”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

இந்திய விடுதலையின் நாற்றங்கால் பிப்ரவரி 18 கப்பற்படை புரட்சி


எழுக அடிமையாயிருக்க
விரும்பாதவர் அனைவரும் எழுக !
நமது சதையும் ரத்தமும் சேர்ந்து
பெரும் சுவர் ஒன்றை எழுப்பும்

என்ற நீஹ் ஏர் என்னும் சீன கவிஞனின் கவிதை வரிகளுக்கு உயிர் கொடுத்த புரட்சிப் பயணம் சீன நெடும்பயணம். அதன் எழுச்சியே மக்கள் புரட்சியை உருவாக்கியது. உலகின் முதல் சோசலிச புரட்சியான ரஷ்யபுரட்சி கொடுத்த உற்சாகமும், வழிகாட்டுதலும் அதன் தியாகமுமே! வடகொரியா, வியட்நாம், கியூபா, ஐரோப்பாவின் பல நாடுகளில் சோசலிச அரசுகளை உருவாக்கப் பயன்பட்டது.
சூரியன் அதமிக்காத சாமராஜ்யத்தை கொண்ட ஏகாதிபத்தியம் என வர்ணிக்கப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே பயந்து நடுங்கிய புரட்சியாக 1946 பிப்ரவரி-18 அன்று தல்வார் கப்பற்படையில் துவங்கிய மாலுமிகளின் எழுச்சிமிக்க கிளர்ச்சி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அடிவயிற்றை கலக்கியது என்றால் மிகையாகாது.

1942களில்  பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மணி மகுடத்தை அலங்கரிகும் வைரக்கற்களே இந்தியா. சாம்ராஜ்யத்தின் எந்த பகுதியையும் நாம் இழக்கலாம். ஆனால் இந்தியாவை இழந்தால்  சாம்ராஜ்யமே அழிந்து விடும் என்று பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் அலறிக் கொண்டிருந்தார்.  நான் பிரதமராக இருப்பது  பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கலைப்பிற்கு தலைமை தாங்குவதற்கு அல்ல என்று 1942ல் ஆணவத்தோடு சர்ச்சில் குறிப்பிட்டார். 1945ல் இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் காலனியாதிக்க நாடுகளின் விடுதலைக்கான போராட்டங்கள் எழுச்சியோடு, வீரியமிக்க முன்னேற்றத்தை நோக்கி நடைபெற்றது. டாலின் தலைமையில் சோவியத் மக்களும், செஞ்சேனையும் பாசிட் ஹிட்லரைத் தோற்கடித்தது, பெரும் பகுதியான நாடுகள் விடுதலையடைய உதவி செய்தது. அதே காலத்தில் தான் இந்தியாவிலும் பிரிட்டிஷ் இராணுவத்திற்குள் கொந்தளிப்பு உருவாகி கொண்டிருந்தது. இதன் பின்னணியில் பிரிட்டிஷ் பிரதமர் அட்லி பிரபுவின் சுருதி இறங்கி கொண்டிருந்தது.
1946 பிப்ரவரி மாதம் 18ம் தேதி  தல்வார் என்னும் பயிற்சி கப்பலில் புரட்சி தீ மூண்டது. சில மணி நேரத்தில் ராயல் இந்திய கப்பற்படை முழுவதிலும் காட்டுத் தீ போல் பரவியது.  பிரிட்டிஷ் பிரதமர் அட்லி பிரபு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசும் போது 1920-லோ, 1930-லோ, 1940-லோ இருந்த தட்ப வெப்பநிலை இப்போது இந்தியாவில் இல்லை. இன்று முற்றிலும் மாறுப்பட்ட நிலை உள்ளது. எனவே மாறுபட்ட அணுகுமுறை தேவை என்று கூறி இறங்கி வந்து அதிகார மாற்றம் பற்றிப் பேச ஒரு குழுவை அனுப்பினர்.  அந்த அளவிற்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை மிரட்டி பணிய வைத்த இயக்கம் கப்பற்படை எழுச்சி ஆகும்.

