”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

சாதிமறுப்பு திருமணங்களை ஆதரிப்போம்


சாதி இரண்டொழிய வேறில்லை.. ஒன்று ஆண் சாதி. மற்றொன்று பெண்சாதி உலகின் அனைத்து உயிரினங்களுக்கும்,

உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் பொது இடங்களில் குண்டு வைக்கப்பட்டிருக்கும் அதை கண்டறிய காவல்துறை தனது பணியை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்கும்இந்த பணிக்காகநியமிக்கப்பட்டிருக்கும் ஒரு காவல் துறை அதிகாரி அதற்கு முன்பு தனது மனைவியையும்குழந்தையையும் ஊருக்கு அழைத்து செல்வதாக சொல்லி பணி நிமித்தமாக தனியாக அனுப்பி வைத்துவிட்டுகுண்டுகளை கண்டறிய சென்றுவிடுவார்ஆனால் அவ்வப்போது அவரது மனைவிக்கு போன் செய்து எந்த ஊருக்கருகில் போய்க் கொண்டு இருக்கிறீர்கள்பிரச்சனை ஒன்றும் இல்லையே என கேட்டுக் கொண்டேஇருப்பார்.. காதல்பாசம்அன்புமனிதநேயம்குடும்ப உறவு என்று இயந்திரகதியான வேலைகளில் இந்த உணர்வோடு  இருப்பது  மனித இயல்புகளில் ஒன்று. ஆனால் அதைத்தாண்டி வெளிப்படும் இந்த அன்புணர்ச்சிதான் மனித இனத்தை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அதே போல்தான் ஜென்னி மார்க்ஸ் தனது குழந்தை இறந்த போது கூட அதற்கான ஈமச்சடங்கை செய்ய பணமில்லாத தருணத்திலும்,மேல் கோர்ட்டை விற்று செலவு செய்த போதும் காரல் மார்க்ஸ் சின் மீது கடுகளவும் கோபம் கொள்ளதவர்.  வாழ்வின் பாதி நாட்கள் தலைமறைவு வாழ்க்கையும்புரட்சியும்எழுத்தும்வாழ்வும் என்றிந்தலெனினை தான் இறுதி வரை ரூப்ஸ்கயா காதலித்து வாழ்ந்தார்.. மேற்சொன்ன அனைத்தும் வாழ்வின் தேடலுக்கான பாதையில் மனித பண்பாட்டை தாங்கி வளர்த்தெடுக்கப்பட்டது என்றால் இன்றும் அதற்கானஅம்சங்கள் எதுவும் அரித்துப்போகவில்லை
.
1609 ல் வில்லியம் ஹீல் என்ற அறிஞர் ஆண் சிங்கங்கள் ஒரு போதும் பெண் சிங்கங்களை எதிர்ப்பதில்லைபெண் புலிகள் ஒரு போதும் ஆண் புலிகளை எதிர்ப்பதில்லைபிணங்களை சுத்தம் செய்யும்வல்லுறுகள் கூட தங்களில் பேதம் பார்ப்பதில்லைஎந்த உயிரினங்களும் தங்களுக்கு ஆண்பெண் வித்தியாசம் கூட பார்த்து பகை கொள்வதில்லை சேர்ந்தே வாழ்கிறது என்கிறார்ஆனால் மனித மனம் மட்டும்ஏன் இத்தனை வித்தியாசங்களை தாங்கி நிற்கிறதுதாவர இனங்கள் கூட மகரந்தச் சேர்க்கை நடத்தவில்லை என்றால் புதிய தாவர இனம் ஏதுதாவரத்தில் தேன் உட்கொள்ளும் பூச்சியினங்கள் இல்லை என்றால்மகரந்த சேர்க்கையுண்டாஇந்த இனகலப்பிற்கு ஏது சாதிபின் எங்கிருந்து வந்தது இந்த சாதி.,,  அதனால் தான் சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று சொன்ன பாரதி சாதி இரண்டொழிய வேறில்லை என்று ஆண்சாதி. பெண்சாதி மட்டுமே உலகில் உள்ளது என உரக்க சொன்னான்.

