”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

மோடியின் வாக்குறுதியும், வாய் ஜாலமும்



ராஜா வேஷம் போடும் மோடி
ஆட்சிக்கு வந்தால் குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவேன். இவர்கள் குறித்து காங்கிர° அரசு கவலை கொள்ளாமல் உள்ளது என்று தனது பிரதம வேட்பாளருக்கான முதல் பொதுக்கூட்டம் 2013 ஆக°ட் 11 ம் தேதி ஹைதாரபாத்தில் நடைபெற்ற போது மோடி பேசினார். ஆட்சிக்கும் வந்தார். 365 நாட்களை நாடகமாகவே நடத்தியும் காட்டிவிட்டார்.  இப்போது கரடி விடுகிறார். எனது ஆட்சிக்கு முன் இந்தியா சூனியமாகவே இருந்தது. இனி பிரளயமாக மாறும். ஆம் அவரின் ஒராண்டு ஆட்சிக்கால சாதனைகள் பத்திரிக்கைகளில் பட்டியல் இடும் போது ஏராளமான கருத்துப்படங்களும், காட்சிப்படங்களும் ஊலா வருகின்றன. இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களின் முதல் ஆண்டு ஆட்சி குறித்து இல்லாத அவ்வளவு விமர்சனங்கள் இவரின் மீது வைக்கப்பட்டுள்ளது. 

கருத்து கண்ணாயிரம்
தனது நாடாளுமன்ற உரையில் “இந்தியாவே முதன்மையானது என்பதே அரசின் மதம், அரசியல் சாசனமே அரசின் புனித நுhல், தேச பக்தியே அரசின் பக்தி, அனைவரின் நலன் என்பதே அரசின் பிராத்தனை, மத ரீதியில் அபத்தமான கருத்துக்களை தெரிவிப்பதை பிரதமர் என்கிற முறையில் என்னால் அனுமதிக்க முடியாது, மத ரீதியில் பாகுபாடு காட்டுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது, சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுக்க அதிகாரம் கிடையாது. வேற்றுமையில் நாடு உள்ளது. அதுதான் தனிமையும் கூட, தேசிய கொடியில் உள்ள மூன்று நிறமும் மட்டுமே தெரிகிறது. வேறு சிந்தனைகள் தெரிவதில்லை. ஆம் இப்படித்தான் உணர்ச்சிகரமாக இத்தாலியின் முசோலினியும், ஜெர்மனியின் ஹிட்லரும் பேசினார்கள். ஏன் ஹிட்லர் தன்னை சோசலி°ட் என்றும் கூட சொல்லிக் கொண்டார். இவர்களை அனைத்து கார்ப்ரேட்களும் ஆதரித்தார்கள். துதித்தார்கள், இவர்கள் தான் மாற்றத்தின் திறவுகோல் என்றார்கள்.  ஆனால் உழைக்கும் மக்களுக்கு ஒரு நாளும் விசுவாசமாக இருந்ததில்லை. பெரும் பகுதி மக்கள் தங்கள் வாழ்க்கையை இழப்பதற்கே காரணமானார்கள். 


இந்தியாவில் இருந்த போது காந்தி தேசதுரோகி, சுட்டுக்கொன்றது சரி என்று சொன்னால் கோபம் வராது. தனது கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த மாட்டார். வெளிநாடுகளில் காந்திய கொள்கைகளை உபதேசம் செய்து பசுந்தோல் போர்த்திக்கொள்வார். லவ் ஜிகாத் என்பார்கள், கப்வார்சி என்பார்கள், பொதுசிவில் சட்டம், அரசியல் சட்டபிரிவு 370 நீக்கம், காசி, மதுரா, அயோத்தியில் இந்து கோவில் மசூதியின் அடியில் உள்ளது. கோவில்களை மீட்க வேண்டும் என்பார்கள். ராமனுக்கு கோவில் கட்ட வேண்டும். மாட்டுக்கறி கூடாது. பசுவதை தடுப்பு, இந்த உடை அணியாதே, இந்த கடவுளை மட்டும் கூம்பிட்டால் இந்து. பகவத் கீதையை புனித நுhலாக ஆக்கி அரசியல் சட்டத்தை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்பார்கள். இந்த சர்ச்சைகள் அனைத்தும் எதற்காக ?.. ஒற்றை வரியில் சொன்னால் அது தான் அடையாளத்தின் பெயரால் உழைக்கும் மக்களை கூறு போடும் முழக்கங்கள்,. உழைக்கும் வர்க்கத்தை சீர்குலைக்கும் நடடிவக்கை,. 

