக அமலாக்க கார்ப்ரேட்களின் செல்லபிள்ளையான மோடியின் அரசு செயல்படுகிறது என்பதையே இந்த கட்டண உயர்வுகள் காட்டுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயரும். மேலும் ரயில் போக்குவரத்தை நம்பி 40 சதமான பெட்ரோலிய மற்றும் எரிவாயு பரிவர்த்தனையும், நிலக்கரி, சிமெண்ட், இரும்பு, உணவு தானியங்கள் அதிகளவில் ரயிலின் மூலமே நாடு முழுவதும் பரிவர்த்தனையாகிறது. இந்த கட்டண உயர்வுகள் கடும் தாக்குதலை தொழில் மற்றும் விவசாயத்துறையின் மீது நிகழ்த்தும். ஏற்கனவே கடுமையான பணவீக்கத்தில் உள்ள இந்தியாவில் இது மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் நெருக்கடிக் குள்ளாக்கும்.
இதற்கு பின்னால் உள்ள அரசியல் தான் என்ன? மோடி யை வரிந்து கட்டிக்கொண்டு இந்திய மற்றும் பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆதரிக்க காரணம் என்ன ? தேர்தல் நேரத்தில் மோடி கட்சிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு கோடி கோடியாய் கொட்டி செலவு செய்தார்கள். ஏனென்றால் கார்ப்ரேட்களின் மீட்பாளாராக மோடி இருப்பார், அதற்காக திட்டங்களை வகுப்பார். தேர்தலில் போட்ட காசை மீண்டும் எடுப்பதற்கான நல்ல காலம் மோடியின் ஆட்சிக்காலம் என்று இன்று இந்திய பெரு முதலாளிகள் கொக்கரித்து கொண்டு இருக்கிறார்கள்.
இதற்காகவே காத்து கொண்டிருந்தைப்போல் இந்தியாவின் பங்கு சந்தைப் புள்ளிகள் அனைத்தும் மோடியின் பதவியேற்ப்பை ஒட்டி வெகு வேகமாக உயர்ந்தது. அதானி குழுமத்தின் புள்ளிகள் விண்ணை முட்டும் வேகத்தில் சென்றது. இவர்களின் லாபவெறிக்கு இந்த ஏற்றம் போதாதது தான். இப்போது இறங்க ஆரம்பித்துவிட்டது. பட்ஜெட்டிற்கு முன் நேரடி தாக்குதலை தொடுத்த மோடி அரசு பட்ஜெட்டில் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவான நடவடிக்கையை மேற்கொள்வார். குறிப்பாக நிதி மூலதனம் சார்ந்த தாராளமயக் கொள்கைகள் குறித்த சீர்திருத்தங்கள் தொடங்கும் என  கார்ப்ரேட் முதலாளிகள் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள். பணவீக்கம்  ஏறத் தொடங்கிவிட்டது.
 2014 ஏப்ரலில் 5.2 சதமாக இருந்தது மே மாதத்தில் 6.01 சதமாகவும், தற்போது 7 சதத்தினை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மறுபுறம் நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண் வளர்ச்சி அதிகரித்ததன் விளைவு விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது.  குறிப்பாக பழங்கள், முட்டை, மீன், இறைச்சி, உருளைக்கிழங்கு போன்ற பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன். மீண்டும் வெங்காயம் டில்லியை ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் பணவீக்கம் 3.6 சதவீதம் வரை உயர்ந்து மொத்தமாக 9.5 சதத்தினை தாண்டி விட்டது. 
இந்த பணவீக்கம் கடுமையாக ஏழை எளிய சாமான்யப்பட்ட மக்களை கடுமையாக பாதிப்பதால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான கிராக்கி அழியாமல் தேக்கத்தை நோக்கி செல்லும் நிலையும், விவசாய உற்பத்தித்துறை கடும் பாதிப்பை நோக்கி செல்வதால் பணபுழக்கம் சுத்தமாக நின்றுபோகும் அபாயமும் உருவாகிவிடும் என்று தங்கள் லாப விகிதம் குறைந்துவிடுமோ என இந்திய கார்ப்ரேட்கள் கவலை கொள்ள துவங்கியுள்ளனர். இதனால் நிதி சீர்திருத்தம் தங்களுக்கு சாதகமாக செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதனால் நிதி அமைச்சர் இப்போதே நுகர்வோருக்கு சலுகை கொடுப்பதாக சொல்லி மொத்த ஆட்டோ மொபைல் துறைக்கும் சலுகையை பட்ஜெட்டிற்கு முன்பே அறிவித்துவிட்டார். 
இத்தகைய நிலையில்தான் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மோடி அறிவித்துள்ளார். ஏற்கனவே காங்கிர° ஆட்சிக்காலத்தில் மன்மோகன் சிங் காலத்தின் கடைசி மூன்றாண்டுகளில் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் நிதிப்பற்றாகுறை என அறிவித்தார்கள். ஆனால் அந்த பணம் முழுவதும் இந்தியாவின் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரி சலுகையின் அளவைவிட குறைவான தொகையே ஆகும். அவர்களுக்கு வழங்காமல் இருந்திருந்தால் இந்த பற்றாகுறையே வந்திருக்காது. பிஜேபி, காங்கிர° இரண்டும் சேர்ந்துதான் இந்த நிதி சலுகையை கார்ப்ரேட்களுக்கு வழங்கியது. தற்போது மாநிலங்களவையில் பிஜேபிக்கு போதிய பலம் இல்லை என்ற காரணத்தினால் நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தை நடத்தி அதில் ஒப்புதல் பெற்றுவிடலாம் என குறுக்குவழியை மோடி அரசிற்கு அம்பானி வகையறாக்கள் போதனை செய்ய துவங்கிவிட்டார்கள். 