தமிழகத்தின் பாரம்பரியமும் கூட  சாதியை கட்டியளும் சனதனவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் வளர்ந்தே.. சோழர்கள் காலத்தில் சாதிய கட்டமைப்பு என்பது வலுவாக கட்டியமைப்பட்டதுஇதில்முதலில் பாதித்தது பெண்களேபின்னர் தாழ்த்தப்பட்ட மக்களாகும்காலந்தோறும் பிராமிணிய கருத்துகளோடு உயர்ந்தவன்தாழ்ந்தவன் என்ற கருத்துக்களும்அதற்கான கட்டமைப்புகளும் நிகழ்த்தப்பட்டதன்விளைவு இன்றைய தினம் சமூக எதார்த்தங்களையும்இயற்றையின் பரிணாம வளர்ச்சிக்கு எதிராகவும் ஒரு கூட்டம் சாதியை அடிப்படையாக வைத்து அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறது.

சாதி மறுப்புமதவெறி எதிர்ப்பு. பெண்விடுதலைமூடநம்பிக்கை ஒழிப்புசுயமரியதை திருமணம்சமூக நீதி என்ற கோட்பாடுகளை தாங்கி வளர்ந்த திராவிட இயக்கம் தன்னை அரசியல் இயக்கமாக மாற்றதுவங்கியதில் சாதி ஒட்டிற்கான சமரசத்தில் விழ்ந்ததன் காரணமாக இன்றைய சாதி பெருமை பேசும் அமைப்புகளுக்கு தாங்களும் ஒரு  வாக்கு வங்கி அரசியலை வைத்திருக்கிறோம்,. சாதி ஓட்டை தக்க வைக்கஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று கிளம்பி கையில் எடுத்துள்ள ஆயுதம் சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிரான “காதல் மறுப்பு ஆயுதம்“,..  இந்த காதல் மறுப்பு ஆயுதத்தை வைத்துக் கொண்டு தனது சாதிய பெருமை பாதுக்காப்பதாக சொல்லி இவர்கள் தமிழகத்தில் போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல..,

தமிழகத்தில் சைவத்தை பாதுகாப்பதற்காக 8000 சமணர்களை கழுவேற்றிக்கொன்றதாக பெரியபுராணம் கூறுகிறது. இதே தமிழகத்தில் தற்போது மத அடையாளங்களை தாங்கிப்பிடிக்கும் சாதிய அடையாளத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட சாதியஆதிக்க அரசியல் அதற்காக கௌரவக் கொலைகளையும், கௌரவத் தற்கொலைகளையும். கட்டப்பஞ்சாயத்துக் களையும் கடைபிடித்து வருகிறது. மதுரைவீரனும். முத்துப்பட்டரும் சாதிய கட்டுப்பாட்டிற்காக கொல்லப்பட்டதும் பின்னர் அவர்களையே குல தெய்வங்களாக மாற்றியதும் நாம் அறிந்ததே.. இந்த சாதிய பெருமிதமும். கட்டமைப்பும் இன்றும் தொடர்கிறது, அதன் வினைதான் இந்த கொலைகளும். தற்கொலைகளும்,.  

கடலூர் மாவட்டம் புதுகோரைப்பட்டி முருகேசன்கண்ணகி. விழுப்புரம் மாவட்டம் மறவநத்தம் சுதா-ஈரோடு அரச்சலுர் தமிழ்செல்வன். திண்டுக்கல் மாவட்டம் பழனி பண்ணாரி- திருச்சி சோமரசம் பேட்டை பிரியா. ஈரோடு மாவட்டம் பெரியார்நகர் இளங்கோ- திருப்பூர் செல்வலட்சுமி. திருவண்ணாமலை ரெட்டியார்பாளையம் துரை-தேன்மொழி. திருவாரூர் மாவட்டம்அரிதுவார்மங்கலம் லெட்சுமி-சிவாஜி,  தஞ்சாவூர் சூரக்கோட் டையைச் மாரிமுத்து-அபிராமிசென்னைசிமென்ட்ரி சாலை பகுதி டேனியல் செல்வக்குமார்-சதுரா,  சிவகங்கை மாவட்டம்,  கே.புதுக்குளம் சிவக்குமார்-மேகலா, தர்மபுரிமாவட்டம் வெற்றிவேல் சுகன்யா, திருச்சி ஜெயா-  கார்த்திக் பரமக்குடியில் 17 வயது திருச்செல்வி 1998 இல் புதுக்கோட்டையில் தலித் இளைஞர்கள் மூவர் தலித்துகள் அல்லாத பெண்களைத் திருமணம்செய்துகொண்டதற்காக ஆதிக்கச் சாதியினரால் தண்டனைக்குள்ளானார்கள்அவர்கள் மொட்டையடிக்கப்பட்டுநிர்வாணமாக்கப்பட்டுஅடித்துத் துன்புறுத்தப்பட்டார்கள்இரவு முழுவதும் கிராமச் சாலைகளில்உருள வேண்டுமென்று அவர்களுக்குத் தண்டனையும் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2009-10இல் மட்டும் சுமார் 11,483 பெண்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்அதே காலகட்டத்தில் 1,216 பெண்கள்கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்என்று எவிடென்ஸ் என்ற அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்க்கிறது. இவ்வளவையும் தாண்டித்தான் காதலுக்காக பாடப்பட்ட இலக்கியங்களும், காதலை வாழ வைத்த நாகரிகங்களில் தொன்மையான நாகரிகமாக தமிழ் கூறும் நல்லுலகம் இருந்துள்ளது.

