”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

மோடிகளின் ராஜியத்தில் உய்யலலா-?


 அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தல் அத்தனையும் புழு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இன்று மத்தியில் ஆளும் பிஜேபி அரசை புட்டுபார்த்தல் அத்தனையும் புழுக்களாகத்தான் உள்ளது. இந்த நிமிடம் வரை தினமும் ஒரு அதிரடி குண்டை நாட்டை திசை திருப்பியவர்களுக்கு அவர்கள் கட்சிக்குள்ளேயே பட்டாசு வெடித்த வண்ணம் உள்ளது. ஆமாம் சோட்டா மோடியான ( லலித் மோடி ) உதவியதாக வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே  என பாம்பின் வாலை பிடிக்க அது தலை வரை சென்று கொண்டே இருக்கிறது.

சரி யார் இந்த லலித் மோடி என்று பார்த்தால் அவர் ஒன்றும் இந்திய நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திய ஆளா? இந்தியாவின் வரலாற்று ஆசிரியாரா-? இந்திய நாட்டின் மந்திரியா-? விடுதலைப்போராட்ட வீரரா? அறிவியல் விஞ்ஞானியா-? விவசாயா-? இராணுவ வீரரா-? யார் அவர் என்றால் இந்தியாவின் விளையாட்டுத்துறையில் ஒன்றான கிரிக்கெட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து 1700 கோடி ரூபாய் வரை ஊழல் செய்தவர் தான் இந்த லலித் மோடி.,


உபியை சேர்ந்த லலித் மோடி சிறுவயதில் இருந்தே விளையாட்டுதுறையின் மீது அமெரிக்கா செல்வதற்கான மோகம் கொண்டவராக இருந்தவர், பின்னர் அமெரிக்காவின் டர்ஹாம் நகரில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அவருடைய இளம்வயதில் பலவிதமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார் லலித் மோடி. கல்லூரி படிப்பின் போது போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும். ஆயுதம் வைத்திருந்ததாகவும் கடத்தலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். மன்னிப்பு கேட்டுக்கொண்டதை அடுத்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தியா திரும்பியதும் அப்பாவின் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றிய மோடி விரைவிலேயே மோடி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் பதவிக்கு உயர்ந்தார். 1992-ல் முன்னணிப் புகையிலை நிறுவனமானகாட்ஃபிரே பிலிப்ஸ்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகத் தேர்வுசெய்யப்பட்டார். சேட்டிலைட்களின் வளர்ச்சிக்காலமான 1990 களில் சர்வதேச கம்பெனியான வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் மோடி எண்டர்டெயின்மெண்ட் நெட்வொர்க்ஸ் என்ற பெயரில் 1993ல் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்தியாவில் தனது ஒளிபரப்பை துவக்கினார்.

குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தந்து கொண்டு இருந்த லலித்மோடிதான் வயது வந்தவர்களுக்கான எஃப் டிவியையும் பத்தாண்டுகளுக்கு ஒளிப்பரப்பு உரிமத்தை பெற்று  கல்லாவை நன்றாகவே கட்டினார். இளம் வயதிலிருந்தே தனக்கு பிடித்த விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்ப ஈ.எஸ்.பி.என் சேனலுடன் பத்தாண்டுக்கு ஒப்பந்தம் செய்து தனது பிடியை ஊடகத்துறையில் ஒரு படி உயர்த்திக் கொண்டார். 975 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தில் தனது பயணத்தை அடுத்த தளத்திற்கு விரிவுபடுத்தினார்.

