”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

மக்களின் காதலர்கள் மார்க்சிஸ்டுகள் !

யுத்தமில்ல உலகை கட்டுவோம்..


பூமிபந்தில் மனிதன் நலமாக வாழவேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. குறிப்பாக யுத்த வெறிக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. 1939 ஆம் ஆண்டு தொடங்கி 1945 ஆம் ஆண்டுவரை ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் நடந்த இரண்டாவது உலகப் போரின் போது ஜெர்மன், இத்தாலி ஜப்பான் ஆகிய நாடுகள் சரணடையும் தருணத்தில் அமெரிக்கா தான் கண்டுபிடித்த அணுகுண்டுகளை பயன்படுத்த வேண்டும் என்ற வெறி இதற்கு என்ன காரணம்.மேலும்,  இரண்டாம் உலக போருக்கு முன்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உலகின் பெரும் பகுதி நாடுகளை ஆண்டது இவர்களது கட்டுப்பாட்டில் ஏராளமான நாடுகளை வைத்திருந்தனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விட நான் பெரிய ஆள் என்று அமெரிக்கா காண்பிக்க நினைத்தது.பதநாடுகளின  இரண்டாம் உலகப் போரை முழுமையாக நடத்தியவர் ஹிட்லர். இந்த ஹிட்லரை தோற்கடித்தது ஸ்டாலின் தலைமையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியாகும்.  எனவே சோவியத்நாட்டை விட பெரியவன் என காட்டிக் கொள்ள

 நினைத்தது, ஜப்பான் நாடு சரணடையும்  சூழ்நிலையில், ஜப்பானிய முக்கிய நகரம் ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்கள் மீது பேட்மேன் லிட்டில் பாய் என பெயர் வைத்த இரண்டு அணுகுண்டுகளை அமெரிக்கா வீசியது. ஒரு குண்டின் எடை 20 ஆயிரம் டன் இன்னொரு குண்டின் எடை 15 ஆயிரம் டன், போட்ட ஒரு நொடிக்குள் பல ஆயிரக்கணக்கான மனித உடல்கள் சாம்பலாகி காற்றில் கறைந்துவிட்டது. இன்று இது போன்று 5500 அணுகுண்டுகளை கையில் வைத்துகொண்டு அமெரிக்கா உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுக்கின்றது.

மேலும் ஜப்பான் மீது அன்று போட்ட அணுகுண்டின் தாக்கம் இன்றும் ஜப்பானில் அணுகுண்டு கதிர் வீச்சு களால் பிறக்கும் குழந்தை மாற்றுத் திறனாளிகளுக்கான பிறக்கின்றது. 

1945 க்கு பிறகு 2500 அணுஆயுதப் பரிசோதனை பல நாடுகள் நடத்தியுள்ளனர். 1945 பிறகு ஏராளமான போர்கள் நடந்துள்ளது. கொரியா ஆப்கான், சிரியா, லெபனான், ஈரான், ஈராக், பல நாட்டின் மீது போர்கள் நடந்துகொண்டே இருக்கிறது. ஏகாதிபத்திய வெறியின் காரணமாக பல நாடுகளின் மீது ஏராளமான அனுகுண்டுகள் வீசப்பட்டன. குறிப்பாக வியட்நாம் நாட்டின் மீது 75 இலட்சம் டன் குண்டுகள் வீசப்பட்டன. கட்டிடங்கள் விளைநிலங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டன. 

இதே போன்று தான் அமெரிக்கா பல நாடுகளின் மீது குண்டு வீசியது. கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைன்னுக்கும் ரஷ்யாவுக்கும் போர் நடந்து கொண்டிருக்கிறது. வருடத்திற்கு 20 இலட்சம் பீரங்கி குண்டுகளை ரஷ்யா உக்ரைன்மீது வீசுகிறது. இதன் விளைவு என்ன மக்களின் அற்புதமான கட்டிட கலை, வாழ்விடம், கல்விகூடம் , மருத்துவமனைகள்,  வீடுகள் அழிக்கப்பட்டது. இதனை மீட்டுருவாக்கம் செய்ய பல பத்தாண்டுகள் ஆகும். இதனை உருவாக்க பொருளாதரம் தேவை. 

உலகம் முழுவதும் போர் நடக்கும் பகுதிகளில் பதட்டத்தில் 45 கோடி குழந்தைகள் வாழ்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாது. ஈரான் பள்ளியில் 110 குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசுகிறது இந்த அடவாடியை இந்திய நாட்டின் பிரதமர் மோடி கண்டிக்கவில்லை. இஸ்ரேலின் அடவாடியை கண்டித்து இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் போராட்டம் நடத்துகின்றனர்.

