”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

மக்களின் காதலர்கள் மார்க்சிஸ்டுகள் !

யுத்தமில்ல உலகை கட்டுவோம்..


பூமிபந்தில் மனிதன் நலமாக வாழவேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. குறிப்பாக யுத்த வெறிக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. 1939 ஆம் ஆண்டு தொடங்கி 1945 ஆம் ஆண்டுவரை ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் நடந்த இரண்டாவது உலகப் போரின் போது ஜெர்மன், இத்தாலி ஜப்பான் ஆகிய நாடுகள் சரணடையும் தருணத்தில் அமெரிக்கா தான் கண்டுபிடித்த அணுகுண்டுகளை பயன்படுத்த வேண்டும் என்ற வெறி இதற்கு என்ன காரணம்.மேலும்,  இரண்டாம் உலக போருக்கு முன்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உலகின் பெரும் பகுதி நாடுகளை ஆண்டது இவர்களது கட்டுப்பாட்டில் ஏராளமான நாடுகளை வைத்திருந்தனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விட நான் பெரிய ஆள் என்று அமெரிக்கா காண்பிக்க நினைத்தது.பதநாடுகளின  இரண்டாம் உலகப் போரை முழுமையாக நடத்தியவர் ஹிட்லர். இந்த ஹிட்லரை தோற்கடித்தது ஸ்டாலின் தலைமையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியாகும்.  எனவே சோவியத்நாட்டை விட பெரியவன் என காட்டிக் கொள்ள

 நினைத்தது, ஜப்பான் நாடு சரணடையும்  சூழ்நிலையில், ஜப்பானிய முக்கிய நகரம் ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்கள் மீது பேட்மேன் லிட்டில் பாய் என பெயர் வைத்த இரண்டு அணுகுண்டுகளை அமெரிக்கா வீசியது. ஒரு குண்டின் எடை 20 ஆயிரம் டன் இன்னொரு குண்டின் எடை 15 ஆயிரம் டன், போட்ட ஒரு நொடிக்குள் பல ஆயிரக்கணக்கான மனித உடல்கள் சாம்பலாகி காற்றில் கறைந்துவிட்டது. இன்று இது போன்று 5500 அணுகுண்டுகளை கையில் வைத்துகொண்டு அமெரிக்கா உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுக்கின்றது.

மேலும் ஜப்பான் மீது அன்று போட்ட அணுகுண்டின் தாக்கம் இன்றும் ஜப்பானில் அணுகுண்டு கதிர் வீச்சு களால் பிறக்கும் குழந்தை மாற்றுத் திறனாளிகளுக்கான பிறக்கின்றது. 

1945 க்கு பிறகு 2500 அணுஆயுதப் பரிசோதனை பல நாடுகள் நடத்தியுள்ளனர். 1945 பிறகு ஏராளமான போர்கள் நடந்துள்ளது. கொரியா ஆப்கான், சிரியா, லெபனான், ஈரான், ஈராக், பல நாட்டின் மீது போர்கள் நடந்துகொண்டே இருக்கிறது. ஏகாதிபத்திய வெறியின் காரணமாக பல நாடுகளின் மீது ஏராளமான அனுகுண்டுகள் வீசப்பட்டன. குறிப்பாக வியட்நாம் நாட்டின் மீது 75 இலட்சம் டன் குண்டுகள் வீசப்பட்டன. கட்டிடங்கள் விளைநிலங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டன. 

இதே போன்று தான் அமெரிக்கா பல நாடுகளின் மீது குண்டு வீசியது. கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைன்னுக்கும் ரஷ்யாவுக்கும் போர் நடந்து கொண்டிருக்கிறது. வருடத்திற்கு 20 இலட்சம் பீரங்கி குண்டுகளை ரஷ்யா உக்ரைன்மீது வீசுகிறது. இதன் விளைவு என்ன மக்களின் அற்புதமான கட்டிட கலை, வாழ்விடம், கல்விகூடம் , மருத்துவமனைகள்,  வீடுகள் அழிக்கப்பட்டது. இதனை மீட்டுருவாக்கம் செய்ய பல பத்தாண்டுகள் ஆகும். இதனை உருவாக்க பொருளாதரம் தேவை. 