கிழக்கிந்திய கம்பெனிக்கெதிரான போராட்டத்தின் உச்சமாக நடந்த முதலாம் சுதந்திரப்போராட்டத்திற்கு பிறகு 1858ல் இந்தியாவில் பிரிட்டிஷ் மகாராணியின் நேரடி ஆட்சி ஏற்பட்ட நாள் முதல் அதற்கெதிராக ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறை சென்றனர். தடியடி, துப்பாக்கி சூடு, உயிர் பலி என தியாகம் செய்தனர். அப்போது எல்லாம் ஆட்சி மாற்றத்தை பற்றி சிந்திக்காத வெள்ளை அரசு கப்பற்படை எழுச்சியை கண்டு பயந்தது.
ஏனெனில் சம காலத்தில் வெள்ளை அரசின் முக்கிய கேந்திரமாக விளங்கிய இரயில்வேயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டம், சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், வங்கத்தின் விவசாயிகளின் புகழ் பெற்ற போராட்டமான தெபாகா போராட்டம் விளைச்சலில் முக்கால் பங்கு விவசாயிகளுக்கு வேண்டும் என்ற கோரிக்கைக்கான இயக்கம், தெலுங்கானாவில் துவங்கிய போராட்டம், மாராட்டியத்தில் நடைபெற்ற வார்லி ஆதிவாசிகள்  எழுச்சிமிக்க போராட்டம், திருவாங்கூர் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதரவு மன்னனையும் திவானையும் எதிர்த்த புன்னப் புரா வயலார் மக்களின் ஆயுத மேந்திய எழுச்சியும் என எழுச்சிகரமான இயக்கங்கள் இக்காலத்தில் நடைபெற்றது.
இந்த தருணத்தில் கப்பற்படை வீரர்களின் புரட்சி நடைபெற்றது. புரட்சி செய்த கப்பற்படையினரைச் சுட தரைப்படையினர் மறுத்தனர். விமானப்படையினர் மறுத்தனர். மராட்டிய காவல்படை, கூர்க்கா படைகள் மறுத்தது. இப்படி வெள்ளை அரசுக்கு ஆதரவாக இருக்கும் என நம்பிய இராணுவத்தின் பல பிரிவுகள் கப்பற்படைக்கு ஆதரவாக மாறியது வெள்ளை அரசாங்கத்தின் சுருதியை குறைத்தது. இதனால் வெள்ளையர்களை கொண்டே சுட வேண்டிய நிலை ஏற்பட்டது


தல்வார், பஞ்சாப் துறைமுகத்தில் இருந்த எச்.எம்... பஞ்சாப் என்னும் போர்கப்பல், கொழும்பு துறைமுகத்தில் இருந்த எச்.எம்.. பரோடா , பம்பாய் துறைமுகத்தில் இருந்த  பிராள், ஔத் குறுயோன், மோடி, நீலம், தனுஷ், ஜமுனா, தீர், அஸாம், சிந்து, மராத்தா, மதரா, நர்மதா, ஹீரா, கைபர், கிளைவ், லாரன் போன்ற கப்பல்களில் எல்லாம் பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு மூவர்ண கொடியும், கம்யூனிட், முலீம் லீக் கொடிகள் ஏற்றப்பட்டன. பம்பாய் கப்பற்படை துறைமுகத்திற்கு சமமான பங்களிப்பை இந்த எழுச்சியில் ஏற்படுத்திய காரச்சி துறைமுகத்தின் அருகில் இருந்த மனோரா தீவில் இருந்த எச்.எம்.. பஹதார், சமக், ஹிமாலய ஆகிய கப்பற்படை நிறுவனங்களும் செயல்பட்டு வந்தன
எச்.எம்.. ஹிந்துதான், எச்.எம்.. திருவாங்கூர் ஆகிய கப்பல்களிலும் வேலைநிறுத்தம் துவங்கியது. மேற்படி கப்பல்கள் உள்ளிட்டு 80க்கும் மேற்பட்ட கப்பற்படை கப்பல்களில் 20000க்கும் மேற்பட்ட மாலுமிகள் வரலாற்று சிறப்புமிக்க வேலைநிறுத்ததை துவக்கினார்கள். 36 பேர் கொண்ட போராட்டக்குழு தேர்வு செய்யப்பட்டு எம்..கான் அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கப்பற்படை புரட்சி வீரர்கள் முதலில் அமைதியான முறையில் துறைமுகத்தில் இருந்து தானா ரயில் நிலையத்தினை நோக்கி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினார்கள். அவர்கள் அமெரிக்க செய்தி ஒலிபரப்பு நிறுவனத்தை கடந்த போது அமெரிக்க கொடிகளை கிழித்தெறிந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக என்ற கோசங்களோடு நடந்து சென்றனர்