வார்த்தைகளின் மன்னர் மோடி
°கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மே இன் இந்தியா, மேட் இன் இந்தியா, கிளீன் இந்தியா என வார்த்தைகள் மட்டும் புதிது புதிதாக வந்து விழுகிறது. இவற்றால் இந்திய நாட்டின் உழைப்பாளிகள் வயிறு நிறைகிறதா? கௌரவமான வாழ்க்கை கிடைத்தா? என்றால், வாமன அவதார கேள்வியாக விரிகிறது.  மோடியின் ஆட்சி வயதுக்கு வந்து ஒராண்டு ஆகிவிட்டது.  
ஒராண்டில் 18 வெளிநாடுகள் பயணம், பல லட்சம் கோடி அன்னிய மூதலிட்டை கொண்டு வந்துவிட்டேன் என்று சந்தோஷ பட்டுக்கொள்கிறார். தன்னை ஒரு ராஜா போல போகும் இடங்களில் எல்லாம் வேஷம் கட்டிக்கொண்டு பத்திரிக்கைகளுக்கு புகைப்படம் கொடுக்கும் நபராகவே காட்சி அளிக்கிறார் மோடி. 


குடிமக்கள் சமூகத்தில் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் உண்டு. இவர்களின் வர்த்ததைகள் அனைத்தும் 3ல் 2 பங்குள்ள இளைஞர்களை ஏமாற்ற பயன்படுத்துகிறார்கள். சரித்திரம் தேர்ச்சிகொள் என்ற பாரதி ரௌத்திர பழகு என்றார். இவர்கள் நடவடிக்கையை பார்த்தால் ரௌதிரம் பழக வேண்டியுள்ளது. ஆம், 

உள்ளதும் போச்சு
இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்கள், இளம்பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை போதுமான அளவு உருவாக்குவோம், அவர்கள் உழைப்பு சந்தையில் இணைய வேண்டும் என்றார். ஆனால் 1951ல் 29 கோடி ரூபாய் முதலீட்டில் 5 தொழில்கள் அரசுத்துறையில் துவங்கப்பட்டு அதன் இன்றைய மதிப்பு 239 நிறுவனங்களாக 4 லட்சம் கோடி ரூபாயாக விரிந்து பரந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. 


குறிப்பாக ( BHEL, BSNL, RAILWAY, COAL INDIA, ONGC, SAIL, NTPC, GAIL, HCL, IOC, MTNL ) ஆகிய 12 துறைகளில் மட்டும் 22 லட்சத்திற்கும் மேல் வேலைவாய்ப்புகள் உள்ளன. இவற்றில் பிரதானமாக  ( BSNL, COAL INDIA, RAILWAY )  3 துறைளில் மட்டும் 
17 லட்சம் வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால் மோடி இந்த ஓராண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை எம்டிஎன்எல் இணைப்பது, பொது ஏலங்களில் பங்கேற்க கூடாது, ரயில்வேயை தனியார்மயமாக்குவது, நிலக்கரி சுரங்கங்களை அவசர சட்டங்கள் மூலம் தனியாருக்கு கொடுத்தது என முடிவு எடுத்ததன் விளைவாக இந்த 17 லட்சம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. 

தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகள் நலனுக்காக மாற்றியதன் விளைவு ஏற்கனவே பணிநிரந்தர தன்மையற்ற நிலையில் இருந்தவர்கள் இன்று மேலும் பணிபாதுகாப்பற்ற, நிரந்தரதன்மையற்ற, உரிமைகளற்ற நிலையை நோக்கி, நித்திய ஆயுசு பூரண கண்டம் என்ற நிலையை நோக்கி செல்கின்றனர். மே இன் இந்தியாவின் முதல் இலக்கே நிரந்தர வேலைவாய்ப்புகளை அழிப்பது, ஒப்பந்த முறையில் பணியாற்ற வைப்பது, அத்துக்கூலி முறையை உருவாக்குவது, சமூக பாதுகாப்பு திட்டங்களை ஒழிப்பது என்பதே, இது தான் பெரும் முதலாளிகளும், கார்ப்ரேடுகளும் சொல்லும் முதல் உத்தரவு,. ஒப்பந்தம்.

