”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

மூடநம்பிக்கை


·          பிரேசிலில் டீக்கடைகளில் டீக்குடிக்கும் கப்புகளில் முதலில் சர்க்கரை பின்பு டீ அல்லது காபித்துள் அப்புறம்தண்ணீர் கலக்கிறார்கள். காரணம் முதலில் சர்க்கரை போட்டால் பணம் அதிகம் வரும் என்று,.. இறுதியில் போட்டால் பணம் சென்றுவிடும் என்ற நம்பிக்கை, 
  • ஜப்பானில் இன்றும் பாம்புக்கறியை சாப்பிட்டுவிட்டு  பாம்புகளின் தோல்களை சிறு சிறு துண்டுகளாக வைத்து பாதுகாப்பது, பர்ஸ், பீரோக்களில் அதிர்ஷ்டம்

·          நமது சமூகத்தில் பூனை குறுக்கே சென்றால் திரும்ப வீட்டிற்கு வந்துவிடுவோம். ஆனால் கொரியாவில் காக்காய் குறுக்கே வந்துவிட்டால் திரும்ப வீட்டுக்கு வந்துவிடும் பழக்கம் உள்ளது.

·          நமது ஊரில்நரிக்குறவர்கள் நரிவாலு, விற்பதை போல், மெக்சிகோவில் முயல் வாலை விற்கிறார், வீட்டில் இருந்தால் நல்லது என்று

·          எண், பெயர், வாஸ்து சோதிடம்,  பல்லி ஜோசியம், முயல், எலி, கிளி சோதிடம், குடுகுடுப்பை, பேய். பிசாசு, ஆவி, பில்லிசுனியம், ராசி, கிரகம், நட்சத்திரம், லக்கனம், பொருத்தம், பூ போட்டு பார்த்தல், காசு சுண்டுதல், சோளி உறுட்டுதல். குழந்தை பிறக்கும் நேரம். பெண் வயதுக்கு வரும் நேரம்

·          வைரம், மரகதம், புஷ்பராகம், கோமேதகம், பவழம் என வித விதமான விலை மதிப்பான கற்களில் யார் எதை போட்டுக் கொள்ள வேண்டும் கடவுளுக்கு எந்தக் கல் உபயோகிக்க வேண்டும் என அந்தக் காலத்தில் ஜோதிடம் மூலமே கணித்து அறிவுபூர்வமாக விளக்கங்களும் கொடுத்திருந்தனர்.

·          தங்கத்தை காலில் அணியக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்கள். இன்றும் அது போல் சில உண்மையான விஷயங்களை சொல்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த அறிவியல் ரீதியான உண்மையை புரிந்துகொள்ளாமல் இப்போது, சில

·          புதுப்புது பெயர்களில் கற்களை வைத்துக் கொண்டு திருமணம் ஆகவில்லையா, பிள்ளைகள் படிக்கவில்லையா, நோய்கள் குணமாக வேண்டுமா, குழந்தை பிறக்க வில்லையா என்றெல்லாம் மக்களின் பிரச்சினைகளை சொல்லி காசு பறிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது.

·          மழை வரவில்லையென்றால் அதற்கான யாக முறைகள்.  தவளைக்கு திருமணம், மிருகங்களுக்கு திருமணம். வாழைக்கு திருமணம்,

·          கட்டிடங்கள் கட்டும் போது களப்பலி கொடுப்பது.
·          பெண்ணுக்கு திருமணமாகவில்லையென்றால் தோஷம் கழிக்க திருமண முறைகள்
·          பொட்டு கட்டி விடுதல், தேவதாசி முறை
·          விதவை திருமண எதிர்ப்பு
·          பால்ய விவாகம்
·          விதவைகளுக்கு மொட்டையடித்தல்
·          உடன்கட்டை ஏறுதல், சதிக் கொடுமை
·          கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் தாவரம். விலங்குகளை. கற்களை வணங்குவது என ஏராளமான முறையில் மூடநம்பிக்கைகள் நவீன வடிவில் இன்றும் தன்னை மாற்றிக் கொண்டே இருக்கிறது, ஆளும் வர்க்கம் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டே வருகிறது. இந்த மூடநம்பிக்கையின் வடிவங்கள் சாதிய கட்டமைப்பை நொறுங்காமல் பாதுகாத்து கொண்டே வர உதவிடுகிறது. 

இப்படி பாலின பாகுபாட்டின் பெயராலும், சாதிய பாகுபாட்டின் பெயராலும் நடத்தப்படும் இந்த சமூக ஒடுக்குமுறை சுரண்டும் வர்க்கத்தின் ஆயுதமாகவும், கேடயமாகவும் ஒரே நேரத்தில் தனது சுரண்டலுக்கு பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு ஆரிய நாகரிகமான பிராமணியம் வேகமாக பரவ ஆரம்பித்த காலத்தில் அவர்கள் தங்களை அரசையும் ஆளும் சமூகமாக மாற்றிக்கொள்ள மூடநம்பிக்கைகளை, கடவுள் நம்பிக்கை, மதம், வர்ணபிரிவு, சாதிய கூறுகளை முன் வைத்தனர். அதன்படி வாழ்க்கை நெறிமுறைகளை போதித்தனர். அரசு, அரசாங்கள், சட்ட திட்டங்களை வகுத்தனர். நீதி, நெறி, ஒழுக்கம், பயம் என்பவற்றை குடிமக்களின் கடமையாகக்கினார்கள். சுரண்டலை ஆளும் வர்க்கத்தின் உரிமைகளாக்கினார்கள். 

