”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

மூடர் கூடாமா?

“மக்கு, மக்கு என்று சொல்லியே தலையில் கொட்டி வைத்து என்னை மக்கு பையனாய், உட்கார வைத்து விட்டீர்கள் ! இப்போதுதான் என்னை நம்பி ஒரு வேலையை பொறுப்பாய்  ஒப்படைத்துள்ளார்கள். அதனால்  நீங்க ஒரு அடி நகர்ந்தாலும் தலையில் கிரிக்கெட் மட்டையால் நச்சென்று போட்டு விடுவேன், என்று பெற்றோரையே நகரவிடாமல் நிறுத்தி வைத்து வீட்டை கொள்ளையடிக்க வந்தவர்களுக்கு, அந்த வீட்டின் பையனே உதவி செய்வான்.’’ இது மூடர் கூடம் என்ற திரைப்படத்தில் வரும் காட்சி,.. 

இது தான் இன்றைய இந்திய நாட்டின் நிலையும்., பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்கள் இந்தியாவின் ஒரு பகுதி அரசியல் அமைப்புகளின் பிரதிநிதிகளை கூப்பிட்டு உங்கள் கையில் சாவியை தருகிறோம்,. நீங்களே எங்களை திறந்து விட்டு கூப்பிட்டால் அது மரியாதை, நீங்களே அள்ளிக் கொடுத்தால் அது அன்பளிப்பு,. நாங்களே வந்து திறந்து, நாங்களே எடுத்துக் கொண்டால் அதற்கு பெயர் திருட்டு என்று புதிய வியாக்கியானம் செய்து கொண்டு  அந்நிய மூதலிடாய் நாங்கள் வருகிறோம்,. அனைத்தையும் கொள்ளையடிக்க எங்களுக்கு அனுமதி கொடுங்கள்,. எதிர்த்து யாராவது கேட்டால் இந்தாருங்கள் கிரிக்கெட் பேட்( காவல்துறை, நீதிமன்றம் போன்ற அடக்குமுறை எந்திரம்), நீங்கள் மக்கு இல்லை, உங்களால் முடியும் மக்களை நசுக்க, இவைகளையும் வைத்துக் கொள்ளுங்கள், ஒருவரும் எதிர்த்து பேசமாட்டார்கள்,. என்று,

அந்நிய முதலீடு வரமா ? சாபமா ?


அந்நிய முதலீடு  என்பது ஒரு நாட்டின் கம்பெனி இன்னொரு நாட்டில் தனது லாப வேட்கைக்காக முதலீடு செய்வதேயாகும். இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் பாராம்பரிய, மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்பு, வளர்ச்சி, மக்களின் பாதுகாப்பு இவற்றை கணக்கில் கொண்டு சட்டத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவற்றைத்தான் இப்போது உலக அளவில் உலக வர்த்தக அமைப்பு, ஐஎம்எப், உலகவங்கி, பல சுற்று பேச்சுவார்த்தை மாநாடுகள், காட், டங்கல், டிரிப்ஸ், டிரிம்ஸ் என பல பெயர்களில் ஒப்பந்தங்களை சொல்லி மாட்ட விடும் ஏற்பாட்டை 1990 களுக்கு பின் வேகமாக வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் செய்து வருகின்றன.

இதற்கு ஒத்து ஊதுவதற்கு வளர்முக நாடுகள் மற்றும் தங்களின் சந்தைக்கான நாடுகளின் ஆட்சியாளர்களை ஆதரவாளர்களாக மாற்ற எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். சமீபத்தில் மன்மோகன் சிங் அவர்களின் கடைசி கால ஆட்சியில் பத்திரிக்கைகளில் ஒரு செய்தி பிரமாண்டமாக வந்தது. வால்மார்ட் நிறுவனம் தனது சந்தையை இந்தியாவில் வி°தரிக்க இந்திய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்களுக்கு ரூ 125 கோடி வரை லஞ்சமாக கொடுத்தோம், எதற்கு என்றால் எங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர என்று பகிரங்கமாக சொல்லும் வெட்கக் கேடு அளவிற்கு இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அந்நிய முதலீட்டின் கை ஓங்கியுள்ளது.