வேலை தருவோம் மோ(ச)டி
ஆனால் மோடி மீண்டும் மீண்டும் ஒரு பொய்யை சொல்லிக்கொண்டே இருக்கிறார். உற்பத்தி சார்ந்த வேலைகள், தொழிற்சாலை உற்பத்தி, ஏற்றுமதி, அந்நிற மூதலிடு இந்த வார்த்தைக்கு பின்னால் உள்ள மோ(ச)டி என்ன? 2013ல் ஜவுளி மற்றும் அது சார்ந்த, தோல், உலோகம், ஆட்டோமொபைல்°, நகைகள், போக்குவரத்து, ஐடி/பிபிஓ, கைத்தறி, விசைத்தறி ஆகிய தொழில்களில் மட்டும் 4.19 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தது. 2014ல் மோடி பேசி உற்பத்தி சார்ந்த இந்த துறைகளில் மட்டும் 4.2 லட்சம் வேலைவாய்ப்புகளாக குறைந்துள்ளது. ஆம் எப்போதும் உண்மை கசக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 கோடி பேர் உழைப்பு சந்தைக்கு வந்துக்கொண்டே இருக்கிறார்கள். 4 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் என்பது போதுமானது தானா மோடி அவர்களே,. 10சதம் வளர்ச்சியை தருவோம் என்ற மோடியின் தொழில் உற்பத்தி துறையில் 2.3 சதமும், நிலக்கரியில் 1.4 சதமும், மின் உற்பத்தியில் 8 சதமும் என்ற அளவு இவர்கள் சொன்னதற்கு நேர்மாறான வளர்ச்சியாகும்.

இவர் சொன்ன அன்னிய முதலீடும் 75 பில்லியன் டாலர் அளவிற்கு இந்திய பங்கு சந்தைக்கு வந்தது. அதே நேரத்தில் 40பில்லியன் டாலர் அளவு ( 54 சதம்) வெளியேறியுள்ளது. இந்த வர்த்தகம் எந்த வேலைவாய்ப்பையும் உருவாக்காத வேலைவாய்பற்ற வளர்ச்சியாகும். 


நில எடுப்பு சட்டத்தின் படி புதிய வேலைவாய்ப்புகளாக 30கோடி பேர் பயன்பெறுவர் என்று ஜெட்லி கலாய்கிறார். ஆனால் வேறாக உள்ளது. கிராமப்புற வேலை உறுதிச்சட்ட அடிப்படையில் 2.27 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற மோடி ஆட்சியில் 1.1 கோடி பேர் 50 நாட்கள் மட்டுமே சராசரியாக வேலையை பெற்றுள்ளனர் என்பது மோடி என்ற மோசடி ஆட்சியை அம்பலமாக்கிறது.  விவசாயத்துறையிலும் சரிவே ஏற்பட்டுள்ளது. 2014ல் 3.7 சதமாக இருந்தது 2015ல் 1.1 சதமாக சரிந்துள்ளது. இதனால் கணிசமான கிராமப்புற ஏழைவிவசாயிகள், விவசாயத்தொழிலாளிகள் கட்டுமானம் உள்ளிட்ட இதர தொழில்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் 5 கோடிக்கும் மேற்பட்டோர் விவசாய நிலங்களை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. 


இன்றைக்கு சகோதரர்களும், சகோதரிகளும் மிகக்குறைந்த சொற்ப சம்பளத்திற்கும், இடப்பெயர்வுக்கும் ஆளாகிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் தேர்வு செய்யும் வாழிடம் மிக மோசமான நிலையிலேயே இருந்து கொண்டு இருக்கிறது. அவர்கள் வயிறுகள் பெரும் பகுதி காய்ந்து கொண்டே இருக்கிறது. மோடி சொல்கிறார். நிறைய கார்ப்ரேட்கள் வந்து சம்பாதித்தால் அவர்கள் சிந்தும் ஏராளமான பொருட்கள் நமது மக்களுக்கு பயன்படும். அவர்களாலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்ற கருத்தாக்கம் என்பதே,. 