உலகம் முழுவதும் போர் நடக்கும் பகுதிகளில் பதட்டத்தில் 45 கோடி குழந்தைகள் வாழ்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாது. ஈரான் பள்ளியில் 110 குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசுகிறது இந்த அடவாடியை இந்திய நாட்டின் பிரதமர் மோடி கண்டிக்கவில்லை. இஸ்ரேலின் அடவாடியை கண்டித்து இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் போராட்டம் நடத்துகின்றனர்.

உலக நாடுகளின்  சமீபத்தில் நடந்த யுத்தத்தில் மட்டும் 3 கோடி மக்கள் இறந்துள்ளனர். உலகம் முழுவதும் இராணுவத்திற்கு ஏராளமான செலவு செய்கின்றனர். ஒரு மனிதனுக்கு உணவு கல்வி மருத்துவம் தொழில்நுட்ப அறிவு சாதனங்களை மக்களிடம் கொண்று சென்று விட்டால் போர் நடத்த வேண்டிய அவசியமில்லை. ஈரானுக்கு அமெரிக்காவுக்கும் போர் நடந்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏறுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது. தங்கம் விலை ஏறுகிறது. இதற்கு யார் காரணம். விவசாயிகள் விலை பொருட்களுக்கு கட்டுப் படியான விலை இல்லை. இதற்கு எல்லாம் என்ன காரணம் ஏகாதிபத்திய வெறியில் போர் நடந்தால் நம் நாட்டில விலைவாசி உயர்கிறது. எனவே தான் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் இவர்களோடு கைகோர்க்கும் கார்பரேட் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள்  போராட்டம் நடத்துகின்றனர். ஆகவே யுத்தவெறி என்பது எல்லோருக்கும் அபாயமானது. 

நம் வீடு குழந்தைகள் படித்து மருத்துவம் பொறியாளர் என படிக்க நினைக்கின்றனர். இந்த படிப்புகளை படிக்க நீட் க்யூட், க்ளாட், நெட், டெட் என பல்வேறு தகுதி என்ற பெயரில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று படிப்பில்சேர்கின்றனர். இந்த பட்டப் படிப்பு முடித்த பிறகு வேலை கேட்டால் நெக்ஸ்ட் தேர்வு எழுத வேண்டும் என்கின்றனர் இதனை படித்து தேர்ச்சி பெற்ற பிறகும் வேலை கேட்டால் ஆட்சியாளரகள் வேலையை தேடி வருகிறோம் என்கின்றனர். வடநாட்டில் மட்டும் நீட் தேர்வால் தனது மருத்துவ படிப்பு கிடையாது என்ற சூழலில் 22 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்துகல்வியில் மாற்றம் வேண்டும் என்று சொல்லி டில்லியில் 50 இலட்சம் மாணவர்கள் இளைஞர்கள் போராட்டம் நடத்தினால் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வுகானாமல் சொந்த நாட்டு மக்கள் மீது பெல்ட் குண்டு, கண்ணீர் புகை குண்டு, போட்டது ஒன்றிய சுமூகமாக பேசி தீர்க்க கூடிய பிரச்சனையை போலீஸ் துணை ராணுவத்தை கொண்டு தாக்கியதற்கு உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. 

நமக்கு பெல்ட் குண்டு தேவை இல்லை நமக்கு தேவை பேனா , அடுத்தவர்களுக்கு உதவும் மனிதநேய சிந்தனை உருவாக்கவேண்டும் 

தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது இளைஞர்களின் வேலை வாய்ப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை . 

எனவே இளைஞர்களுக்கு வேலை வழங்கும் நடவடிக்கைகளை மாநில அரசும் மத்திய அரசும் எடுக்க வேண்டும் உலகம் அமைதிபூங்காவாக மாறவேண்டும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் யுத்தங்கள் போர்களை தொலைந்து போகட்டும் யுத்தத்தை நடத்துகின்ற ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தை தகர்த்தெறிவோம் !

செ.முத்துக்கண்ணன்

No comments:

Post a Comment