கிரிக்கெட் வாரியத்தில் தனது திருவிளையாடலை துவக்கிய லலித் மோடிக்கு அதிகார வர்க்கமும் பக்கவாத்தியம் இசைத்தது. ஆம் 2004ல் ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் சேர்ந்தவர் குறுகிய காலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்துக்குள் ( பி.சி.சி.ஐ ) நுழைந்து அதன் துணைத்தலைவராக மாறிய 3 ஆண்டுக்குள் ஏழு மடங்கு பி.சி.சி.ஐ யின் வருமானத்தை வியாபாரத்தை பெருக்கி காட்டினார். 20 ஒவர் போட்டிகளை கண்டறிந்து ஜீ குழுமத்தின் மூலம் இந்தியன் கிரிக்கெட் லீக் எனும் பெயரில் கிரிக்கெட் வீர்ர் கபில்தேவ் உதவியுடன் ஒளிபரப்பப்பட்டது. இந்த போட்டிகளில் பல சர்வதேச ஆட்டகாரர்களும் பங்கேற்றனர். ஐ.சி.எல் தடையை தொடர்ந்து  ஐ.பி.எல் போட்டிகளை துவக்கி தனது நிலையை தக்க வைத்துக்கொண்டு 800 மில்லியன் டாலர் வருமானத்தை ஐபிஎல்க்கு உருவாக்கியதில் கிரிக்கெட் வாரியம், இந்திய நாட்டின் நடிகர்கள், தொழில் அதிபர்கன் போட்டி போட்டிக்கொண்டு அணிகளை ஏலம் எடுக்க ஆரம்பித்தனர். ஊடகங்கள் ஒளிபரப்பு உரிமைக்கு  பெரும் சூதாட்டைத்தையே நடத்தியது. இதன் உச்ச கட்டம்தான் சசிதரூர் கொச்சி அணியை ஏலம் எடுக்க 1200 கோடி வரை பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட சம்பவம் வெளியே வர ஆரம்பித்தது.

2009-ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த .பி.எல். போட்டிகளின்போது 27 வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதும். அது தெரிந்தும் முறைகேடுகளை லலித்மோடி தடுக்காமல் பணம் பார்ப்பதிலேயே குறியாக இருந்துள்ளார். போட்டிக்கான ஒளிபரப்பு உரிமம் வாங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது. அதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான ஒப்பந்தத்திற்கு சுமார் 500 கோடிரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. 2010 ஜூலையில் இன்றைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ஜோதிரா சிந்தியாவைக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை பி.சி.சி.. அமைத்தது. அக்குழு ஜூலை, 2013ல்  தனது 134 பக்க அறிக்கையில் ஊழல், முறைகேடு, பி.சி.சி.-க்கு அவப்பெயர் தேடித் தரும் வகையில் நடந்துகொண்டது உட்பட 8 புகார்கள் லலித் மோடி மீது தெரிவிக்கப்பட்டன. இதன் பின்னணியில் லலித்மோடிக்கு வாழ்நாள் தடையை பிசிசிஐ விதித்தது. இவ்விவகாரத்தில், சசி தரூர், சுனந்தா புஷ்கர் போன்ற பெயர்கள் அடிபட்டன. இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியை சசி தரூர் இழந்தார். லலித் மோடி மீது அமலாக்கத் துறை 16 வழக்குகளைப் பதிவுசெய்திருக்கிறது. இந்த வழக்குகள் அனைத்தும் அந்நியச் செலாவணி மோசடி தொடர்பான வழக்குகள்.

அமலாக்கத்துறையே 1700 கோடி ரூபாய் அபதாரம் விதிக்கும் அளவிற்கு நிலைமை சென்றது. மொரீஷியஸைச் சேர்ந்த நிறுவனத்திற்கு ரூ.5,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை போட்டு இருக்கிறார். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜேவின் மகனுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு, லண்டனில் தலைமறைவாக இருக்கும் லலித் மோடியின் நிறுவனம் ரூ11.63 கோடி கொடுத்திருப்பது தொடர்பாகவும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வந்து கொண்டு இருக்கிறது.

3வது ஐபிஎல் தொடர் சீசன் முழுமைக்கும், மும்பையில் உள்ள ஃபோர் சீஸன்ஸ் ஓட்டலில் வசுந்தரா ராஜே, சசி தரூர், ராஜிவ் சுக்லா, சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் குஷால் போன்றோர் தங்கியதற்கு மட்டும் ரூ. 1.56 கோடி செலவு முழுமையும் லலித்மோடிதான் செய்திருக்கிறார். ஒருபுறம் கம்பெனிக்கு உதவி, மறுபுறம் ஒட்டல் வாடகை செலவு, 25 ஆண்டுகால நண்பர், குடும்ப உறுப்பினர் எல்லாம் தனிப்பட்ட முறையில் இருந்தால் கதை வேறு.  