உலக நாடுகளின்  சமீபத்தில் நடந்த யுத்தத்தில் மட்டும் 3 கோடி மக்கள் இறந்துள்ளனர். உலகம் முழுவதும் இராணுவத்திற்கு ஏராளமான செலவு செய்கின்றனர். ஒரு மனிதனுக்கு உணவு கல்வி மருத்துவம் தொழில்நுட்ப அறிவு சாதனங்களை மக்களிடம் கொண்று சென்று விட்டால் போர் நடத்த வேண்டிய அவசியமில்லை. ஈரானுக்கு அமெரிக்காவுக்கும் போர் நடந்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏறுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது. தங்கம் விலை ஏறுகிறது. இதற்கு யார் காரணம். விவசாயிகள் விலை பொருட்களுக்கு கட்டுப் படியான விலை இல்லை. இதற்கு எல்லாம் என்ன காரணம் ஏகாதிபத்திய வெறியில் போர் நடந்தால் நம் நாட்டில விலைவாசி உயர்கிறது. எனவே தான் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் இவர்களோடு கைகோர்க்கும் கார்பரேட் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள்  போராட்டம் நடத்துகின்றனர். ஆகவே யுத்தவெறி என்பது எல்லோருக்கும் அபாயமானது. 

நம் வீடு குழந்தைகள் படித்து மருத்துவம் பொறியாளர் என படிக்க நினைக்கின்றனர். இந்த படிப்புகளை படிக்க நீட் க்யூட், க்ளாட், நெட், டெட் என பல்வேறு தகுதி என்ற பெயரில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று படிப்பில்சேர்கின்றனர். இந்த பட்டப் படிப்பு முடித்த பிறகு வேலை கேட்டால் நெக்ஸ்ட் தேர்வு எழுத வேண்டும் என்கின்றனர் இதனை படித்து தேர்ச்சி பெற்ற பிறகும் வேலை கேட்டால் ஆட்சியாளரகள் வேலையை தேடி வருகிறோம் என்கின்றனர். வடநாட்டில் மட்டும் நீட் தேர்வால் தனது மருத்துவ படிப்பு கிடையாது என்ற சூழலில் 22 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்துகல்வியில் மாற்றம் வேண்டும் என்று சொல்லி டில்லியில் 50 இலட்சம் மாணவர்கள் இளைஞர்கள் போராட்டம் நடத்தினால் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வுகானாமல் சொந்த நாட்டு மக்கள் மீது பெல்ட் குண்டு, கண்ணீர் புகை குண்டு, போட்டது ஒன்றிய சுமூகமாக பேசி தீர்க்க கூடிய பிரச்சனையை போலீஸ் துணை ராணுவத்தை கொண்டு தாக்கியதற்கு உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. 

நமக்கு பெல்ட் குண்டு தேவை இல்லை நமக்கு தேவை பேனா , அடுத்தவர்களுக்கு உதவும் மனிதநேய சிந்தனை உருவாக்கவேண்டும் 

தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது இளைஞர்களின் வேலை வாய்ப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை . 

எனவே இளைஞர்களுக்கு வேலை வழங்கும் நடவடிக்கைகளை மாநில அரசும் மத்திய அரசும் எடுக்க வேண்டும் உலகம் அமைதிபூங்காவாக மாறவேண்டும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் யுத்தங்கள் போர்களை தொலைந்து போகட்டும் யுத்தத்தை நடத்துகின்ற ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தை தகர்த்தெறிவோம் !

செ.முத்துக்கண்ணன்

ஆகஸ்ட் -6 ஹிரோசிமா, ஆகஸ்ட்-9 நாகசாகி நினைவு தினங்கள் !

 கெட்ட போரிடும் உலகை சாய்த்திடுவோம்! 

