”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

குட்டி ஜப்பான் திருப்பூர்

தேசம் என்பது மண் மட்டுமல்ல
மக்களும் கூடத்ததான்.



தமிழகத்தின் வேலைவாய்ப்பு களஞ்சியமென ( குட்டி ஜப்பான், டாலர் சிட்டி ) அனைவராலும் அழைக்கப்படும் திருப்பூர் தாலுhக்கா 21 ஊராட்சிகள், இரண்டு நகராட்சிகள், ஒரு மாநகராட்சியை உள்ளடக்கிய பகுதியாகும். ஏறத்தாழ 6.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.
இந்தியாவின் பின்னாலாடை தொழிலின் தலைநகரம் திருப்பூர் எனப்படுகிறது. தற்போது 2007 ஆம் ஆண்டு மட்டும் 1,12,000 கோடி ரூபாய் ஏற்றுமதி மூலம் பெறப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தைக்கு 14,000 கோடி ரூபாய் என்ற அளவில் தேவை உள்ள தொழிலாக பனியன் தொழில் வளர்ந்து வருகிறது.
தமிழகத்தின் தென், வட, மத்திய மாவட்டங்கள் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வேலை தேடி திருப்பூர் வருவது தொடர்ந்த வண்ணம் உள்ளது. இப்படி வாழ்க்கை தேடி இடம் பெயர்ந்த மக்களில் பெரும் பகுதியினர் 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் திருப்பூர் நகரத்தில் வசிக்கக்கூடிய நிலைமை உள்ளது. இதில் குறிப்பாக திருப்பூர் மாநகரத்தில் உள்ள 80க்கும் மேற்பட்ட குடிசைப்பகுதிகளில் சாதாரண ஏழை எளிய மக்களே வசிக்கும் நிலை உள்ளது.
திருப்பூர் மாநகராட்சியின் 2005 ஆம் ஆண்டு கணக்குப்படி இக்குடிசைப்பகுதிகளில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட குடும்பங்களும், 1.25 லட்சம் மக்கள் வாழும் நெருக்கடி மிக்க பகுதியாக உள்ளது. இங்கு வாழும் மக்கள் இட நெருக்கடியின் உச்சத்தில் வாழ வேண்டிய அவலத்தில் உள்ளது. இதன் விளைவு சிறிதான அறைக்கே கூட ஆயிரக்கணக்கான ரூபாய் வீட்டுவாடகை கொடுக்க வேண்டிய நிலையும், ஒரே வீட்டில் 6 பேர் 7 பேர் என வாழ்க்கை நடத்த வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த குடிசை பகுதிகள் நோய் நொடிகளின் உற்பத்தி மையங்களாக மாறும் அளவிற்கு மிகவும் மோசமான முறையில் சுகாதாரமற்று உள்ளது. திருப்பூரின் நொய்யல் ஆற்று அருகில் குடியிருப்பவர்கள் நிலைமை இன்னும் மோசமாக எந்த விதமான அடிப்படை கட்டமைப்புகளும் இல்லாத நிலையில் உள்ளது. கழிப்பறை, சாக்கடை, குடிநீர், சாலை, தெருவிளக்கு என்பது போதுமானதாக இல்லாத நிலை நீடிக்கிறது.
மேலும் கடும் இட நெருக்கடியோடு மக்கள் குவிமயமாக வாழும் நிலை உள்ளது. இதனால் பல ஆண்டுகள் குடியிருந்தும் வீட்டுமனைப்பட்டா இல்லாத நிலையில் எந்த விதமான அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் தான் பட்டா கேட்டு போராட்டம் என்றால் ஆயிக்கணக்கில் மக்கள் திரளும் நிலை உள்ளது. இதற்கு நல்ல உதாரணம் திருப்பூரில் கடந்த 2006ம் ஆண்டு செப்-21 தேதி அன்று நடைபெற்ற பட்டா கோரி மனு கொடுக்கும் போராட்டத்தில் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.
ஒரு தொழிலாளி தனது சம்பளத்தில் பெரும் பகுதியை வீட்டுவாடகைக்கும், உணவுக்கும், மருத்துவத்துக்கும் செலவு செய்யும் நிலையிலேயே இருக்கிறது. இதனால் தனது எதிர்கால சந்ததியை படிக்க வைக்க எந்த வித ஏற்பாடும் இல்லாமல் சிறு வயதிலேயே குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் நடைபெறுகிறது.
கல்வி என்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படை. இன்றைய சமூகத்தை மேம்பட்ட சமூகமாக மாற்றி வைக்கப்பட வேண்டும் என்றால் வாழ்க்கை குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாக, எதையும் அறிவியல் பூர்வமாக ஆராயக்கூடிய தன்மையையும், பண்பட்ட சமூகத்தை வளர்த்தெடுக்கவும், தனி மனித வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் பயன்படக்கூடிய வகையில் கல்வி என்பது வழங்கப்பட வேண்டும்.
இன்றைய நவீனத்தை உள்வாங்கிக் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் கல்வியை கொடுக்க வேண்டும். அதற்கு தேவையான தொழிற் நுட்ப அறிவை வழங்கக் கூடிய கல்விநிலையங்கள் திருப்பூர் நகரத்தில் உள்ளதா ? என்றால் இல்லை.