ஆனால் அரசின் வெளியுறவு செயலாளருக்கு. வெளியுறவுத்துறைக்கு தெரியக்கூடாது என்று ரகசியமாக லலித்மோடியின் மனைவிக்கு நோய் என்றால் அவருக்கு உதவி செய்யட்டும். ஆனால் லலித்மோடி இந்தியா கொண்டுவரப்பட வேண்டும் என்றல்லாவா இந்த சுத்த சுயம்புகள் சொல்லியிருக்க வேண்டும். திருடனுக்கு தேள் கொட்டியது போல் திருடனுக்கு உதவப் போய் மாட்டிக் கொண்டு சுஷ்மா விழிக்க, இன்னொரு புறம் இந்திய அரசுக்கே தெரியாமல் உதவிடுங்கள் என வசுந்தரா ராஜே மெயில் அனுப்ப மோசடித்தனத்தின் உச்ச கட்டம். மனிதாபிமானத்தின் அடிப்படையில் என்று சொன்னதை குழந்தையும் நம்ப மறுக்கிறது. உலகம் உரக்க சிரிக்கிறது.

50000 கோடி ரூபாய் சுரண்டப்பட்ட ரெட்டி சகோதரர்கள் வழக்கில் கர்நாடகவில் லோகாயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ரூ.16,000 கோடி சுரங்க ஊழல் முறைகேடுகளை வெளியே கொண்டுவந்தார் இதில் படா மோடி பிரதமரின் நண்பர் அதானியும் சம்மந்தபட்டுள்ளார். சட்ட விரோதமான இரும்புத் தாதுவை பெலகரே துறைமுகத்தின் வழியே கையாள அனுமதி கேட்டு லஞ்சம் கொடுத்ததாக அதானி என்டர்பிரைசஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அத்தோடு அந்நிறுவனத்தைத் தடைப் பட்டியலில் சேர்க்குமாறும் கூறியிருந்தது அறிக்கை. அந்த ரெட்டி சகோதரர்களின் ஆஸ்தான குருவாக இருந்தவர் சுஷ்மா சுவராஜ். அவர்கள் வீட்டின் மகாலட்சுமி பூஜையில் இருந்து அனைத்து விசேஷங்களிலும் பங்கேற்றவர்தான் உத்தமபுத்ரி சுஷ்மா.

சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் விரிவான பேட்டியை கொடுத்துள்ளார் லலித் மோடி அதில்சுஷ்மா என் குடும்ப நண்பர். அதைத் தாண்டி சட்டரீதியான (தொழில்ரீதியான) உறவும் எங்கள் குடும்பங்களுக்குள் இருக்கிறது. சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் 22 ஆண்டுகளாக எனக்குச் சட்ட ஆலோசனை வழங்கிவருகிறார். சுஷ்மாவின் மகள் பன்சூரி கடந்த 4 ஆண்டுகளாக எனது வழக்கறிஞராக இருக்கிறார்.” கூடவே, லலித் மோடி தனக்கும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும் இடையேயுள்ள 30 ஆண்டு உறவைப் பற்றியும் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.


அந்த லலித்மோடிக்கு 2014 மார்சில் லண்டனில் தொடர்ந்து குடியிருக்க குடியுரிமை கிடைத்தது. வெளிநாடு செல்வதற்கு விண்ணப்பித்த லலித் மோடியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மறுநாளே லண்டனின் கெய்த்வாஸ் எம்.பியின் உதவியை நாடி பக்கதுணைக்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவரது சகோதரர் ஆண்ட்ரூ ஆகியோரிடம் பேசியதாக லலித்மோடியே தெரிவிக்கிறார். இதன் பின்னணியில் தன் மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக போர்ச்சுகல் செல்ல பயண சான்றிதழ் கோரியுள்ளார். உண்மையில் பயண ஆவணங்களின்றி தன் சகோதரியின் திருமணத்தில் பங்கேற்க இயலாது. செஷ்ல்ஸ் தீவு அதிபர் உள்பட முக்கிய பிரமுகர்களை சந்திக்க முடியாது என இளவரசரிடம் தெரிவித்தற்கு அவர் உதவி செய்வதாக சொன்னதாக லலித் மோடி சொல்லி கெய்த் வாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சனையில் இந்திய நீதிபதிகள் யுசி பானார்ஜி, ஜீவன் ரெட்டி, எஸ்.பி. சின்கா, முன்னாள் மும்பை கமிஷனர் தியாகி ஆகியோரும் உதவியுள்ளனர். இதனை தொடர்ந்து சுஷ்மா சுவராஜ் லலித்மோடிக்கு பயணச் சான்றிதழ் பரிந்துரையின் பேரில் 24 மணி நேரத்தில் வழங்கப்பட்டுள்ளது