தேம° நதிக்கரையில் உள்ள முதலைகள் தங்கள் தின்றுகொழுத்த மாமிச இறைச்சிகளின் துணுக்குகள் பல்லிடுக்குகளில் சிக்கி இருக்கும் போது அவற்றை சுத்தப்படுத்திக்கொள்வதற்காக நதிக்கரையின் ஒரத்தில் வாயை திறந்து வைத்திருக்குமாம். அங்கிருக்கும் பறவைகள் அந்த மாமிச துணுக்குகளை கொத்திதின்ணும். அப்போது முதலை வாயை முடினால் பறவைகள் கதி அதோ கதிதான். அந்த மாமிச துணுக்குக்களை உண்ணும் கூட்டமாக இந்திய உழைப்பாளி மக்களை மோடி சித்தரித்துக் கொண்டு இருக்கிறார்.  

மோடியின் 2015ல் கார்ப்ரேட்களில் பில்லியனர்கள் 55ல் இருந்து 100 ஆக உயர்ந்துள்ளனர். இக்காலத்தல் மட்டும் 34600 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளனர். முதல் 10 பத்து பணக்காரர்கள் 49 சதம் வளர்ச்சியை அடைந்துள்ளனர். மோடி ஆட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு 2014 மே மாதம் பெட்ரோலிய எண்ணெய் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 108 டாலருக்கு விற்ற போது இந்தியாவில் 64 ரூபாய் ஒருலிட்டர் பெட்ரோல். ஆனால் 2015 மே மாதம் 60 டாலர் ஒரு பேரல், ஆனால் இந்தியாவில் 70 ரூபாய்க்கு ஒரு லிட்டர் என்றால் இதன் லாபம் அனைத்தும் அம்பானி போன்ற பெரிய புள்ளிகளுக்கே செல்கிறது. 

 அனைத்திற்கும் மேல் ஒராண்டில் 18 லட்சம் கோடிரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்தில் தேங்கி இருக்கிறது. கையெழுத்திற்காக,. தான் கொடுத்த வாக்குறுதிகளை வசதியாக மறந்துவிடுகிறார். இவர் உண்மைக்கு நேர் எதிர் திசையில் பயணப்பட்டுக் கொண்டு உணர்ச்சிப் பூர்வமாக வார்த்தைகளை கொட்டி கொண்டுகிறார். இப்படி வாக்குறுதிகளை மறந்த மோடி ஆடை நெய்யும் கம்பெனிகளின் விளம்பரதராகவே இப்போதும் காட்சி அளித்துக் கொண்டு இருக்கிறார். மேற்கண்ட விசயங்கள் புலம்பலுக்கு அல்ல,. புரிதலுக்காக, இதற்கு மாற்றே இல்லையா? ஏன் இல்லை உழைக்கும் மக்களின் அரசியலை முன்னெடுக்கும் அரசியலும் இங்கு உண்டு, அதை ஆளும் வர்க்கத்திற்கு பிடிக்காது. ஆனால் சுரண்டப்படும் வர்க்கத்திற்கு பிடிக்கவேண்டும், சுரண்டலற்ற சமூகத்தைப்பற்றி பேசும் இடதுசாரி அரசியலை பற்றி புரிந்து கொள்வது இன்றைய தேவை.

நன்றி - இளைஞர் முழக்கம் ஜூன் , 2015

சிவாஜி விவசாயிகளின் மன்னன்

சிவாஜி கோன் ஹோட்டா ?- நாங்கள் பன்சாரேக்கள்  !

          ஒளரங்கசீப்பை எதிர்த்த ஒரே இந்து மன்னன் வீர சிவாஜி என்று இன்று வரை நமது பாடப்புத்தங்களும் போதித்து வந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் சிவாஜி என்ற அந்த பிம்பம் தாய் மகன் பாசம் மட்டுமல்ல, விவசாயிகளோடு, குடிமக்களோடு சம்மந்தப்பட்ட பிம்பம், மதவெறியர்கள் சொல்வதைப் போல் அவர் இந்து மதத்தின் பிரதிநிதியாக இருக்க வில்லை. உண்மையில் சிவாஜி யார்?


      ( சிவாஜி கோன் ஹோட்டா )  மஹாராஷ்டிராவின் அவர் வாழ்ந்த காலத்தில் அந்த பகுதி மக்களின் உரிமைகளுக்காக வாழ்ந்த மன்னாக விளங்கியவர் என்று  உண்மைகளை புட்டுப் புட்டு வைத்தார் கோவிந்த பன்சாரா. 