நிதி நிலையை சரி செய்ய வேண்டும் என்றால் இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பும், உலக வங்கியும் பல பரிந்துரைகளை மோடி அரசுக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக  டீசலுக்கான மானியம், சமையல் எரிவாயு மானியம், மண்ணெண்ணெய் மானியங்களை குறைத்து மாத மாதம் விலையேற்றுவது, உணவு பாதுகாப்பிற்கான சேமிப்பு கிடங்குகளை முழுமையாக தனியார் வசம் ஒப்படைப்பது,
 உணவு பாதுகாப்பை ஒழிப்பது, நில கையகப்படுத்தும் சட்டத்தினை திருத்துவது, 100 நாள் வேலைதிட்டத்தை சீரழிப்பது,  வேளாண் பொருட்கள் மானியத்தை குறைப்பது, வங்கிகளை இணைத்து மையவங்கிகளாக மாற்றி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது, எல்ஐசி போன்ற நிறுவனங்களின் பங்குகளை அதிகளவில் விற்பது, ரசாயன உர மானியங்களை வெட்டுவது என ஏராளமான பரிந்துரைகளை வாரி வழங்கியுள்ளன.
இதற்காக மோடியின் வாயின் மூலம் “ ஊழல், திறமையற்ற நிர்வாகம்,  முடிவவெடுப்பதில் நிச்சயமற்ற நிலை’’ என மன்மோகன் சிங்கின் ஆட்சி இருந்தது. இதற்கு மாற்றாக ஊழலற்ற, திறமையான, முடிவெடுப்பதில் பிஜேபி மோடி அரசு இருக்கும் என பிரச்சாரம் செய்து, 99 சதம் ஏழை மக்களை நம்பவைத்தனர். மயங்கியதில் கணிசமாக மத்தியதரவர்க்கத்தினரும், இளைஞர்களுமே ஆகும். இவர்களின் வாயை அடைக்க வேண்டும் என்றால் ஆட்சிக்கு வந்து 30நாள் தானே ஆச்சு,.. அதற்குள் என்ன அவசரம் என்று பல்லவியை பாட ஆரம்பித்துள்ளனர்.
 மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கிவிட்டு இதில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேறு பிரச்சனைகளை கிளப்பிவிட்டு அதில் குளிர்காயும் நடவடிக்கையாக இந்தித் திணிப்பு, காஷ்மீருக்கான 370 சரத்து, பொது சிவில் சட்டம், சிறுபான்மையினர் குறித்து, ராமருக்கு கோவில் கட்டுவது என அறிவித்து மக்களின் அடிப்படை தேவைகள் குறித்த பிரச்சனைகளை திசைதிருப்பும் நடவடிக்கை தங்களது வகுப்புவாத நிகழ்ச்சிநிரலோடு  இணைந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
16 மக்களவையில் தேர்வு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 442 பேர் கோடீ°வரர் களாகவும், பிஜேபி உறுப்பினர்களில் 282 பேரில் 230க்கும் மேற்பட்டோர் கோடீ°வரர்களாக உள்ள நிலையில் அவர்களுக்கு இந்த பாதிப்பு எப்படி தெரியும். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களின் செல்லபிள்ளைகளாக இருப்பதால் ஏழைகளின் அவல நிலை புரியாது. 
இன்றும் நாடு முழுவதும் 96 சதம் பேர் முறைசாரா தொழிலாளர்களாக எந்தவித சமூகபாதுகாப்பும், ஊதிய உயர்வும் இல்லாமல் 78 சதம் பேர் இந்தியாவில் மருத்துவத்திற்கு கூட கடன் வாங்கி வைத்தியம் பார்க்கும் நிலையே உள்ளது. எனவே அரசியலாக ஆர்எ°எ° என்ற மதவெறி அமைப்பின் உறுப்பாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடியின் அரசியல் ஒருசதம் இந்திய ஏகபோக முதலாளிகளின் ஆட்சியாகவே இருக்கப் போகிறது. அவர்களின் பொருளாதாரக் கொள்கை எந்த விதத்திலும் காங்கிர° கடைபிடித்த நவீன தாராளமயக் கொள்கைக்கு மாற்றாக இல்லை. 
எனவே இந்தியாவிலும் இந்த வலதுசாரி ஆட்சியாளர்களின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் 99 சதம் மக்களின் உரிமைகளை பாதுகாக்க கருத்தியல் ரீதியான பிரச்சாரங்களும், இயக்கங்களுமே இன்று வார்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான திசை வழியில் செல்ல வரலாற்றில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்வது அவசியமாகும். இப்போதே தமிழகத்தின் தந்தி டிவியில் நடத்திய கருத்துக்கணிப்பில் மக்கள் 30 நாள் மோடி அரசிற்கு சான்று கொடுத்துவிட்டனர். 61 சதம் பேர் மோடியின் ஆட்சி கடுமையான அதிருப்தியை உருவாக்கி விட்டது. எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று,. 


No comments:

Post a Comment