வசுந்தராவிடம் உதவி கோரியதையும் குறிப்பிட்டிருக்கிறார். வசுந்தரா மகனும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான துஷ்யந்த் சிங் சார்ந்த நிறுவனத்தில் லலித் மோடி சார்ந்த நிறுவனத்திலிருந்து சென்ற பணமும் கை மாற்றப்பட்ட பங்குகளும் சொல்கின்றன. லலித் மோடி இங்கிலாந்திலிருந்து போர்ச்சுகலுக்குச் செல்ல சுஷ்மா உதவியது ஒரு தேடப்படும் குற்றவாளிக்கு என்பதை தாண்டி மனிதாபிமான உதவி என்று சமாளிக்கிறது அரசு.  இந்த விஷயத்தில் அரசும் எங்கள் கட்சியும் அவருக்கு முழு ஆதரவாக நிற்கின்றன. இதில் எந்தச் சந்தேகத்துக்கும் இடமில்லைஎன்று கூட்டுப் பேட்டி அளிக்கின்றனர் அருண் ஜேட்லியும். ராஜ்நாத் சிங்கும்.

கோழி முட்டைக்கு வக்கு இல்லாததால் தானே காக்கா முட்டையை எடுத்து குடிக்கிறோம் என்று சமீபத்தில் வந்த திரைப்படம் ஒளியிழந்த இந்தியாவை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியது. இதே நேரத்தில் தான்   “சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் பணத்தின் அளவு ரூ.12,615 கோடி ( 10.6%) குறைந்துவிட்டது.” அதாவது, பணம் போட்டிருந்தவர்கள் பாதுகாப்பாக எடுத்துவிட்டார்களாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அடுத்த 100 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்போம் என்றும் ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்போம் என்ற வாய் ஜால படா மோடியின் ஆட்சியில் தான் இந்த கொஞ்சலும். குழாவலும் வெட்கமே இல்லாமல் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இதற்கு நிதி மந்திரியும், உள்துறை மந்திரியும் மட்டுமல்ல இவர்களின் தலைமை பீடமான ஆர்எஸ்எஸ்ம் வக்கலாத்து வாங்கி மனிதாபிமான உதவி என்று குட்டு உடைந்து பின்னரும் பியானாவை மொகாரி ராகத்தில் வாசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இப்ப அடுத்த பட்டாசு வெடிச்சுருச்சு., மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சங் பரிவார் அமைப்பினர் பலருக்கு தொடர்பு உள்ளது. அந்த வழக்கை விசாரிக்கும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ரோகினி சலியன், மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் குற்றவாளிகள் மீது மென்மையான போக்கு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

குஜராத் என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆதாரங்கள் இருப்பதாக சொல்லப்பட்ட அமித்ஷா தற்போது அந்த வழக்கில் ஆதாரம் இல்லை சிபிஐ யால் விடுவிக்கப்பட்டுள்ளார். கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ஆர்எஸ்எஸ் தலைவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு என அரசு அறிவிக்கிறது. ஆனால் பிரதமரின் மனைவியோ எனக்கு கொடுத்துள்ள பாதுகாப்பு படையில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்று புகார் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

இந்த பின்னணியில் தற்போது பிஜேபிக்குள் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போட்டியும். குழிபறிக்கும் படலமும் இந்த சம்பவங்கள் வெளிவந்ததாக சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் பிஎம்ஓ அலுவலகத்திற்கு தெரியாமல் நடக்க சாத்தியமில்லை என்கிறது ஒரு கூட்டம். மற்றொரு புறம் அனைத்து அதிகாரங்களும் ஒரிடத்தில் குவிக்கப்படுவதும், மையப்படுத்தபடுவதும் பிரச்சனைகளை மூடி மறைக்கவே உதவிடுகிறது. குறிப்பாக தற்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ராணி கல்வித்தகுதி குறித்த முறைகேடு., எல்லாவற்றையும் மறைக்க யோகாவை பிரதமர் மோடி கையில் எடுத்துள்ளார்.