- செ.முத்துக்கண்ணன்


உலகமே ஒரு குடையின் கீழ் சுருங்கிவிட்டது. ஏகாதிபத்திய நிதிமூலதனம் எல்லைகளைச் சுருக்கிக்கொண்டே வருகிறது. நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் அதை மேலும் சுருங்க வைத்துள்ளன. ஏகாதிபத்தியங்கள் தங்களின் நெருக்கடிகளைத் தீர்த்துக்கொள்ள, வர்த்தக-பொருளாதார ஒப்பந்தங்கள் மூலம் நிர்பந்தம் செய்து கொள்ளையடித்துவருகின்றன. மறுக்கும் நாடுகளின் மீது யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பொய் பிரச்சாரங்கள், வதந்திகள், அவதூறுகளைக் கட்டமைத்துத் தங்களது ஊடக மேலாதிக்கம் மூலம் தாக்குதல் நடத்துகின்றனர்.தற்காலத்தில் ஆற்றல் சக்திகளை உற்பத்தி செய்யும் அரிதானதனிம வளங்களைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், தங்குதடையற்ற எரிசக்தி வளங்களுக்கும், சிப்-செமிகண்டக்டர் உற்பத்திக்காகவும், உலகின் சந்தைகளைத் தனதாக்கிக்கொள்ளவும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் பகுதியாகவே இரண்டாம் உலகப் போருக்குப் பின் வியட்நாம், கொரியா, ஆப்கானிஸ்தான், இராக், வெனிசுலா ஜனாதிபதி நாடுகடத்தல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்களது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் நிகழ்த்தியுள்ளது. சோசலிச கியூபாவின் மீது பொருளாதார யுத்தத்தை 67 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.சாமானிய மக்களின் வாழ்வினை அழித்துச் சில ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய சக்திகள் நடத்திவரும் போர்களும் கொள்ளையடிப்பு திட்டங்களுமே மக்களின் பேரழிவுக்கு காரணமாக அமைகின்றன. 

1945 ஆகஸ்ட் 6 ஜப்பானின் ஹிரோசிமாவிலும், ஆகஸ்ட் 9 நாகசாகியிலும் அமெரிக்க அணுகுண்டின் பேரழிவுநிகழ்த்தப்பட்டு 81 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதை நினைவுகூரும் அதே தருணத்தில், இன்றைய அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் விளைவுகளை நாம் அறிய வேண்டியுள்ளது. நிதி மூலதன மேலாதிக்கம், ஊடக மேலாதிக்கம், அரசியல் மேலாதிக்கம், பண்பாட்டு மேலாதிக்கம் எனத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அது எத்தகைய கொடூரமான வழிகளையும் கையாண்டு வருகிறது.


அணுகுண்டின் அழிவை சந்தித்த ஜப்பான்

1945-ல், இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் முக்கிய நகரமான ஹிரோசிமா மீது ஆகஸ்ட் 6-ம் தேதி அமெரிக்காவின் ‘எனோலாகே’ போர் விமானம் மூலம் “லிட்டில்பாய்” (Little Boy) என்ற யுரேனியம் அணுகுண்டு காலை 8:15 மணிக்கு வீசப்பட்டது. விநாடிப் பொழுதில் 70,000-க்கும்மேற்பட்ட மக்கள் சாம்பலாகிப் போனார்கள். மரண ஓலங்கள் எதிரொலித்துக் கொண்டிருக்கும் போதே, ஆகஸ்ட் 9-ம் தேதி ‘பாக்ஸ்கார்’ விமானம் மூலம் “ஃபேட் மேன்” (Fat Man) என்ற புளுட்டோனியம் அணுகுண்டு நாகசாகி மீது வீசப்பட்டது. இதில் 40,000 பேர் விநாடிப் பொழுதில் காற்றில் கரைந்தார்கள்.

இந்த அணுவெடிப்பின் வெப்பநிலை 4,000°C வரை உயர்ந்து, அங்கிருந்த கட்டடங்களையும் மனித உடல்களையும் கரியாக்கியது. அணுவெடிப்பின் கதிர்வீச்சுப் பாதிப்பு புற்றுநோய், மரபணு கோளாறுகள், பிறவி ஊனங்கள் என இன்று வரை தொடர்கிறது. இத்தகைய பேரழிவைக் கண்முன்னே கண்ட இந்த பூமியில், தற்போதும்யுத்தத்தின் பெயரால் ஏராளமான அழிவுகளை ஏகாதிபத்திய சக்திகளும் இனவெறி, மதவெறி சக்திகளும் நடத்திவருகின்றன.

