”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

சிவாஜி விவசாயிகளின் மன்னன்

சிவாஜி கோன் ஹோட்டா ?- நாங்கள் பன்சாரேக்கள்  !

          ஒளரங்கசீப்பை எதிர்த்த ஒரே இந்து மன்னன் வீர சிவாஜி என்று இன்று வரை நமது பாடப்புத்தங்களும் போதித்து வந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் சிவாஜி என்ற அந்த பிம்பம் தாய் மகன் பாசம் மட்டுமல்ல, விவசாயிகளோடு, குடிமக்களோடு சம்மந்தப்பட்ட பிம்பம், மதவெறியர்கள் சொல்வதைப் போல் அவர் இந்து மதத்தின் பிரதிநிதியாக இருக்க வில்லை. உண்மையில் சிவாஜி யார்?


      ( சிவாஜி கோன் ஹோட்டா )  மஹாராஷ்டிராவின் அவர் வாழ்ந்த காலத்தில் அந்த பகுதி மக்களின் உரிமைகளுக்காக வாழ்ந்த மன்னாக விளங்கியவர் என்று  உண்மைகளை புட்டுப் புட்டு வைத்தார் கோவிந்த பன்சாரா. 

          சிவாஜி என்ற வாளேந்திய பிம்பத்தை வைத்து இளைஞர்களுக்கு தவறான சிந்தாந்த பயிற்சியை வழங்கி வரும் இந்துமுன்னணி, ஆர்எஸ்எஸ், சிவசேனா போன்றவைகள் மதவெறியை ஊட்டி வந்தன. இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள்   உள்ளிட்ட  அனைவரையும்  சிவாஜி  சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்களை நேசித்தவர். விவசாய நிலங்களை பாது காத்து விவசாயிகளுக்கு கொடுத்தவர். என்று தனது சிவாஜி கோன் ஹோட்டா என்ற சிறு புத்தகத்தின் மூலம் ஆதாரப்பூர்வமாக சிவாஜியின்  பிம்பத்தை மாற்றி அமைத்ததை  மதவெறி அமைப்புகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த புத்தகம் 2 லட்சத்தை தாண்டி விற்பனையானது. மக்களிடையே கேள்விக்கணைகளை உருவாக்கியது.  சிவாஜியின் படையில் 35 பட்டாலியன் இஸ்லாமியர்கள் படை இருந்தது என்பது வரலாற்று உண்மை.,  

          மேலும்  வெள்ளையனை வெளியேற்ற வெகுமக்களை திரட்டியதில் முக்கிய பங்காற்றிய  தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சிலை வைக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. அந்த காந்தியை கொன்ற கோட்சேவிற்கு சிலை வைக்க அடிவருடிகளை வைத்து கோரிக்கை வைத்து கொண்டு இருக்கிறது மோடி அரசு. இதை கண்டித்து தொடர்ச்சியாக குரல்கொடுத்தவர். அதனால் அவருக்கு ஒரு எச்சரிக்கை வந்தது. “தும்ச்சா தபோல்கர் காரு’’ ( தபோல்கருக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் ) என்று, எச்சரிக்கையை மதிக்கவில்லை.  மதவெறியர்களின் ஆட்சியில் சுதந்திரமாக நீ பேசிவிட முடியுமா? என்று சுட்டு கொன்று இருக்கிறார்கள் சகா.பன்சாரே அவர்களை. 

           தோழர். பன்சாரே வெறும் சமூக சீர்திருத்த கருத்துக்களை மட்டும் முன்வைத்திருக்கவில்லை. உழைக்கும் மக்களின் தலைவராக, பீடித்தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவராக பரிணமித்தவர். அதனால் தான் மொத்த மஹாராஷ்டிராவும் ஒரு நாள் பந்த் நடத்தி தனது அஞ்சலிiயும், மதவெறியர்களுக்கு கண்டனத்தையும் பதிவு செய்தது.

          நரேந்திர தபோல்கர்  பிள்ளையார் பால் குடித்ததாக வதந்தி பரவியபோது அதை இல்லை என ஆதாரத்தோடு மறுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அறிவியல் பூர்வமான உண்மைகளை வைத்து தனது வாழ்நாள் முழுவதும் மூடநம்பிக்கைகளுக்கு கொள்ளி வைத்தவர் தபோல்கர். அவரின் படுகொலையன்று மராட்டியத்தின் வீதிகளில் அண்ணா, அண்ணா என்ற சத்தம் தான் அதிகம் கேட்டது. தற்போது நாங்கள் நரேந்திர தபோல்கர்கள், நாங்கள் பன்சாரேக்கள் என்ற முழக்கம் தான் தற்போது அதிகம் கேட்க ஆரம்பித்துள்ளது.  மூடநம்பிக்கைக்கு எதிராக பலியான இந்த இருவரின் முதல்பெயர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே. நம்பிக்கை பெயர்களில் அல்ல, செயல்களில் மட்டுமே என நிலைநிறுத்தியுள்ளனர்.