எனவே தான் தமிழகத்தில் சாதியமறுப்பு, வருணாசிரம எதிர்ப்பு என்ற அடிப்படையில் திராவிட இயக்கத்தின் போராட்டம் இருந்தது. அதன் தொடர்ச்சிதான் 1967,ல் அண்ணா முதல்வராக இருந்தபோது,சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் மசோதாவை தந்தை பெரியாரிடம் காண்பித்தபோது, ‘மாலை மாற்றி தாலி கட்டவேண்டும் ‘’ என்றிருந்த பகுதியைப் பார்த்து ’’தாலி கட்டுவதை அவசியமாக்கத்தேவையில்லை’’ என்று திருத்தம் கூறினார்அதை ஏற்றுக்கொண்ட அண்ணாவும் அந்தப் பகுதியை நீக்கினார்அதன்பின்னரே இந்தியாவிலேயே முதன்முதலாக சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில்சட்டபூர்வமாக்கப்பட்டன.

இந்த பின்ணனியில் பார்த்தால் தர்மபுரி அருகே உள்ள செல்­லன்­கொட்­டாயைச்   சேர்ந்­ திவ்யாவும், நாயக்கன்­கொட்டாய்  நத்தம்  கால­னியைச்   சேர்ந்த இள­­ரசன்  சாதியை மறுத்து காதல் திருமணம் செய்தனர். இவர்களது காதலுக்கு குடும்பங்களில் ஆரம்பத்தில் எதிர்ப்பு வந்தாலும். ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து நடத்தி அதில் திவ்யாவின் தந்தை நாகராஜ் அவர்களை கூனி குறுகச் செய்து சாதிய பெருமையை பாதுகாக்க வேண்டும் என்று கடும் நிர்பந்த்திற்கு உள்ளாக்கியும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனை காரணமாக வைத்து ஆதிக்க சாதியினர் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் நர வேட்டை ஆடினார்கள். வீடுகளை அடித்து நொறுக்கி, தீ வைத்து பொருட்களை கொளுத்தி பல கோடி மதிப்பில் சேதப்படுத்தினார்கள். தொடர்ந்து இந்த பிரச்சனையை சாதிய ஆதிக்கமாக பாமக முன்னெடுத்து சாதிய அணிதிரட்டலையும் செய்தது. செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மரக்காணத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது. இதனையொட்டி ஜனநாயக அமைப்புகள், பல்வேறு அரசியல் அமைப்புகள். தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகளின் போராட்டத்திற்கு பின்பே காவல்துறை நடவடிக்கை எடுத்தது, தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறு நிவாரண உதவியை அளித்தது.