சோழ மன்னர்கள் காலத்தில் தற்போதைய உ.வே.சு.சாமிநாதய்யரின் சொந்ந ஊரான உத்தமதானபுரம் குறித்து சொல்லும் போது இன்றைய தஞ்சை மாவட்டத்தின் காவேரி கரையின் ஓரமான ஊர்களான மங்கலங்கள் வந்த வரலாற்றையும் சொல்லி வைத்தனர். வரலாற்றின் பக்கங்களில் அரசர்களுக்கு ஆலோசனையும், அறிவுரையும் கூறும் சமூகமாக அந்தண சமூகம் இருந்தது. அரசன் அவர்கள் வழிப்படியே இருந்தான். உதாரணம் சந்திரகுப்த காலத்தில் அர்த்தசாஸ்திரத்தை உருவாக்கிய கௌடில்யரின் கூற்றும் அதை பறைசாற்றும், அதற்கு பின் வந்த சங்க இலக்கிய கால பல்வேறு இலக்கியங்கள் கூறும் செய்தியும், இதிகாச கால இலக்கியங்கள் கூறும் செய்தியும் சூத்திரனுக்கும், பெண்ணுக்கும் கல்வியையும், சமூக அந்தஸ்தையும் எப்படி மறுத்தன. அயோத்தி மன்னன் ராமனும் எப்படி பிராமணிய கருத்துகளில் ஏறி நின்று பாதுகாத்தான் என்பதையும் நாமறிவோம். 

சரி தற்போது செய்திக்கு வரும், உத்தமதான புரத்தின் அருகில் சோழமன்னன் ஒருவன் ஊர் உலா சென்று மதியம் விருந்துண்டு ஒய்வுவெடுக்க விரும்பிய போது அவனது பணியாள் ஒருவன் வெற்றிதாம்பூலத்தை மடித்துக் கொடுக்க அதை மன்னன் வாங்கி உண்கிறான். ஆனால் அங்கிருந்த அந்தண சோதிடன் மன்னன் வெற்றிலை சாப்பிட நேரம் சரியல்ல இதனால் நாட்டிற்கு கேடு ஏற்படும் என கூற., பயந்து போன மன்னன் பரிகாரம் கேட்க அருகில் இருந்த ஊரை காட்டி அங்கிருந்த பசுக்கள், மனைகள், நிலங்களை தானமாக அந்தனர்களுக்கு கொடுக்க வேண்டும் என சொல்ல மன்னனும் பயந்து அந்தணர்களை அழைத்து அந்த ஊரையே தானமாக வழங்கியதாக செய்திகள் கூறுகின்றன. இப்படி உருவான ஊர்கள் தான் மங்கலங்கள், பிரமோதயங்கள் என இன்றும் அழைக்கப்படுகின்றன. இதற்கு ஏராளமான கல்வெட்டு சான்றுகள் உள்ளன.

வேளாண் குடி மக்களை கிருஷி என்று அழைத்தனர், அந்தணர். கிருஷி என்றால் கேவலமானவன் என்று அர்த்தம். அதனால் தான் இரும்புயுக காலத்தில் கலப்பைகளில் இரும்பு பூன் பூட்டப்பட்டிருக்கும். பூமியை தங்களது தெய்வம் என்ற அந்தணர்கள், கலப்பையும், மம்பட்டியும், கடப்பாரையும் கொண்டு நிலத்தை பண்படுத்திய வேளாண் மக்களை இழிவானவர்கள் என்றனர். நிலத்தில் இறங்கிய வேலைசெய்யவேண்டியதை மறுத்த அந்தணர்கள் தங்களுக்கு கிடைத்த நிலங்களை எல்லாம் குத்தகைக்கு விவசாயிகளிடம் கொடுத்துவிட்டு அறுவடையின் போது ஒரு சிறு பகுதியை மட்டும் கொடுத்துவிட்டு மீதியை கொள்ளையடித்து சென்றனர். இதனையொட்டி உருவான பழமொழியான பகன்றை பன்னிரெண்டு என்பது தெளிவாக கூறுகிறது. பிராமணியம் எப்படி உழைப்பை சுரண்டியது என்று.. இதற்குள் உள்ள மூடநம்பிக்கையான விசயத்தை வைத்து பேசுவோம் வாருங்கள். ஒவ்வொன்றாக

அரவிந்தன், திருப்பூர்.

No comments:

Post a Comment