          மூலைகரம் வரி, பிராமணர்கள் வரும் போது தாழ்த்தப்படடவர்கள் எதிரில் வரக்கூடாது, கட்டிடங்கள் கட்டும் போது களப்பலிக் கொடுப்பது, பெண்ணுக்கு திருமண மாகவில்லையென்றால் தோஷம் கழிக்க திருமண முறைகள், பொட்டு கட்டி விடுதல், தேவதாசி முறை, விதவை திருமண எதிர்ப்பு, பால்யவிவாகம், விதவைகளுக்கு மொட்டையடித்தல், உடன்கட்டை ஏறுதல், சதிக்கொடுமை, கடவுள் நம்பிக்கை பெயரால் தாவரம், விலங்கு, கற்களை வணங்குதல்  என்ற மூட நம்பிக்கைகள் பல நுhறு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த மூட நம்பிக்கைகளை  எதிர்த்து தான்  ஏராளமான சமய சீர்த்திருத்தவாதிகள் போராடியுள்ளனர்.

          ஒரு தபோல்கரும், ஒரு பன்சாரேவும் மட்டுமா? இல்லை  இராமனுஜர், இராஜாராம்மோகன்ராய், தயானந்த சர°வதி, வள்ளலார், ராமகிருஷ்ண பரம்ஹம்சர், வைகுந்தர், விவேகானந்தர், ஜோதிராவ் பூலே, ஸ்ரீ நராயணகுரு,  லாலாலாஜபதிராய், திலகர் இவர்கள் எல்லோரும் இந்து சமய ஆன்மிகவாதிகள், இவர்கள் எல்லோரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் கண்மூடிதனமான சா°திரங்கள் பொய்யாக போகட்டும் என்றவர்கள். வள்ளலார் சாதி சமயம் பொய் என்றார்.  பசித்தவனிடம் பகவத்கீதையை பேசாதே, சாப்பிட இரண்டு ரொட்டி துண்டு கொடு என்றார் விவேகானந்தர். 

          இன்றும் சமூக போராளி பாவண்ணா வாழ்ந்த கர்நாடகத்தில்,  சுட்ட பழம், வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என ஒளவையிடம் நாகரிகமாக தமிழ் கடவுள் முருகன் கேட்டதாக கந்தபுராணம் கூறுகிறது. அந்த முருகன் கோவிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையின் மீது தலித்கள் படுத்து உருண்டால் தோல் நோய்கள் போய்விடும் என்று சொல்வது கொஞ்சமும் பகுத்தறிவுக்கு ஒப்பாகாத செயல். இதற்கு நீதிமன்றங்களும் இருவேறு தீர்ப்புகளை கொடுக்கிறது. தற்போது அறிவியல் பூர்வமாக ஆய்ந்து வழங்க வேண்டிய தீர்ப்புகளே நம்பிக்கை அடிப்படையில் வழங்கப்படுவது ஆபத்திலும் ஆபத்தானது.

          இத்தகைய மூடநம்பிக்கைதான் செவ்வாயிக்கு மங்கல்யான் அனுப்பினாலும் எலுமிச்சை கட்டி பூஜை செய்துதான் அனுப்ப வேண்டும் என திட்ட இயக்குனரே  செயல்படும் அளவிற்கு அறிவியல் பார்வை இல்லாத நிலை உள்ளது. இதனால்தான் நாட்டின் பிரதமர் தைரியமாக  பிளா°டிக் சர்ஜரி புராண காலத்திலேயே சாத்தியமாகிவிட்டது. அன்றே புஷ்பக விமானம் 16 வகையான இயந்திரங்களோடு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் வரலாற்றை திரித்து உண்மைக்கு மாறாக நரேந்திரமோடியே பேசினால் அவருக்கு கீழ் இருக்கும் சங் பரிவாரங்கள் எப்படி அறிவியலை வளர்க்கும். அதனால்தான் நோபல் பரிசு பெற்ற அமர்த்தய சென் நாளந்தா பல்கலைகழக துணைவேந்தராக நீடிக்கக்கூடாது என்ற நெருக்கடியும். அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக உள்ளது. இப்படி மூடநம்பிக்கையின் உச்சகட்டமாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதன் உச்சகட்டதான் இன்று இவர்கள் தேவதாசி முறையை சட்டமாக்கிவிடலாம் என சொல்லுமளவிற்கு சென்றுள்ளார்கள்.


          எனவே இன்றைய தேவையில் அறிவியல் பார்வை வளர்த்த சிந்தனை சிற்பி சிங்காரவேலரும், மகாகவி பாரதியும், ஜீவானந்தமும், இஎம்எஸ்ம், தபோல்கரும், பன்சேரேவும் தேவை. 

நன்றி /- இளைஞர் முழக்கம் 

No comments:

Post a Comment