          சிவாஜி என்ற வாளேந்திய பிம்பத்தை வைத்து இளைஞர்களுக்கு தவறான சிந்தாந்த பயிற்சியை வழங்கி வரும் இந்துமுன்னணி, ஆர்எஸ்எஸ், சிவசேனா போன்றவைகள் மதவெறியை ஊட்டி வந்தன. இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள்   உள்ளிட்ட  அனைவரையும்  சிவாஜி  சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்களை நேசித்தவர். விவசாய நிலங்களை பாது காத்து விவசாயிகளுக்கு கொடுத்தவர். என்று தனது சிவாஜி கோன் ஹோட்டா என்ற சிறு புத்தகத்தின் மூலம் ஆதாரப்பூர்வமாக சிவாஜியின்  பிம்பத்தை மாற்றி அமைத்ததை  மதவெறி அமைப்புகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த புத்தகம் 2 லட்சத்தை தாண்டி விற்பனையானது. மக்களிடையே கேள்விக்கணைகளை உருவாக்கியது.  சிவாஜியின் படையில் 35 பட்டாலியன் இஸ்லாமியர்கள் படை இருந்தது என்பது வரலாற்று உண்மை.,  

          மேலும்  வெள்ளையனை வெளியேற்ற வெகுமக்களை திரட்டியதில் முக்கிய பங்காற்றிய  தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சிலை வைக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. அந்த காந்தியை கொன்ற கோட்சேவிற்கு சிலை வைக்க அடிவருடிகளை வைத்து கோரிக்கை வைத்து கொண்டு இருக்கிறது மோடி அரசு. இதை கண்டித்து தொடர்ச்சியாக குரல்கொடுத்தவர். அதனால் அவருக்கு ஒரு எச்சரிக்கை வந்தது. “தும்ச்சா தபோல்கர் காரு’’ ( தபோல்கருக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் ) என்று, எச்சரிக்கையை மதிக்கவில்லை.  மதவெறியர்களின் ஆட்சியில் சுதந்திரமாக நீ பேசிவிட முடியுமா? என்று சுட்டு கொன்று இருக்கிறார்கள் சகா.பன்சாரே அவர்களை. 

           தோழர். பன்சாரே வெறும் சமூக சீர்திருத்த கருத்துக்களை மட்டும் முன்வைத்திருக்கவில்லை. உழைக்கும் மக்களின் தலைவராக, பீடித்தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவராக பரிணமித்தவர். அதனால் தான் மொத்த மஹாராஷ்டிராவும் ஒரு நாள் பந்த் நடத்தி தனது அஞ்சலிiயும், மதவெறியர்களுக்கு கண்டனத்தையும் பதிவு செய்தது.

          நரேந்திர தபோல்கர்  பிள்ளையார் பால் குடித்ததாக வதந்தி பரவியபோது அதை இல்லை என ஆதாரத்தோடு மறுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அறிவியல் பூர்வமான உண்மைகளை வைத்து தனது வாழ்நாள் முழுவதும் மூடநம்பிக்கைகளுக்கு கொள்ளி வைத்தவர் தபோல்கர். அவரின் படுகொலையன்று மராட்டியத்தின் வீதிகளில் அண்ணா, அண்ணா என்ற சத்தம் தான் அதிகம் கேட்டது. தற்போது நாங்கள் நரேந்திர தபோல்கர்கள், நாங்கள் பன்சாரேக்கள் என்ற முழக்கம் தான் தற்போது அதிகம் கேட்க ஆரம்பித்துள்ளது.  மூடநம்பிக்கைக்கு எதிராக பலியான இந்த இருவரின் முதல்பெயர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே. நம்பிக்கை பெயர்களில் அல்ல, செயல்களில் மட்டுமே என நிலைநிறுத்தியுள்ளனர்.