மாலுமிகள்  8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
 1. .என். வீரர்கள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
2. மாலுமிகளிடம் நாகரிமற்ற முறையில் பேசி அவமானப்படுத்திய தல்வாரின் கமாண்டிங் அதிகாரி கிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3.  சமாதான காலத்தில் ( யுத்த காலத்தில் ) வேலை நீக்கம் செய்யப்படக் கூடிய மாலுமிகளுக்கு புனர் வாழ்வளிக்கவும் வேலை வாய்ப்பளிக்கவும், தேவையான நடவடிக்கைகளை விரைவில் மேற் கொள்ள வேண்டும்.
4. ராயல் நேவியின் மாலுமிகளுக்கு வெள்ளையர்களுக்கு அளிக்கப்படும் சம்பள விகிதமும் பஞ்சப்படியும் இதர சலுகைகளும் ராயல் இந்தியன் நேவியின் இந்திய மாலுமிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்.
5. அனைத்து உணவகங்களுக்கும் இந்திய மாலுமிகள் செல்ல அனுமதிக்க வேண்டும்.
6. நல்ல உணவு அளிக்க வேண்டும்.
7. வேலை நீக்கம் செய்து அனுப்புகிற போது துணிகளையும், பெட்டிகளையும் திருப்பி ஒப்படைக்கும் படி கட்டாயப்படுத்தக் கூடாது.
8.இந்தோனேஷியாவிலுள்ள இந்தியப் படைகளை வாப பெற வேண்டும். மேற்கண்ட மாலுமிகளின் உடனடிக் கோரிக்கைகளும், பொருளாதாரக் கோரிக்கைகளும், தேசத்தின் அரசியல் கோரிக்கைகளும் அடங்கிய இந்த பட்டியல் அனைத்து பகுதி மாலுமிகளையும் கவர்ந்தன. ஒன்றுபடுத்தின

இக் கோரிக்கைகளுக்காக நடைபெற்ற இயக்கத்திற்கு ஆதரவு கேட்டு மாலுமிகளின் போராட்டக்குழு காங்கிர, முலீம் லீக், கம்யூனிட் கட்சிகளை ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டது. இதே நேரத்தில் பல இடங்களில் மாலுமிகளின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடக்க வெள்ளைப்படை நேரடி நடவடிக்கையில் இறங்கியது. அதில் காரச்சி துறைமுகத்தில் இருந்த இந்துதான் கப்பலில் மாலுமிகளின் வேலைநிறுத்ததை முறியடிக்க நேரடி ஆயுதத்தாக்குதலை துவக்கியது. மாலுமிகளின் பதில் தாக்குதலும் அசராது நடைபெற்றது.  


வீரம் செறிந்த போராட்டகளத்தின் போது காங்கிர கட்சியின் தலைவர்களான, அருணா ஆசிப் அலி, வல்லாபாய் பட்டேல், ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி ஆகியோர் கப்பற்படை மாலுமிகளின் எழுச்சி மிக்க போராட்டத்திற்கு எதிராக அறிக்கை விட்டதோடு, உடனடியாக வெள்ளையர்களிடம் சரணடைய வேண்டும் என்றனர். இதை தொடர்ந்து முகமது அலி ஜின்னாவும் மாலுமிகள் சரணடைய வேண்டும் என்றார்.
கம்யூனிட் கட்சி மட்டும் மாலுமிகளின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவை தர தொழிலாளிவர்க்கத்தை கேட்டுக் கொண்டது. வரலாற்று சிறப்பு மிக்க பம்பாய் தொழிற்சாலைகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து சாலைகளில் பேரணி நடத்தினர். மாணவர்கள் கல்வி நிறுவனங்களை புறக்கணித்தனர்
மக்கள் கப்பற்படை வீரர்களுக்கு தேவையான உணவுகளை படகுகளில், வண்டிகளில், வேன்களில் கொண்டு சென்று கொடுத்தனர். தல்வாரும், கத்திவாரும், இந்துதான், எச்.எம்..  பஞ்சாப் கப்பல்களில் நடைபெற்ற போராட்டம் இளைஞர்களை எழுச்சிக் கொள்ள செய்தது. விமானப்படை வீரர்கள் தான் முதன் முதலில் மாலுமிகளுக்கு  ஆதரவாக களத்தில் இறங்கி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினார்கள். மக்களும், ஆயுதப்படையினரும் இணைந்த புரட்சி இந்தியாவில் ஏற்படும் என்றால் இந்தியாவை அடிமைப்படுத்தி மக்களை சுரண்டிக் கொழுத்தவர்களை எவ்வித சலுகையும் அளிக்காமல் மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இந்திய தேசிய தலைமைக்கும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது. இதனால் இந்திய தேசிய தலைமை இந்த எழுச்சிக்கு ஆதரவளிக்கவில்லை. வெள்ளையனிடம் புரட்சியை அடகு வைக்க ஏற்பாடு செய்தது.
வல்லபாய் பட்டேல் அறிக்கை இவ்வாறு வெளியிட்டார்.  கப்பற்படை வீரர்கள் ஆயுதக் கலகம் செய்திருக்ககூடாது என்றும் கப்பற்படையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் வேண்டுமென்னும் தளபதியின் கூற்றை ஆதரிப்பதாகவும் கூறினார். பிரிட்டிஷ் படையினர் புரிந்த படுகொலையை  கண்டித்து இயக்கம் பிப்-22 அன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துமாறு போராட்டக்குழு தேசிய இயக்கங்களை, மக்களை கேட்டுக் கொண்ட போது காங்கிரசின் தலைவர் மௌலானா அபுல்கலாம் ஆசாத்  இவ்வாறு அறிக்கை வெளியிட்டார்