அவசர கால பிரகடனம் செய்யப்பட்டதன் 40 ஆண்டு நினைவுகளை ஒட்டி மீண்டும் அப்படிப்பட்ட சூழல் வரலாம் என பிஜேபியின் பெரும் தலைவர் அத்வானி கூற, காரணம் கேட்க ஜனநாயகத்தின் குரல் வளை நெறிக்கப்படுகிறப்படுகிறது. எந்த மாற்றமும் இல்லை என சொல்கிறார். இப்படி அடுத்த தளத்தை நோக்கி செல்கிறது இந்திய மோடி அரசும். அதன் நடவடிக்கைகளும். கார்ப்ரேட் மயமும். வகுப்புவாதமும். ஊழலும், அதிகார குவியலும் எதேசதிகாரத்தினை நோக்கி செல்லும் என்பதே உலக அனுபவம். 

 நன்றி / இளைஞர் முழக்கம் ஜூலை 2015 



மோடியின் வாக்குறுதியும், வாய் ஜாலமும்



ராஜா வேஷம் போடும் மோடி
ஆட்சிக்கு வந்தால் குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவேன். இவர்கள் குறித்து காங்கிர° அரசு கவலை கொள்ளாமல் உள்ளது என்று தனது பிரதம வேட்பாளருக்கான முதல் பொதுக்கூட்டம் 2013 ஆக°ட் 11 ம் தேதி ஹைதாரபாத்தில் நடைபெற்ற போது மோடி பேசினார். ஆட்சிக்கும் வந்தார். 365 நாட்களை நாடகமாகவே நடத்தியும் காட்டிவிட்டார்.  இப்போது கரடி விடுகிறார். எனது ஆட்சிக்கு முன் இந்தியா சூனியமாகவே இருந்தது. இனி பிரளயமாக மாறும். ஆம் அவரின் ஒராண்டு ஆட்சிக்கால சாதனைகள் பத்திரிக்கைகளில் பட்டியல் இடும் போது ஏராளமான கருத்துப்படங்களும், காட்சிப்படங்களும் ஊலா வருகின்றன. இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களின் முதல் ஆண்டு ஆட்சி குறித்து இல்லாத அவ்வளவு விமர்சனங்கள் இவரின் மீது வைக்கப்பட்டுள்ளது. 

கருத்து கண்ணாயிரம்
தனது நாடாளுமன்ற உரையில் “இந்தியாவே முதன்மையானது என்பதே அரசின் மதம், அரசியல் சாசனமே அரசின் புனித நுhல், தேச பக்தியே அரசின் பக்தி, அனைவரின் நலன் என்பதே அரசின் பிராத்தனை, மத ரீதியில் அபத்தமான கருத்துக்களை தெரிவிப்பதை பிரதமர் என்கிற முறையில் என்னால் அனுமதிக்க முடியாது, மத ரீதியில் பாகுபாடு காட்டுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது, சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுக்க அதிகாரம் கிடையாது. வேற்றுமையில் நாடு உள்ளது. அதுதான் தனிமையும் கூட, தேசிய கொடியில் உள்ள மூன்று நிறமும் மட்டுமே தெரிகிறது. வேறு சிந்தனைகள் தெரிவதில்லை. ஆம் இப்படித்தான் உணர்ச்சிகரமாக இத்தாலியின் முசோலினியும், ஜெர்மனியின் ஹிட்லரும் பேசினார்கள். ஏன் ஹிட்லர் தன்னை சோசலி°ட் என்றும் கூட சொல்லிக் கொண்டார். இவர்களை அனைத்து கார்ப்ரேட்களும் ஆதரித்தார்கள். துதித்தார்கள், இவர்கள் தான் மாற்றத்தின் திறவுகோல் என்றார்கள்.  ஆனால் உழைக்கும் மக்களுக்கு ஒரு நாளும் விசுவாசமாக இருந்ததில்லை. பெரும் பகுதி மக்கள் தங்கள் வாழ்க்கையை இழப்பதற்கே காரணமானார்கள். 