இந்த நிலையில் திவ்யா காணாமல் போனதாக இளவரசன் ஒரு வழக்கும்,  திவ்­யாவின் தாய் தேன்­மொழிஆட்­கொ­ணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தனர்அத­­டிப்­­டையில்இள­­­சனும்திவ்­யாவும் நீதி­மன்­றத்தில் ஆஜர்­­டுத்­தப்பட்­­போதுஏற்கனவே. ‘‘நான் கண­­னுடன்  செல்ல விரும்­பு­கிறேன்” என்று  திவ்யா மூன்று முறை நடைபெற்ற விசாரணையிலும் கூறி இளவரசனோடு சென்ற திவ்யா இம்முறை அவரது உறவினர்களால், சாதியினரால் நிர்பந்தப்படுத்தப்பட்டதன் காரணமாக  திவ்யா, ‘‘தனது  தந்தை தனக்­கா­கவே இறந்­ததால்தாய் தனி­யாக இருக்­கின்றார்எனவே அவ­ருடன்செல்ல விரும்­பு­கிறேன்.” என நீதி­­தி­யிடம் கூறியதால்  திவ்யாதாய்  தேன்­மொ­ழி­யுடன்  அனுப்பி   வைக்­கப்­பட்­டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் இளவரசனின் மரணம் நிகழ்ந்துள்ளது. காவல்துறையும், ஊடகங்களும் இதனை தற்கொலை என்கின்றனர். அவரது பெற்றோர்களும், உறவினர்களும் கொலை என்கின்றனர், இதனை வைத்து 10 நாட்களாக பிரேத பரிசோதனை, பல மருத்துவர்கள் பரிசோதனை, நீதிமன்ற தலையீடு என்று பத்திரிக்கைக்கும், ஊடகங்களுக்கும் நல்ல தீனியாக இளவரசன் மரணம் பயன்பட்டது. ஆனால் அடிப்படையில் கொலையோ, தற்கொலையோ அதற்கான நிர்பந்தத்தை உருவாக்கிய சாதிய அடையாளத்தை பெரும் பகுதி ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை.  இந்த சூழலில் தான் வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் எம்.பி.ராஜேஷ் தலைமையில், மாநிலத்தலைவர்கள் உள்ளிட்டு இளவரசனுக்கு அஞ்சலி செலுத்தவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவும் சென்றால் அதற்கு தமிழக காவல்துறை ஏராளமான தடைகளை விதித்தது. நெடிய போராட்டத்திற்கு பின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லி வந்தோம்.

கடந்த ஜூலை 11ம் தேதி சேலத்தில் சாதி மறுப்பு, காதல்திருமணத்தை ஆதரித்து, சமூக நீதிக்கான சிறப்பு மாநாட்டை டிஒய்எப்ஐ நடத்தியது. கடுமையான போலீஸ் கெடுபிடி திரும்பிய பக்கமெல்லாம் ஆயுதம்  தாங்கிய போலீஸ். என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று காவல் ஆணையரில் துவங்கி அடிமட்ட போலீஸ் வரை ஏராளமானோரும், திரும்பிய பக்கமெல்லாம் வீடியோ பதிவு, உளவுப்பிரிவு, நுண்ணறிவு பிரிவு, சிறப்பு காவலர்கள் என தலைவவர்களின் பேச்சை பதிவு செய்தனர். தமிழகத்தில் சுயமரியாதை இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் கட்டி வளர்த்த சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம், விதவை திருமணம், கலப்பு திருமணங்களை முன்னெடுப்போம், சாதிய கட்டுமானத்தை தகர்த்தெறிவோம் என்று சிறப்பு தீர்மானத்தோடு மாநாடு நிறைவு பெற்றது.  

மாநாட்டில் சாதியை கட்டியளும் வெறியர்களே நீங்கள் தினமும் பயன்படுத்தும் அனைத்தும் எனது சாதிக்காரன் உற்பத்தி செய்த பொருள்தான், நான் சுவாசிக்கும் காற்று என் சாதிக்காரன் உற்பத்தி செய்தது, நான் குடிக்கும் தண்ணீர் எனது சாதிக்காரன் உற்பத்தி செய்தது, என்று வாழ முடியுமா? எனது சாதிக்காரன் என்பதால் நான் வாங்கும் பொருளுக்கு விலை குறைப்பு, எனது சாதிக்காரன் என்பதால் கட்டணமில்லா கல்வி, கட்டணமில்லா மருத்துவம், வேலைசெய்யும் இடத்தில் சம்பளஉயர்வு என்று தனியாக சலுகை கொடுக்கிறார்களா? இல்லையே அப்புறம் ஏன் சாதிய பெருமையை பிடித்து குதிக்கீறிர்கள்..