இப்படி வரும் இந்த அன்னிய முதலீடு எப்படி நமக்கு வரமாக இருக்க முடியும்,. சாபமாகவே அமையும்,. 2010ம் ஆண்டு மட்டும் 44.8 பில்லியன் டாலர் அன்னிய முதலீடும், 2011ல் 50.8 பில்லியனாகவும்  13 சதவீதம் அதிகரித்தது. இவற்றில் மொரியஸ் நாட்டின் வழியாக வந்த முதலீடு மட்டும் 20 பில்லியன் டாலர் ( 46 சதவீதம்) நேரடியாக வந்துள்ளது.  இந்தியாவின் மிக பெரிய அந்நிய முதலீட்டாளராக அமெரிக்க கம்பெனிகளின் ஆதிக்கம் கொடி கட்ட துவங்கியுள்ளது.

ஏன் கொட்டி தீர்க்கிறார்கள் ?


ஏன் இப்படி தேடிப்பிடிச்சு நம்ம நாட்டுல கொண்டு வந்து அவங்க நாட்டு முதலீட்டை கொண்டாறங்கனு பார்ப்போம்,. இங்க பல துறைகளில் வந்து உற்பத்தி செய்த பொருட்களை இங்கேயே சந்தையும் படுத்த வேண்டும். ஆனால் முடியவில்லை. பல கார் கம்பெனிகள் இங்கே உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யகிறார்கள்,. உற்பத்தி இங்கே,. விற்பனை எங்கே,?,. 

இந்தியாவின் பொருளாதாரம் தற்போதைய சூழலில் நிலைநிறுத்தப்பட்ட பொருளாதாரமாக காட்சி அளிக்கிறது. ஏராளமான சேமிக்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அபரிமிதமான மனிதவளத்தை கொண்ட நாடு, தொழில் வளர்ச்சியில் இன்னும் முன்னேற வேண்டிய தேசம்,. இங்கு குறைவான சம்பளத்திற்கு ஏராளமான தொழிலாளர்கள் கிடைப்பார்கள்,. கூலி வேலைக்கும் அதிகம் பேர் உள்ளனர். பெரியளவிலான தனியார் மூலதனமும் இங்கு ஏற்கனவே உள்ளது. நகரமயமாக்கல் வேகமாக நடைபெறும் இடமாக உள்ளது.

வேளாண் சார்ந்த உற்பத்தியில் உள்ள விவசாயிகளுக்கு 10 முதல் 15 சதவீத அளவிற்கான வருமானத்தை உறுதி செய்தால் அந்த சந்தையை பிடிக்க முடிக்க முடியும். தற்போது இதை விட குறைவான வருவாயே கிடைக்கிறது. மேலும் 3-4 இடைத்தரகர்கள் விவசாயிக்கும், நுகர்வோருக்கும் உள்ளனர்,  உற்பத்தியான பொருளை பாதுகாக்க போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை.  விநியோகத்தில் மிகப்பெரிய குறைபாடான முறையே இங்கு உள்ளது.

இந்த பிரச்சனைகளை அந்நிய முதலீட்டாளர்கள் நமக்கு சொல்கிறார்கள். உங்கள் ஊரில் உள்ள இந்த நிலைமைகளை மாற்ற வேண்டுமானால் நாங்கள் முதலீடு செய்தால் எல்லாம் மாறி விடும். ஆகவே, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த, உணவு பற்றாக்குறையை போக்க, 5 ஆண்டுகளில் 15 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க, நுகர்வோருக்கு முழு பயனையும் அழிக்க, இடைத்தரகர்களை ஒழிக்க, விலைகளை குறைக்க என்று நாங்கள் முயற்சி செய்வோம்.

இதுவரை மனிதர்களுக்கான சந்தையாக இருந்தது. அதனால் உங்களுக்கு உற்பத்தியில் லாபம் குறைவாக இருந்தது. இப்போது நாங்கள் வருகிறோம் சந்தைக்கான மனிதர்களை விளம்பரங்கள் மூலம் உருவாக்கும். உற்பத்தியில் லாபம் அதிகரிக்கும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று குரங்கு அப்பத்தை இரண்டு நரிகளுக்கு பங்கு வைப்பதாக சொன்ன கதையை தான் நமக்கு செய்து காட்ட போகிறார்கள்.  