''வேலைநிறுத்தங்களும், ஹர்த்தால்களும் இன்றைய தற்காலிகமான அதிகாரத்தை மீறி நடப்பது அவசியமற்றது. இடைக்காலப் பொறுப் பாளர்களாக பணியாற்றும் அயல் நாட்டு ஆட்சியாளர்களுடன் பிணக்கு கொள்வதற்கு உடனடியாக காரணம் எதுவும் எழவில்லை. மகாத்மா காந்தி  அவர்கள் மேலிருந்து கீழ் வரை ஒன்றுபட்டிருப்பின் அதை என்னால் புரிந்து கொள்ள முடிந்திருக்கலாம். அது இந்தியாவை வெறிக் கூட்டத்திடம் (கீழ்மட்ட மக்கள் அல்லது ஒழுங்கீனமான கூட்டம் என பொருள்படும்) ஒப்படைப்பதாகும் என்பது மெய். அந்த முடிவைக் கண்ணால் காண 125 வயது வரை உயிர்வாழ நான் விரும்பவில்லை. அதற்கு பதிலாக நெருப்பில் விழுந்து அழியவே விரும்புகிறேன்''
கப்பற்படை மாலுமிகளின் போராட்டக்குழு தேசிய காங்கிர தலைமையின் ஆதரவு இல்லாத நிலையில் காங்கிர, முலீம் லீக் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று நாங்கள் மக்களிடம் சரணடைகிறோம், நாங்கள் தோற்றுவிட்டதாக கருதவில்லை, ஒரு நாளும் தோற்கப் போவதுமில்லை. பிரிட்டிஷ் இராணுவம் எங்களை எங்கே கொண்டு போகிறது என்பது எங்களுக்கு தெரியாது. உங்களுக்கு நன்மை உண்டாகட்டும் என்ற அறிவிப்போடு போராட்டக்குழு சரணடைந்தது. 