இந்தியாவில் இருந்த போது காந்தி தேசதுரோகி, சுட்டுக்கொன்றது சரி என்று சொன்னால் கோபம் வராது. தனது கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த மாட்டார். வெளிநாடுகளில் காந்திய கொள்கைகளை உபதேசம் செய்து பசுந்தோல் போர்த்திக்கொள்வார். லவ் ஜிகாத் என்பார்கள், கப்வார்சி என்பார்கள், பொதுசிவில் சட்டம், அரசியல் சட்டபிரிவு 370 நீக்கம், காசி, மதுரா, அயோத்தியில் இந்து கோவில் மசூதியின் அடியில் உள்ளது. கோவில்களை மீட்க வேண்டும் என்பார்கள். ராமனுக்கு கோவில் கட்ட வேண்டும். மாட்டுக்கறி கூடாது. பசுவதை தடுப்பு, இந்த உடை அணியாதே, இந்த கடவுளை மட்டும் கூம்பிட்டால் இந்து. பகவத் கீதையை புனித நுhலாக ஆக்கி அரசியல் சட்டத்தை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்பார்கள். இந்த சர்ச்சைகள் அனைத்தும் எதற்காக ?.. ஒற்றை வரியில் சொன்னால் அது தான் அடையாளத்தின் பெயரால் உழைக்கும் மக்களை கூறு போடும் முழக்கங்கள்,. உழைக்கும் வர்க்கத்தை சீர்குலைக்கும் நடடிவக்கை,. 

வார்த்தைகளின் மன்னர் மோடி
°கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மே இன் இந்தியா, மேட் இன் இந்தியா, கிளீன் இந்தியா என வார்த்தைகள் மட்டும் புதிது புதிதாக வந்து விழுகிறது. இவற்றால் இந்திய நாட்டின் உழைப்பாளிகள் வயிறு நிறைகிறதா? கௌரவமான வாழ்க்கை கிடைத்தா? என்றால், வாமன அவதார கேள்வியாக விரிகிறது.  மோடியின் ஆட்சி வயதுக்கு வந்து ஒராண்டு ஆகிவிட்டது.  
ஒராண்டில் 18 வெளிநாடுகள் பயணம், பல லட்சம் கோடி அன்னிய மூதலிட்டை கொண்டு வந்துவிட்டேன் என்று சந்தோஷ பட்டுக்கொள்கிறார். தன்னை ஒரு ராஜா போல போகும் இடங்களில் எல்லாம் வேஷம் கட்டிக்கொண்டு பத்திரிக்கைகளுக்கு புகைப்படம் கொடுக்கும் நபராகவே காட்சி அளிக்கிறார் மோடி. 


குடிமக்கள் சமூகத்தில் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் உண்டு. இவர்களின் வர்த்ததைகள் அனைத்தும் 3ல் 2 பங்குள்ள இளைஞர்களை ஏமாற்ற பயன்படுத்துகிறார்கள். சரித்திரம் தேர்ச்சிகொள் என்ற பாரதி ரௌத்திர பழகு என்றார். இவர்கள் நடவடிக்கையை பார்த்தால் ரௌதிரம் பழக வேண்டியுள்ளது. ஆம், 

உள்ளதும் போச்சு
இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்கள், இளம்பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை போதுமான அளவு உருவாக்குவோம், அவர்கள் உழைப்பு சந்தையில் இணைய வேண்டும் என்றார். ஆனால் 1951ல் 29 கோடி ரூபாய் முதலீட்டில் 5 தொழில்கள் அரசுத்துறையில் துவங்கப்பட்டு அதன் இன்றைய மதிப்பு 239 நிறுவனங்களாக 4 லட்சம் கோடி ரூபாயாக விரிந்து பரந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. 


குறிப்பாக ( BHEL, BSNL, RAILWAY, COAL INDIA, ONGC, SAIL, NTPC, GAIL, HCL, IOC, MTNL ) ஆகிய 12 துறைகளில் மட்டும் 22 லட்சத்திற்கும் மேல் வேலைவாய்ப்புகள் உள்ளன. இவற்றில் பிரதானமாக  ( BSNL, COAL INDIA, RAILWAY )  3 துறைளில் மட்டும் 
17 லட்சம் வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால் மோடி இந்த ஓராண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை எம்டிஎன்எல் இணைப்பது, பொது ஏலங்களில் பங்கேற்க கூடாது, ரயில்வேயை தனியார்மயமாக்குவது, நிலக்கரி சுரங்கங்களை அவசர சட்டங்கள் மூலம் தனியாருக்கு கொடுத்தது என முடிவு எடுத்ததன் விளைவாக இந்த 17 லட்சம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. 

தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகள் நலனுக்காக மாற்றியதன் விளைவு ஏற்கனவே பணிநிரந்தர தன்மையற்ற நிலையில் இருந்தவர்கள் இன்று மேலும் பணிபாதுகாப்பற்ற, நிரந்தரதன்மையற்ற, உரிமைகளற்ற நிலையை நோக்கி, நித்திய ஆயுசு பூரண கண்டம் என்ற நிலையை நோக்கி செல்கின்றனர். மே இன் இந்தியாவின் முதல் இலக்கே நிரந்தர வேலைவாய்ப்புகளை அழிப்பது, ஒப்பந்த முறையில் பணியாற்ற வைப்பது, அத்துக்கூலி முறையை உருவாக்குவது, சமூக பாதுகாப்பு திட்டங்களை ஒழிப்பது என்பதே, இது தான் பெரும் முதலாளிகளும், கார்ப்ரேடுகளும் சொல்லும் முதல் உத்தரவு,. ஒப்பந்தம்.

வேலை தருவோம் மோ(ச)டி
ஆனால் மோடி மீண்டும் மீண்டும் ஒரு பொய்யை சொல்லிக்கொண்டே இருக்கிறார். உற்பத்தி சார்ந்த வேலைகள், தொழிற்சாலை உற்பத்தி, ஏற்றுமதி, அந்நிற மூதலிடு இந்த வார்த்தைக்கு பின்னால் உள்ள மோ(ச)டி என்ன? 2013ல் ஜவுளி மற்றும் அது சார்ந்த, தோல், உலோகம், ஆட்டோமொபைல்°, நகைகள், போக்குவரத்து, ஐடி/பிபிஓ, கைத்தறி, விசைத்தறி ஆகிய தொழில்களில் மட்டும் 4.19 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தது. 2014ல் மோடி பேசி உற்பத்தி சார்ந்த இந்த துறைகளில் மட்டும் 4.2 லட்சம் வேலைவாய்ப்புகளாக குறைந்துள்ளது. ஆம் எப்போதும் உண்மை கசக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 கோடி பேர் உழைப்பு சந்தைக்கு வந்துக்கொண்டே இருக்கிறார்கள். 4 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் என்பது போதுமானது தானா மோடி அவர்களே,. 10சதம் வளர்ச்சியை தருவோம் என்ற மோடியின் தொழில் உற்பத்தி துறையில் 2.3 சதமும், நிலக்கரியில் 1.4 சதமும், மின் உற்பத்தியில் 8 சதமும் என்ற அளவு இவர்கள் சொன்னதற்கு நேர்மாறான வளர்ச்சியாகும்.

இவர் சொன்ன அன்னிய முதலீடும் 75 பில்லியன் டாலர் அளவிற்கு இந்திய பங்கு சந்தைக்கு வந்தது. அதே நேரத்தில் 40பில்லியன் டாலர் அளவு ( 54 சதம்) வெளியேறியுள்ளது. இந்த வர்த்தகம் எந்த வேலைவாய்ப்பையும் உருவாக்காத வேலைவாய்பற்ற வளர்ச்சியாகும். 


நில எடுப்பு சட்டத்தின் படி புதிய வேலைவாய்ப்புகளாக 30கோடி பேர் பயன்பெறுவர் என்று ஜெட்லி கலாய்கிறார். ஆனால் வேறாக உள்ளது. கிராமப்புற வேலை உறுதிச்சட்ட அடிப்படையில் 2.27 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற மோடி ஆட்சியில் 1.1 கோடி பேர் 50 நாட்கள் மட்டுமே சராசரியாக வேலையை பெற்றுள்ளனர் என்பது மோடி என்ற மோசடி ஆட்சியை அம்பலமாக்கிறது.  விவசாயத்துறையிலும் சரிவே ஏற்பட்டுள்ளது. 2014ல் 3.7 சதமாக இருந்தது 2015ல் 1.1 சதமாக சரிந்துள்ளது. இதனால் கணிசமான கிராமப்புற ஏழைவிவசாயிகள், விவசாயத்தொழிலாளிகள் கட்டுமானம் உள்ளிட்ட இதர தொழில்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் 5 கோடிக்கும் மேற்பட்டோர் விவசாய நிலங்களை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. 