          மூலைகரம் வரி, பிராமணர்கள் வரும் போது தாழ்த்தப்படடவர்கள் எதிரில் வரக்கூடாது, கட்டிடங்கள் கட்டும் போது களப்பலிக் கொடுப்பது, பெண்ணுக்கு திருமண மாகவில்லையென்றால் தோஷம் கழிக்க திருமண முறைகள், பொட்டு கட்டி விடுதல், தேவதாசி முறை, விதவை திருமண எதிர்ப்பு, பால்யவிவாகம், விதவைகளுக்கு மொட்டையடித்தல், உடன்கட்டை ஏறுதல், சதிக்கொடுமை, கடவுள் நம்பிக்கை பெயரால் தாவரம், விலங்கு, கற்களை வணங்குதல்  என்ற மூட நம்பிக்கைகள் பல நுhறு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த மூட நம்பிக்கைகளை  எதிர்த்து தான்  ஏராளமான சமய சீர்த்திருத்தவாதிகள் போராடியுள்ளனர்.

          ஒரு தபோல்கரும், ஒரு பன்சாரேவும் மட்டுமா? இல்லை  இராமனுஜர், இராஜாராம்மோகன்ராய், தயானந்த சர°வதி, வள்ளலார், ராமகிருஷ்ண பரம்ஹம்சர், வைகுந்தர், விவேகானந்தர், ஜோதிராவ் பூலே, ஸ்ரீ நராயணகுரு,  லாலாலாஜபதிராய், திலகர் இவர்கள் எல்லோரும் இந்து சமய ஆன்மிகவாதிகள், இவர்கள் எல்லோரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் கண்மூடிதனமான சா°திரங்கள் பொய்யாக போகட்டும் என்றவர்கள். வள்ளலார் சாதி சமயம் பொய் என்றார்.  பசித்தவனிடம் பகவத்கீதையை பேசாதே, சாப்பிட இரண்டு ரொட்டி துண்டு கொடு என்றார் விவேகானந்தர். 

          இன்றும் சமூக போராளி பாவண்ணா வாழ்ந்த கர்நாடகத்தில்,  சுட்ட பழம், வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என ஒளவையிடம் நாகரிகமாக தமிழ் கடவுள் முருகன் கேட்டதாக கந்தபுராணம் கூறுகிறது. அந்த முருகன் கோவிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையின் மீது தலித்கள் படுத்து உருண்டால் தோல் நோய்கள் போய்விடும் என்று சொல்வது கொஞ்சமும் பகுத்தறிவுக்கு ஒப்பாகாத செயல். இதற்கு நீதிமன்றங்களும் இருவேறு தீர்ப்புகளை கொடுக்கிறது. தற்போது அறிவியல் பூர்வமாக ஆய்ந்து வழங்க வேண்டிய தீர்ப்புகளே நம்பிக்கை அடிப்படையில் வழங்கப்படுவது ஆபத்திலும் ஆபத்தானது.

          இத்தகைய மூடநம்பிக்கைதான் செவ்வாயிக்கு மங்கல்யான் அனுப்பினாலும் எலுமிச்சை கட்டி பூஜை செய்துதான் அனுப்ப வேண்டும் என திட்ட இயக்குனரே  செயல்படும் அளவிற்கு அறிவியல் பார்வை இல்லாத நிலை உள்ளது. இதனால்தான் நாட்டின் பிரதமர் தைரியமாக  பிளா°டிக் சர்ஜரி புராண காலத்திலேயே சாத்தியமாகிவிட்டது. அன்றே புஷ்பக விமானம் 16 வகையான இயந்திரங்களோடு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் வரலாற்றை திரித்து உண்மைக்கு மாறாக நரேந்திரமோடியே பேசினால் அவருக்கு கீழ் இருக்கும் சங் பரிவாரங்கள் எப்படி அறிவியலை வளர்க்கும். அதனால்தான் நோபல் பரிசு பெற்ற அமர்த்தய சென் நாளந்தா பல்கலைகழக துணைவேந்தராக நீடிக்கக்கூடாது என்ற நெருக்கடியும். அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக உள்ளது. இப்படி மூடநம்பிக்கையின் உச்சகட்டமாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதன் உச்சகட்டதான் இன்று இவர்கள் தேவதாசி முறையை சட்டமாக்கிவிடலாம் என சொல்லுமளவிற்கு சென்றுள்ளார்கள்.


          எனவே இன்றைய தேவையில் அறிவியல் பார்வை வளர்த்த சிந்தனை சிற்பி சிங்காரவேலரும், மகாகவி பாரதியும், ஜீவானந்தமும், இஎம்எஸ்ம், தபோல்கரும், பன்சேரேவும் தேவை. 

நன்றி /- இளைஞர் முழக்கம்