தீண்டாமை ஒரு பாவச் செயல். தீண்டாமை ஒரு பெருங்குற்றம். தீண்டாமை ஒரு மனிததன்மையற்ற செயல் என ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் அரசுகள், தீண்டாமையை கடைபிடிப்பவர்களை தயுவு தாட்சண்யமின்றி சிறையில் தள்ளியிருந்தால் இந்த கொலைகளும். தற்கொலைகளும் நிகழ்ந்திருக்காது. தமிழகத்தின் திராவிட இயக்கங்கள் தொடர்ந்து தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக ஏற்படுத்திக்கொள்ளும் சமரசமே தீண்டாமை கொடுமையை நீடித்து வைக்க செய்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை சமூத்தில் தீண்டாமையை கடைபிடிக்கும் சாதியில் உள்ள வெகுஜன மக்களிடம் கருத்தியல் மாற்றத்தை அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும் என்றால் பொதுவான அரசியல் நீரோட்டமிக்க ஜனநாயக அமைப்புகளின் போராட்டங்களே மாற்றத்தை உருவாக்கும்.

ஆனால் தற்போது தமிழகத்தில் தனது சாதியின் பெருமைக்காக. விடுதலைக்காக என்று மேலும் சாதிய திரட்டலே நடைபெறுகிறது. இது சாதிய ஒழிப்புக்கோ. தீண்டாமை ஒழிப்புக்கோ பயன்படாது. அதேபோல் ஆண்ட சாதி என்று பெருமை பேசுபவர்கள் எல்லாம் இன்று இட ஒதுக்கீட்டிற்காக தன்னை இடைநிலை சாதியாக தகுதி இறக்கம் செய்து சலுகை வேண்டும் என்கிற போது எங்கே இருக்கிறது சாதிய பெருமை..
இங்கே சமூக வாழ்வியல் எதார்த்தமே மேலோங்கியுள்ளது. எனவே கேட்கப்பட வேண்டிய கேள்விகள் ஏராளம் உள்ளது. கேட்டகாமல் நெடுமரங்களென பெட்டைப்புலம்பலாய் நாம் இருந்தோம் என்றால் இந்த கட்டமைப்பை தகர்தெறியமுடியாது. தமிழகத்தில் இன்றைய சூழலில் பெரும் பகுதி மக்கள் இன்றைய நவீன தாராளமயக் கொள்கைகளின் நெருக்கடியில் மீள ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் ஒன்றுபட்ட போராட்டங்கள் வேகமாக முன்னெடுக்கப்படும் போது இந்த சாதிய எண்ணங்களை பின்னுக்கு தள்ள முடியும். பெரும் பகுதி மக்கள் அரசியலை சார்ந்து நிற்பதால் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை வலுவாக முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை கீற்றும் உள்ளது.

2006 ஆண்டு நீதிபதி மார்க்கண்டேய கட்சு , லதாசிங் / எதிர்உத்திரபிரதேச அரசுஎன்ற வழக்கில்  சாதிய சமூகம் பெரும் சாபக்கேடு என்றும் இந்த சாதிய முறை நாட்டில் உள்ள எல்லா நல்லவற்றையும்பாழ்படுத்திவிடும் ஆபத்தானத்தையும் ,அதனை ஒழிக்க சாதி மறுப்பு திருமணங்களே தீர்வுகள் என குறிப்பிட்டார்.  அரசும் ,சமூகமும் இந்த காதலர்களை பாதுகாக்கவேண்டும் . காதல் ஒரு மனித உரிமை என்றுஉரக்க பேசினார்.  இதனை இன்றைய நீதிமன்றங்களும். ஆளும் அரசுகளும் முன்னெடுக்க வேண்டும். எனவே தான் டிஒய்எப்ஐ சமூக நிதிக்கான மாநாட்டை தந்தைபெரியாரும். டாக்டர அம்பேத்காரும், சிங்காரவேலரும், சீனிவாசராவும் போராடிய பாதையில் ஏராளமான சமூக சீர்திருத்தவாதிகளின் வழியில் நின்று சாதி மறுப்பு. சுயமரியாதை. மூடநம்பிக்கை எதிர்ப்பு. பெண்விடுதலை, மதவெறி எதிர்ப்பியங்கங்களை முன்னெடுப்போம். பட்டுக்கோட்டையார் சொன்னதை போல்

“யாருமேல கீறீனாலும், இரத்தம் ஒன்னுதான், ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம் தான்“ என்ற வரிகள் தமிழகத்தின் வீதிகளில் பரப்புவோம்.
நன்றி- இளைஞர் முழக்கம்
செ.முத்துக்கண்ணன்

No comments:

Post a Comment