இஸ்ரேல் - அமெரிக்கப் போர்வெறியும் உலக நெருக்கடியும்

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் - அமெரிக்க நாடுகளின் போர்வெறி காரணமாக ஏற்பட்ட போர், பூமிப் பந்தின் மீது கடும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதனால் ஆண்டுக்கு 3.5 டிரில்லியன் டாலர் வரை கூடுதலாகச் செலவாகுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான், ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் முதல் ஆண்டில் மட்டும் 493 பில்லியன் டாலர் உற்பத்தி இழப்பு ஏற்படும். ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கத்தால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 120 டாலர் வரை உயர்ந்தது. உலக வங்கியின் கணிப்புப்படி, உலகளாவிய பணவீக்கம் உயர்ந்துள்ளதுடன், செங்கடல் வழியான வர்த்தகத்தில் கப்பல் போக்குவரத்துக் கட்டணம் 300% உயர்ந்துள்ளது. 2030-க்குள் இந்த போர்கள் மொத்தம் 15 டிரில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தும். இது உலக ஜிடிபியில் 8% ஆகும். உடனடி போர் நிறுத்தமும், சர்வதேச நிதி மறுசீரமைப்புமே உலகைக் காப்பாற்ற உதவும்.


பாலஸ்தீன - உக்ரைன் போர் இழப்புகள்

பாலஸ்தீனத்தின் காசாவில் உள்கட்டமைப்பு சேதம் 18.5 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது; வேலையின்மை 80% ஆக உயர்ந்தது. இஸ்ரேல் பொருளாதாரம் ஜிடிபியில் 19.4%சரிந்தது. ஈரானின் தினசரி எண்ணெய் ஏற்றுமதி 50% குறைந்து, ஆண்டுக்கு 15–20 பில்லியன் டாலர் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் நான்குஆண்டுகளைக் கடந்து செல்கிறது. உக்ரைனில் அடுத்த பத்தாண்டுகளுக்கு மறுகட்டுமானச் செலவு 558 பில்லியன் டாலர் ஆகும். உக்ரைனின் உள்கட்டமைப்பு 30% அழிந்துள்ளது. ரஷ்யாவிலும் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதுடன், 565-க்கும் மேற்பட்ட மேற்கத்திய நிறுவனங்கள் சந்தையிலிருந்து வெளியேறியுள்ளன. இந்த அழிவுகள் ஐரோப்பிய நாடுகளை எரிசக்தி மற்றும் உணவு தானியப் பற்றாக்குறையில் ஆழ்த்தியுள்ளது. எரிசக்தி விலை உயர்வால் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு ஆண்டுதோறும் பல நூறு பில்லியன் டாலர்கள்கூடுதல் செலவாகின்றன.

வறுமையும் பசியுமா எதிர்காலம்?

உலக மக்கள் தொகையில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். சர்வதேச சந்தையில் உணவு தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய் விலைகள் 35-50% வரை உயர்ந்துள்ளதால், லட்சக்கணக்கான மக்கள் தீவிர பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர். பசியால் வாடுபவர்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் போர் மற்றும் வன்முறை பாதித்த பகுதிகளில் வாழ்கின்றனர். சக மனிதர்களைப் பட்டினியிலும் வறுமையிலும் வாழவைத்துவிட்டு, யுத்தங்களுக்காக இவ்வளவு பெரிய செலவுகளை செய்வது நியாயமா? உணவுப் பாதுகாப்பு இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்படும் சூழலில் கார்ப்பரேட் ஆயுத வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

இந்தப் போர்கள் நாடுகளின் வளர்ச்சியை பத்தாண்டுகளுக்குப் பின்னுக்குத் தள்ளுகின்றன. காசாவின் ஜிடிபி 60% குறைந்துள்ளது; குழந்தைகளின் கல்வியும் உளவியலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகள் போர் மேகங்கள் நிறைந்த பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். 2030-க்குள்இளமையைத் தொலைத்த ஒரு “இழந்த தலைமுறை” உருவாகும் அபாயம் உள்ளது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்பு இதுவரை நடைபெற்ற போர்களில் சுமார் 3 கோடிப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள், பண்பாட்டுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஹிரோசிமாவும் நாகசாகியும் உலகின் பேரழிவின் அடையாளமாக நிற்கும் போது, மீண்டும் இன்றைய யுத்தங்கள் தேவையா? ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கைகளை எதிர்த்திடுவோம்! 

இரத்தக் கறை படிந்த நிலத்தில் எந்த விதையும் முளைப்பதில்லை; எரிந்த பிணங்களின் சாம்பலில் எந்த எதிர்காலமும் உருவாவதில்லை. அமைதிப் புறாவின் சிறகுகளில் அன்பின் ஒளியைப் பரப்புவோம், போரற்ற உலகைப் படைப்பதற்கே பூமியில் விதைகளை விதைத்திடுவோம்!