இன்றைக்கு சகோதரர்களும், சகோதரிகளும் மிகக்குறைந்த சொற்ப சம்பளத்திற்கும், இடப்பெயர்வுக்கும் ஆளாகிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் தேர்வு செய்யும் வாழிடம் மிக மோசமான நிலையிலேயே இருந்து கொண்டு இருக்கிறது. அவர்கள் வயிறுகள் பெரும் பகுதி காய்ந்து கொண்டே இருக்கிறது. மோடி சொல்கிறார். நிறைய கார்ப்ரேட்கள் வந்து சம்பாதித்தால் அவர்கள் சிந்தும் ஏராளமான பொருட்கள் நமது மக்களுக்கு பயன்படும். அவர்களாலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்ற கருத்தாக்கம் என்பதே,. 

தேம° நதிக்கரையில் உள்ள முதலைகள் தங்கள் தின்றுகொழுத்த மாமிச இறைச்சிகளின் துணுக்குகள் பல்லிடுக்குகளில் சிக்கி இருக்கும் போது அவற்றை சுத்தப்படுத்திக்கொள்வதற்காக நதிக்கரையின் ஒரத்தில் வாயை திறந்து வைத்திருக்குமாம். அங்கிருக்கும் பறவைகள் அந்த மாமிச துணுக்குகளை கொத்திதின்ணும். அப்போது முதலை வாயை முடினால் பறவைகள் கதி அதோ கதிதான். அந்த மாமிச துணுக்குக்களை உண்ணும் கூட்டமாக இந்திய உழைப்பாளி மக்களை மோடி சித்தரித்துக் கொண்டு இருக்கிறார்.  

மோடியின் 2015ல் கார்ப்ரேட்களில் பில்லியனர்கள் 55ல் இருந்து 100 ஆக உயர்ந்துள்ளனர். இக்காலத்தல் மட்டும் 34600 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளனர். முதல் 10 பத்து பணக்காரர்கள் 49 சதம் வளர்ச்சியை அடைந்துள்ளனர். மோடி ஆட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு 2014 மே மாதம் பெட்ரோலிய எண்ணெய் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 108 டாலருக்கு விற்ற போது இந்தியாவில் 64 ரூபாய் ஒருலிட்டர் பெட்ரோல். ஆனால் 2015 மே மாதம் 60 டாலர் ஒரு பேரல், ஆனால் இந்தியாவில் 70 ரூபாய்க்கு ஒரு லிட்டர் என்றால் இதன் லாபம் அனைத்தும் அம்பானி போன்ற பெரிய புள்ளிகளுக்கே செல்கிறது. 

 அனைத்திற்கும் மேல் ஒராண்டில் 18 லட்சம் கோடிரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்தில் தேங்கி இருக்கிறது. கையெழுத்திற்காக,. தான் கொடுத்த வாக்குறுதிகளை வசதியாக மறந்துவிடுகிறார். இவர் உண்மைக்கு நேர் எதிர் திசையில் பயணப்பட்டுக் கொண்டு உணர்ச்சிப் பூர்வமாக வார்த்தைகளை கொட்டி கொண்டுகிறார். இப்படி வாக்குறுதிகளை மறந்த மோடி ஆடை நெய்யும் கம்பெனிகளின் விளம்பரதராகவே இப்போதும் காட்சி அளித்துக் கொண்டு இருக்கிறார். மேற்கண்ட விசயங்கள் புலம்பலுக்கு அல்ல,. புரிதலுக்காக, இதற்கு மாற்றே இல்லையா? ஏன் இல்லை உழைக்கும் மக்களின் அரசியலை முன்னெடுக்கும் அரசியலும் இங்கு உண்டு, அதை ஆளும் வர்க்கத்திற்கு பிடிக்காது. ஆனால் சுரண்டப்படும் வர்க்கத்திற்கு பிடிக்கவேண்டும், சுரண்டலற்ற சமூகத்தைப்பற்றி பேசும் இடதுசாரி அரசியலை பற்றி புரிந்து கொள்வது இன்றைய தேவை.

நன்றி - இளைஞர் முழக்கம் ஜூன் , 2015