ஆடாமா ஜெயிச்சோமடா
?

இன்றைய நிலையில் 63 துறைகள் மூலம் நேரடியாக 2000-2014 ஆண்டு வரை ரூ 1,009,780.99 கோடி அந்நிய மூதலிடு இந்தியாவில் வந்திறங்கியுள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பில் சொன்னால் ஏறத்தாழ 212,030.72 மில்லியன் டாலர் பணங்கள் வந்துள்ளன. குறிப்பாக இந்திய நாட்டின் உணவுத்துறையில் மட்டும் 31,118.30 கோடி ரூபாய்கள் மூதலிடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தாவர எண்ணெய் மற்றும் வன°பதி போன்ற துறையில் மட்டும் 1,974 கோடி ரூபாயும், விவசாய தேவைப்பிரிவில் 8283.82 கோடி ரூபாயும் மூதலிடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்திய நாட்டின் சில்லறை வர்த்தகத்தில் 50 மில்லியன் பேர் ஈடுபட்டுள்ளனர். லாப பங்கீடும், முதலீட்டு விகிதமும் திட்டமிட்ட அடிப்படையில் இல்லாமல் ஒருவர் இந்த துறையில் சாலையோராத்தில் கடை போடுவதில் 100 ரூபாயில் துவங்கி சில கோடி போட்டு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வரை வைத்துள்ளவர்கள் ஈடுபட்டுள்ள துறையாகும். தற்போது இவற்றில் பெண்டாலுhன் என்ற நிறுவனம் 450 கடைகளோடு குடி புகுந்துள்ளது. தனது வர்த்தக நிறுவனமாக“பிக் பஜார்’’ என்ற பெயரில் மும்பையை தலைமையிடமாக கொண்டு சில்லறை வர்த்தகத்தில் தனது விற்பனை கடைகளை துவக்கியுள்ளது.

டாட்டா குழுமம் “ஸ்டார்இண்டியா பஜார்’’ என்ற பெயரிலும், ரிலையன்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ்பிரஸ் என்ற பெயரிலும், ஆர்பிஜி குழுமம், ஏவி பிர்லா குழுமம் ஆடை உற்பத்தியிலும் ( லுயிஸ்பிலிப், ஆலன்சோலே, வான்ஹீயூசன்,பீட்டர் இன்லாண்ட்), வால்மார்ட் வரை இந்த எல்லை அந்நிய, இந்திய நிறுவனங்களின் வலைத்தளமாக உள்நாட்டு சில்லறை வர்த்தகம் மாறியுள்ளது. இப்படி இந்திய நாட்டின் 63 மிக முக்கிய துறைகளை தங்களது சந்தைக்காடாக அன்னிய முலதனம் மாற்றியுள்ளது.
இதன் விளைவு தங்களது லாபவெறியின் உச்சகட்டமாய் இந்தியா நாட்டின் தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்று என்று உத்தரவுகள் போட ஆரம்பித்து மோடி அவர்களும் இந்திய நாட்டின் தொழிலாளர் துறையை முதலாளிகள் நலத்துறையாகவும்,  தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யும் தொழிலாளர் நல ஆய்வாளர். முதலாளிகளுக்கான ஆய்வாளராக மாற்றப்படுவார்கள் என மோடி மேலும் அறிவித்துள்ளார். இப்படி திரைப்படத்தில் வருவதை போல் பல நாடுகளில் விளையாட்டை விளையாடித்தான் தோற்றார்கள், இங்கு தான் ஆடாமலேயே தோற்றுக் கொண்டிருக்கிறோம், முதலாளிகள் ஆடாமலே ஜெயித்துக் கொண்டு இருக்கிறார்கள்,  நாம் மூடர் கூடத்தில் இல்லாமல் சிந்திக்க தெரிந்தவர்களாக எதிர்ப்பை பதிவு செய்பவர்களாக நிலைகெட்ட இந்த மனிதரை நினைத்துவிட்டால் என்ற பாரதியின் வார்த்தைகளுக்கு ஏற்ப  ரௌத்திரம் பழகுவோம்., அநீதியை தகர்த்தெறிய.,,


No comments:

Post a Comment