இதன் பிறகு வெள்ளை அரசின் பழிவாங்கும் படலம் தொடங்கி போராட்டக்குழு வீரர்கள் கைது செய்யப்பட்டனர். சுமார்  1500 பேர் ராயல் இந்திய கப்பற்படையிலிருந்து வேலைநீக்கம் செய்யப்பட்டனர். போராட்டத்தை கைவிட்டால் பழிவாங்கல் இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்ன தேசிய தலைமையின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. இதனால் கப்பல்களில் ஏற்றப்பட்ட கொடிகளில் காங்கிர, லீக் கொடிகள் மட்டுமே இறக்கப்பட்டது. செங்கொடி மட்டும் உயரப்பறந்தது
இந்த தேசத்தினை வெள்ளையனிடம் இருந்து மீட்டெடுக்க நடைபெற்ற போராட்டங்களின் உச்சகட்டமாக மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், இராணுவ வீரர்கள், மாலுமிகள் இவர்கள் அனைவரின் இரத்தமும், வியர்வையும், உயிரும் ஒரு சேர பம்பாய் வீதிகளில் போராடியது, குருதி கொட்டிற்று.. மக்களின், இராணுவ வீரர்களின் இரத்தம் ஒரு சேர வீதியில் ஒடியது. அப்படிப்பட்ட வரலாற்று  சிறப்பு மிக்க இந்த போராட்டத்தை கண்டு வெள்ளை அரசு பயந்தது. காங்கிர பயந்தது, முலீம் லீக் பயந்தது.  எனவே தான் இன்று வரை அந்த கப்பற்படை எழுச்சியில் பங்கேற்ற வீரர்களின் நிலை என்ன, அவர்களது குடும்பத்தின் நிலை என்ன, அவர்களுக்கான வேலை உத்தரவாதம் வழங்கப்பட்டதா ? என்று கேட்டால் எதையும் சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்கள் செய்யவில்லை. அந்த எழுச்சிகரமான மாலுமிகளின் தியாகத்தை மறைக்கும் ஏற்பாட்டை காங்கிரஸ் செய்தது
ரஷ்ய புரட்சியின் முக்கிய பங்களிப்பை செலுத்திய பொட்டம்கின், அரோரா கப்பல்கள் இன்றும் நினைவு பொக்கிஷமாக வரலாற்றை இளம் தலைமுறைகளுக்கு கற்றுக் கொடுத்து வருகிறது. பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய அரசு இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு ஒரு நினைவு சின்னம் கூட எழுப்பவில்லை. இரண்டு நாள் சிறை சென்றவனுக்கு அளித்த மரியாதை கூட உயிர் தியாகம் செய்த கப்பற்படை வீரனுக்கு அளிக்கவில்லை


இப்படிப்பட்ட எழுச்சிகளின் பின்னணியில் ஆட்சிப் பீடம் ஏறிய காங்கிர அரசு இன்று வரை மக்களை வஞ்சித்துக் கொண்டே வருகிறது. பல நுற்றுக்கணக்கான தியாக பாரம்பரியத்தின் பூமியான இந்தியாவை, இந்திய மக்களை இன்று அந்நிய கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாற்றி வருகிறது. இயற்கை கனிமவளங்களை கொள்ளையடிக்க அனுமதிப்பது, நீராதாரங்களை தனியார் எடுத்துக் கொள்ள அனுமதிப்பது, கல்வி, சுகாதாரம், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய மூதலிடு. பன்னாட்டுக்கம்பெனிகளுக்கு ஆதரவாக நிலசீர்திருத்தம்  செய்து பல்லாயிரக்கணக்கான நிலங்களை அபகரிக்க ஏற்பாடு, உணவு பாதுகாப்பு என்ற பெயரில் பொதுவிநியோக முறையை சீரழித்து ஏழைமக்களை பட்டினியில் தள்ள ஏற்பாடு, பொதுத்துறை நிறுவனங்களை நாசம் செய்து இழுத்துமூடநினைப்பது, விவசாயத்திற்கான மான்யங்களை ரத்து செய்து அனைத்து உழவுப்பொருட்களின் விலைகளை ஏற்றிவிட்டு கொள்முதல்விலையையும் குறைத்துவிட்டு லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு துண்டி வரும் மத்திய அரசு, உதிரி தொழிலாளர்களுக்கான சமூக நலத்திட்டங்களை வெட்டுவது,  என மக்கள்விரோத நடவடிக்கைக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  இப்படிப்பட்ட சூழலில் சுதந்திரப்போராட்ட காலத்தில் எப்படி உழைப்பாளி வர்க்கம்ஒன்று திரண்டதோ அதே போல் இன்று மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த தேசம் காக்கும் புனிதப் போரை நடத்துகிறது.
இந்த முதலாளித்துவ நிலப்பிரத்துவ ஆதரவு ஆட்சியாளர்களை எதிர்த்து கப்பற்படை எழுச்சி நடைபெற்ற பிப்ரவரி 18 நமக்கு உத்வேகமளிக்கட்டும்.. 
''மறந்து கொண்டே இருப்பதுமனித இயல்புஅதை நினைவு படுத்திக் கொண்டே இருப் பது         
நமது கடமை''
என மக்களுக்கான போராட்டத்தை நடத்தும் பிப் 20,21 வேலைநிறுத்தம் வரலாற்றில் பேசப்படட்டும். போராட்டம் வெல்லட்டும்


No comments:

Post a Comment