நுhற்றுக்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகள் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என திருப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ளது. இதில் ஆண்டு தோறும் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் வெற்றி பெற்று வெளிவரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 6000க்கும் மேற்பட்டவர்கள் ஆகும். ஆனால் திருப்பூர் தாலுhக்காவில் இரண்டு அரசு கலைக்கல்லுhரியும், இரண்டு தனியார் கலைக்கல்லுhரியும், ஒரு நர்சிங் கல்லுhரியும், ஆடை வடிவமைப்பு கல்லுhரியும், ஒரு தனியார் பொறியியல் கல்லுhரியும் திருப்பூர் நகரத்தில் உள்ளது.
இது ஆண்டு தோறும் உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் சேர்க்கை தகுந்த எண்ணிக்கையில் இல்லாத நிலையில்தான் உள்ளது. தமிழகத்தில் ஆரம்பக் கல்வியில் சேரும் 100 மாணவர்களில் 6 மாணவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு தகுதி பெறுகின்றனர். மீதி 94 பேர் பள்ளிகளில் பல்வேறு நிலைகளில் இடையில் பள்ளியை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான அடிப்படை காரணம் குடும்ப சூழல், பாடத்திட்டத்தில் உள்ள குளறுபடிகள், பாட திட்ட முறை, கல்விநிலையச்சூழல் ஆகியவையே இதற்கு காரணம் ஆகும். இன்றும் திருப்பூர் நகரத்தில் இயங்கும் பனியன் நிறுவனங்களில் உயர்நிலைப்பள்ளியில் படிக்க வேண்டிய மாணவர்கள் ஆயிரக்கணக்கில் அடுக்கி கட்டுதல், கைமடித்தல், ஒவர்லாக், பேட்லாக், காஜாபட்டன் டெய்லராக, உதவியாளராக சொற்ப சம்பளத்திற்கு பணிபுரியும் நிலை என்பது உள்ளது. அந்த இளம் சிறார்களின் கல்வி என்பது கனவாக போகியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் தான் படிக்கும் கல்விநிலையங்களில் ஆசிரியர் பற்றாகுறை, வகுப்பறை இல்லாமை, குடிநீர், கழிப்பிடம், சைக்கிள் நிறுத்தம், ஆய்வக அறை, விளையாட்டு மைதானம், நுhலகம் போன்ற எந்தவிதமான அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத நிலை இன்றும் நீடிக்கிறது. இந்த நிலைதான் மாணவர்களை படிப்படியாக பள்ளி இடைவிலகலை ஏற்படுத்துகிறது. மேலும் கல்வி நிலையங்களில் நிலவும் ஜனநாயக பூர்வமற்ற தன்மை என்பது மாணவர்களை சமூகத்தின் பால் அக்கறையற்ற நிலைமையையும், படிப்பின் மீதான வெறுப்புணர்வையும் பெரும் பகுதி உருவாக்குகிறது. இது பள்ளி இடைவிலகலை அதிகரிக்கிறது.
அனைவருக்குமான கல்வி என்பதை உறுதிப்படுத்த ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரையான அனைத்து நிலைகளிலும் மத்திய, மாநில அரசுகள் கூடுதலான நிதி ஒதுக்கிட வேண்டும். அதே போல் பல்லாயிரக்கணக்கான அன்னிய செலவாணி நிதியை அளிக்கக்கூடிய திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கூடுதலான உயர் கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டும்.
அதற்கு
1. திருப்பூர் வடக்கு பகுதியில் பெண்களுக்கென தனியாக ஒரு கல்லுhரியும், பள்ளியும் அமைக்கப்பட வேண்டும்.
2. அரசின் சார்பில் அரசு பொறியியல் கல்லுhரி, மருத்துவக்கல்லுhரி, பல்தொழில்நுட்ப கல்லுhரி போன்றவற்றை துவக்கிட வேண்டும்.
3. திருப்பூர் பின்னலாடை தொழிலை கணக்கில் கொண்டு நவீன ஆடை வடிவமைப்புக்காக ஒரு கல்லுhரி அரசின் சார்பில் துவக்கப்பட வேண்டும்.
4. பள்ளி, கல்லுhரி மாணவ மாணவிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பேருந்துகளிலும் காலை, மாலை நேரங்களில் இலவச பயணஅட்டை பயன்படுத்த அனுமதிப்பதோடு கூடுதலான பேருந்துகளை இயக்க வேண்டும்.
5. மாணவர்களின் பயன்பாட்டுக்கான பொது கலையரங்கம், விளையாட்டு அரங்கம், அறிவியல் பூங்கா போன்றவற்றை உருவாக்கிட வேண்டும்.
6. திருப்பூர் வடக்கு ஒன்றியப் பகுதியில் ஒரு கல்லுhரி அமைத்திடுவது.
7. ஜெய்வாபாய் போன்ற அதிக எண்ணிக்கையில் மாணவிகள் படிக்கும் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி கூடுதலான ஆசிரியர்களை நியமித்திட வேண்டும்.

No comments:

Post a Comment